search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banana auction"

    • கொப்பரை தேங்காய் ஏலம், வியாழக்கிழமை தோறும் பாக்கு மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் விற்பனை செய்கின்றனர்.

    உடுமலை : 

    ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை இ-நாம் மூலம் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம், வியாழக்கிழமை தோறும் பாக்கு மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஆயிரத்து 600 ஏக்கரில் நெல், 23 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை, 2 ஆயிரம் ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் விளையும் வாழைத்தார்களை வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் விற்பனை செய்கின்றனர்.

    எனவே ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைதார் ஏலம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் வாழை விவசாயிகள் பயன் பெறும் வகையில் வியாழக்கிழமை தோறும் வாழைத்தார் ஏலம் நடைபெற உள்ளது.

    இந்த ஏலம், தேசிய வேளாண் சந்தை இ- நாம் மூலம் நடைபெறும். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    இதனால் விவசாயிகள் கொண்டு வரும் வாழைத்தார்களுக்கு சரியான விலை, சரியான எடை, நேரடி வங்கி பணம் பரிமாற்றம் உடனடியாக கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பயன் பெறலாம்.இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.
    • முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை.

    சென்னிமலை:

    ஈரோடு வேளாண் விற்பனை குழு சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.

    ஏலத்தை விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தொடங்கி வைத்தார். ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 105 வாழைத்தா ர்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் செவ்வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 32 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 35 ரூபாய்க்கும், தேன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 10 ரூபாய்க்கும்,

    அதிகபட்ச விலையாக 16 ரூபாய்க்கும், பச்சை வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும்,

    ரஸ்தாளி வாழை குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,075 கிலோ எடையுள்ள வாழைத்தார்கள் ரூ.10 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    முதன்முதலாக தொடங்க ப்பட்ட வாழைத்தார் ஏலத்தில் விலை குறைவாக கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

    வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது குறித்து ஈரோடு வேளாண் விற்பனைக்குழு அலுவல ர்கள் கிராமங்கள் தோறும் அறிவிப்பு செய்திருந்த னர்.

    ஆனாலும் விவசாயிகள் குறைந்த அளவிலேயே வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்ததால் வியாபாரிகளும் குறைவாக வந்தனர்.

    முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை. இனிவரும் வாரங்களில் நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய் ரூ.8 முதல் ரூ.13.70 வரை விலை போனது. மொத்தம் 2,160 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது.

    இதில் கதலி கிலோ ரூ.42-க்கும், நேந்திரன் கிலோ ரூ.44-க்கும் ஏலம் போனது.

    மொத்தம் 3090 தார் ஏலத்திற்கு வந்திருந்தது. இதில் பூவன்ஓருத்தார் 830-க்கும், பச்சை நாடன்ஒருத்தார்ரூ.500-க்கும், செவ்வாழை ஒருத்தார் 760-க்கும், தேன் வாழை ஒரு தார் 800-க்கும், ரஸ்தாலி ஒருத்தார் 640க்கும், மொந்தன் ஒரு தார் 540-க்கும், ரொபஸ்டா ஒருத்தார்ரூ.500க்கும்விலை போனது.

    மொத்தம் ரூ.8 லட்சத்து 79 ஆயிரத்துக்கு வாழைகள் ஏலம் போனது.

    தேங்காய் ரூ.8 முதல் ரூ.13.70 வரை விலை போனது. மொத்தம் 2,160 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டது. அதன் மதிப்பு ரூ.23 ஆயிரத்து 700 ஆகும்.

    ×