search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடங்கியது"

    • ஆறுகள் குளங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
    • விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விளைநிலங்கள் சேதமடைய தொடங்கியது.

    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகள் குளங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. வடக்கு தாமரைகுளத்தில் இருந்து கக்கரம்பொத்தை செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலத்தின் குறுக்கே செல்லும் ஆற்றில் செடி, கொடிகள் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது . அதேபோல் வெள்ளம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விளைநிலங்கள் சேதமடைய தொடங்கியது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் செடி கொடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அகஸ்தீஸ்வரம் யூனியன் பொது நிதியில் இருந்து ராட்சத பொக்லைன் மற்றும் ஜே.சி.பி எந்திரம் மூலம் செடி கொடிகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு ஆகியோர் பணியை பார்வையிட்டனர்.

    • உயர் கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • நடப்பாண்டு இளநிலை படிப்புகளில் சேருவதற்கான மாணவ- மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

    சேலம்:

    தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு இளநிலை படிப்புகளில் சேருவதற்கான மாணவ- மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், சேலம் வின்சென்ட்-ல் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 22 இளநிலை பாடப்பிரிவுகளில் 1,460 முதலாம் ஆண்டு இடங்கள் உள்ளன. இதில் சேர 22,913 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இதே போல், கோரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 13 இளநிலை பாடப்பிரிவுகளில் 964 இடங்கள் உள்ளன. இதில் சேர்க்கை பெற 8,322 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

    நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.

    முதல் நாளான இன்று காலை அனைத்து பாடப்பிரி வுகளுக்கான மாற்றுத்தி றனாளிகள், விைளயாட்டு வீரர்கள், முன்னாள் ராணு வத்தி னரின் வாரிசு, தேசிய மாணவர் படையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவின ருக்கான கலந்தாய்வு நடை பெற்றது.

    இதில் பங்கேற்ப தற்காக கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் குவிந்தனர். அவர்களின் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட அசல் சான்றிதழ் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. வருகிற 3-ந்தேதி இளநிலை பட்டப்படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், புவியியல், புவியமைப்பியல், கணினி பயன்பாட்டியல் உள்ளிட்ட பாடப்பிரிவு களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

    • கடற்கரையில் மாலை நேரங்களில் இதமான குளிர் காற்று வீசுகிறது.
    • சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட் டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டியும் கன்னியாகுமரியில் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான இறுதி ஆண்டு பொதுத்தேர்வு முடிவடைத் துள்ளதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த வண்ண மாக உள்ளனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். அவர்கள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறை யில் நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாலை நேரங்களில் கடற்க ரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்க ரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ண மாக உள்ளனர். இதில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இத னால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டிஉள் ளது. இந்த சுற்றுலா தலங் களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப் பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீ சாரும் தீவிர கண் காணிப்பு பணியில்ஈடுபட்டு வந்தனர்.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.
    • முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை.

    சென்னிமலை:

    ஈரோடு வேளாண் விற்பனை குழு சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.

    ஏலத்தை விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தொடங்கி வைத்தார். ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 105 வாழைத்தா ர்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் செவ்வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 32 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 35 ரூபாய்க்கும், தேன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 10 ரூபாய்க்கும்,

    அதிகபட்ச விலையாக 16 ரூபாய்க்கும், பச்சை வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும்,

    ரஸ்தாளி வாழை குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,075 கிலோ எடையுள்ள வாழைத்தார்கள் ரூ.10 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    முதன்முதலாக தொடங்க ப்பட்ட வாழைத்தார் ஏலத்தில் விலை குறைவாக கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

    வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது குறித்து ஈரோடு வேளாண் விற்பனைக்குழு அலுவல ர்கள் கிராமங்கள் தோறும் அறிவிப்பு செய்திருந்த னர்.

    ஆனாலும் விவசாயிகள் குறைந்த அளவிலேயே வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்ததால் வியாபாரிகளும் குறைவாக வந்தனர்.

    முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை. இனிவரும் வாரங்களில் நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.

    • தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 11 குழுக்களைக் கொண்ட 33 பறக்கும் படையினர், 215 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தேர்வுப் பணியாளர்கள் என பல்வேறு நிலைகளிலும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்வுகள் அனைத்தும் காலையில் ெதாடங்கி மதியம் வரை நடை பெறுகின்றன.

    தமிழ் முதல்தாள்

    முதல் நாளான, இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. மொழிப்பாட தேர்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வையொட்டி அதிகாலை முதலே மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து மும்முரமாக பாடங்களை படித்தனர். காலை 7 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நோட்டீசு போர்டில் பெயர் மற்றும் பதிவு எண், தேர்வு அறை எண் ஆகியவை கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டது. அவற்றை பார்த்து, மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வை அறையை தெரிந்து கொண்டனர்.

    பின்னர் காலை 9 மணி அளவில் இறை வழிபாடு நடைபெற்றது. அதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று விட்டு தங்களது தேர்வு அறைக்கு புறப்பட்டு சென்றனர்.

    பறக்கும் படையினர், தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று தேர்வுகள் நடைபெறுவதை கண்காணித்தனர். தேர்வையொட்டி பள்ளி களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கலெக்டர் ஆய்வு

    சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    பொதுத்தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். தலைமை ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் அன்றாடம் நம்பிக்கை அளித்து தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் ஒரு தேர்வு முடிந்த பின், அதைப்பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்து அடுத்தடுத்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் தேர்வு நேரங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் போதிய நேரம் தூங்க வைத்து, சத்தான உணவுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத அனுப்பிட வேண்டும். பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்-அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று.

    கேரள பெண் பக்தர் கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடு வதால் இக்கோவில் பெண் களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா இன்று காலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது.5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 8.23 மணியளவில் திருக் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன் திருக்கொடி யேற்றினார்.

    இதில் தெலுங் கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பாரதிய ஜனதா மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், தேவசம் மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்சினி, குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர், பேரூராட்சி தலைவர்கள் ராணிஜெயந்தி, பாலசுப்ரமணியன், குட்டி ராஜன், செயல் அலுவலர் கலாராணி, கவுன்சிலர்கள் முருகன், கிருஷ்ணஜெயந்தி, ஜெயலட்சுமி, ராபர்ட் கிளாரன்ஸ், ஆன்றலின் சோபா, சோனி, உதயகுமார், ஒன்றிய தி.மு.க.செயலாளர் சுரேந்திரகுமார், குளச்சல் நகர செயலாளர் நாகூர் கான், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர்.

    தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு கொடி யேற்றம் நடந்தது. தலைவர் கந்தப்பன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி சிறப்பு ரை ஆற்றினார். மாதா அமிர்தானந்தமயி மடம் குமரி மாவட்ட பொறுப்பா ளர் நீலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் சுவாமி கருணானந்தஜி மகாராஜ், குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசியுரை ஆற்றினர்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

    எம்.பி., கேரள முன்னாள் மந்திரி சிவகுமார், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் டாக்டர் தெய்வபிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    குமரி மாவட்ட திருக் கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், தேவசம் கண்காணிப்பளர் ஆனந்த், கோயில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார், மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சிவகுமார், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நண்பகல் 12 மணியளவில் கருமங்கூடல் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் இல்லத்தி லிருந்து அம்மனுக்கு சீர் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.தொடர்ந்து அன்னை பகவதி அன்னதான குழு சார்பில் 30 வது ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை மற்றும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை யும் நடக்கிறது. இரவு 8 மணி முதல் பரத நாட்டியம் நிகழ்ச்சி 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது

    • பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் மார்ச் 13, 14ல், அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.
    • நாமக்கல் மாவட்டத்தில், தொடங்கிய செய்முறை தேர்வு,இன்று, நாளை, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். செய்முறை தேர்வுக்காக 147 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் மார்ச் 13, 14ல், அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்த நிலையில், முதற்கட்டமாக, பிராக்டிக்கல் தேர்வு, மாநிலம் முழுவதும் துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும், 198 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கின்றனர். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில், 17 ஆயிரத்து 810 பேர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19 ஆயிரத்து 877 பேர் என, மொத்தம், 37 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள், மேல்நிலைக்கல்வி அரசு பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில், தொடங்கிய செய்முறை தேர்வு,இன்று, நாளை, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். செய்முறை தேர்வுக்காக 147 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், முதன்மை கண்காணிப்பாளர் தலைமையில், புற தேர்வு, அக தேர்வு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டு, செய்முறை தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்களை அளிப்பார்கள். இந்த மதிப்பெண்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும். பிராக்டிக்கல் தேர்வுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.
    • கலெக்டர் கிருஷ்ண னுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    அரசு தொடக்க பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவி–களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

    இத்திட்டத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரையில் அண்ணா பிறந்தநாளை யொட்டி தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 26 பள்ளிகளை சேர்ந்த 2,523 மாணவ, மாணவிகள், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளை சேர்ந்த 768 மாணவ, மாணவிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 3,291 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு சுடச்சுட கோதுமை ரவா, ரவா கேசரியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்தும் சாப்பிட்டார்.

    இதில் மேயர் நாகரத்தினம், கணேச மூர்த்தி எம்.பி., துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    இதேபோல் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திகனாரை அரசு தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்) காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவர் களுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    திங்கட்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய் க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சோள காய்கறி ரவா கேசரி வழங்கப்படுகிறது. 

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகன ங்கள் முகாமிற்கு பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராள மானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.

    இந்த மாதத்துடன் இலவசமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி நிறை வடைகிறது. எனவே இன்று நடந்த சிறப்பு முகாமில் பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.

    • 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
    • இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர். 

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 25, 26-ந் தேதி வருகிறார்.
    • இதற்காக சரளையில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஈரோடு:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 25, 26-ந் தேதி வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    வருகிற 25-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டிக்கு வருகிறார்.

    அங்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து ஈரோடு காலிங்கராயன் இல்லத்துக்கு வந்து இரவு ஓய்வு எடுக்கிறார்.

    மறுநாள் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை சரளை அருகே நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் சோலார் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்ட கனிமார்க்கெட் ஜவுளி சந்தை வளாகம், காளை மாட்டு சிலை அருகே மாநகராட்சியின் வணிக வளாகம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார்.

    விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதற்காக சரளையில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு விழா மேடை பயனாளிகள் அமரும் இடம் பொதுமக்கள் கட்சியினர் பங்கேற்கும் வளாகம், வாகன நிறுத்தம், முக்கிய பிரமுகர்கள் வாகன நிறுத்தம், சுகாதார வளாகங்கள் போன்றவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, குறிஞ்சி. சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • இந்த நிலையில் மேட்டூர் அைணயில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் போக்குவரத்து தொடங்கியது.

    சித்தோடு:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் அம்மா பேட்டை, பவானி, ஈரோடு காவிரி ஆற்றில் இரு கரை களையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையொட்டி பவானி பூ மார்க்கெட் பகுதியில் இருந்து குமார பாளையம் செல்லும் பழைய பாலம் பகுதியில் பாலத்தை தொட்டப்படி காவிரி ஆற்றில் தண்ணீர் சென்றது.

    இதனால் பவானி- குமார பாளையம் பழைய பாலத்தில் தடுப்புகள் அமைக்க ப்பட்டு போக்கு வரத்து தடை செய்யப் பட்டு இருந்தது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் மேட்டூர் அைணயில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் பவானி பழைய பாலம் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்தது.

    இந்த நிலையில் பவானி- குமாரபாளையம் பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தில் போடப்பட்ட தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த வழியாக வாகன போக்குவரத்து தொடங்கியது. இதனால் அந்த பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது.

    ×