search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "started in"

    • ஈரோடு மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.
    • கலெக்டர் கிருஷ்ண னுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    அரசு தொடக்க பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவி–களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

    இத்திட்டத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரையில் அண்ணா பிறந்தநாளை யொட்டி தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 26 பள்ளிகளை சேர்ந்த 2,523 மாணவ, மாணவிகள், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளை சேர்ந்த 768 மாணவ, மாணவிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 3,291 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு சுடச்சுட கோதுமை ரவா, ரவா கேசரியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்தும் சாப்பிட்டார்.

    இதில் மேயர் நாகரத்தினம், கணேச மூர்த்தி எம்.பி., துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    இதேபோல் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திகனாரை அரசு தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்) காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவர் களுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    திங்கட்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய் க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சோள காய்கறி ரவா கேசரி வழங்கப்படுகிறது. 

    • நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக எட்டு கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகு போக்கு வரத்து தொடங்கப்பட்டு ள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் படகு போக்கு வரத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.

    அம்மாபேட்டை:

    மேட்டூர் அணைக்கு கடந்த 50 நாட்களுக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.

    இதனால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்க ப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    வெள்ள அபாயம் நிலவியதால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

    தற்போது ஆற்றில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் இன்று முதல் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

    கடந்த 50 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக எட்டு கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகு போக்கு வரத்து தொடங்கப்பட்டு ள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் படகு போக்கு வரத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.

    ×