search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியேட்டர்களில் முககவசம் அணிவது"

    • தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர உத்தரவு விடப்பட்டுள்ளது.
    • இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து வேகம் எடுக்க தொடங்கியது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    தற்போது தினமும் 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தடுப்பு நடவடி க்கையை தீவிரப்படுத்தி உள்ள சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்டுப்பா டுகளையும் விதிக்க தொடங்கியுள்ளனர்.

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுபோல் சோப்பு களை கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கவனமு டன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதி ப்பு பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்க ளாக தி னசரி பாதிப்பு 7 ஆக பதிவாகி வருகிறது.

    தினசரி பாதிப்பு பெ ரிய அள வில் இல்லா விட்டா லும் சுகாதா ரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை களில் ஈடு பட்டு வருகின்றனர்.

    முதற்க ட்டமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயா ளிகள், நோயாளிகளுடன் வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.

    இதனையடுத்து டாக்டர்கள், செவிலியர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.

    தற்போது அங்கு வரும் நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு சம்பந்தமாக வரும் போலீ சார் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர்.

    தொடர்ந்து தற்போது தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு விடப்பட்டு ள்ளது.

    இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக முகக வசம் அணிந்து வர வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

    இதனால் பெரும்பா லானவர்கள் முககவசம் அணிந்து படம் பார்க்க சென்றனர். முககவசம் அணியாமல் வருபவ ர்களுக்கு தியேட்டர் சார்பில் முககவசம் வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    அவ்வாறு செல்ல நேரிட்டால் கண்டிப்பாக முகவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×