search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC"

    • நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
    • 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.

    அதுமுதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார். 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.

    தற்போது 61 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.

    • விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.
    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டக்கெட் 12 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.

    இந்த தரவரிசையில் வில்லியம்சன் முதல் இடத்தில் (818) யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார். 2 முதல் 10 இடங்கள் முறையே டேரி மிட்செல், பாபர் அசாம், ஜோ ரூட், கவாஜா, விராட் கோலி, கருரத்ணே, ஹரி புரூக், மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் உள்ளனர்.

    • முகமது நபி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த வங்காளதேச வீரரின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஷகிப் அல் ஹசனை பின்னுக்கு தள்ளி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா வருகிற 11-ந் தேதி மோதுகிறது.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது. இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். களமிறங்கிய 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் 4, ஹர்ஜாஸ் சிங் 5, ரியான் ஹிக்ஸ் 0 ரன்களிலும் நடையை கட்டினார்.

    இதனால் 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. இதனையடுத்து ஆலிவர் பீக்- ஹாரி டிக்சன் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய ஹாரி டிக்சன் அரை சதம் விளாசி அவுட் ஆனார். ஆலிவர் பீக் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். இறுதியில் கைவசம் 1 விக்கெட் மீதி இருந்தது. 16 ரன்கள் தேவைப்பட்டது. உச்சக்கட்ட பரப்பரப்பில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிபோட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

    • பாகிஸ்தானின் அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஆகியோர் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது. இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் பும்ரா.
    • நம்பர் ஒன் பிடித்த நிலையில் அவரின் பதிவு, கிரிக்கெட் விமர்சகளிடம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் என மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    இந்த சிறப்பான பந்து வீச்சு மூலம் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். 30 வயதான அவர் 4-வது இடத்தில் இருந்து முன்னேறி 'நம்பர் 1' இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தார். அதாவது இந்திய வேகப்பந்து வீரர்களில் இதுவரை யாரும் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது கிடையாது.

    1979-80-ம் ஆண்டுகளில் கபில்தேவ் தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. டெஸ்ட் தரவரிசையில் சுழற்பந்து வீரர்களான ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன்சிங் பெடி ஆகியோர் முதல் இடத்தில் இருந்தனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தை பிடித்தது குறித்து பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு உள்ளார்.

    அதில் "நமக்கு ஆதரவு கொடுக்க ஒருவர் இருவரை தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ஏதேனும் சாதனை செய்தால் வாழ்த்து சொல்ல ஆயிரக்கணக்கில் வருவார் என்று பதிவிட்டு இருக்கிறார்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை மறைமுகமாக தாக்கி இந்த மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி கிடைக்கும் என்று பும்ரா எதிர்பார்த்து இருந்தார். ஆனால் குஜராத் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டிக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பவுலர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததற்காக அவரை வாழ்த்தியும், புகழ்ந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பும்ரா இந்த மீம் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது.

    மேலும் இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்களை குறி வைத்தும் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறாரா? என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

    • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

    2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.

    ரபடா 2-வது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். கம்மின்ஸ் 4-வது இடத்தில் உள்ளார். ஹேசில்வுட ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது.
    • லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களை குவித்தார்.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களையும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களையும் சேர்த்தனர்.

    இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும், நர்மன் திவாரி மற்றும் பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

    இந்திய அணியின் துவக்க வீரர்களான ஆதார்ஷ் சிங் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 12 ரன்களிலும், அடுத்து வந்த முஷீர் கான் 4 ரன்களிலும், பிரியன்ஷூ மொலியா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி தடுமாறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் உதய் சஹாரன் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவர் 69 ரன்களை குவித்த நிலையில், இவருடன் ஆடிய சச்சின் தாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ் லிம்பானி 13 ரன்களுடனும், நமன் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உதய் சஹாரன் 81 ரன்களையும், சச்சின் தாஸ் 96 ரன்களையும் விளாசினார்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி U19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதி போட்டி பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்த போட்டியின் போது பும்ரா விதியை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 81-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது 1 ரன் எடுப்பதற்கு ஓடி வந்த ஆலி போப்பை வேண்டுமென்றே பும்ரா தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு ஐசிசி கணடனம் தெரிவித்துள்ளது.

    இந்த செயல் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.12ஐ மீறியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால் அவரது நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளி சேர்க்கப்பட்டது. அடுத்த 1 ஆண்டிற்குள் மேலும் 3 புள்ளிகளை பெற்றால் 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

    கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, பும்ரா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பும்ராவின் குற்றத்துக்கு முறையான விசாரணை தேவையில்லை, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும், பும்ரா மீது விதிக்கப்பட்ட கண்டனத்தை ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் ஏற்றுக்கொண்டார்.

    • இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.
    • இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்து உத்தரவிட்டது.

    இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தடை செய்யப்பட்டது.

    மேலும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.

    இதனால், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

    இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், அதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்த பின் அதன் மீதான தடை நீக்கப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

    • சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்தனர்.
    • ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

    அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

    • 2023-ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார்.
    • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    2023 காலண்டர் வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அசத்திய 11 பேர் கொண்ட கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோகித் சர்மாவை ஐசிசி அறிவித்துள்ளது.

    கடந்த வருடம் 1255 ரன்களை 52 என்ற சராசரியில் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரோகித்தை தங்களுடைய அணியின் கேப்டன் மற்றும் முதல் துவக்க வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.

    ரோகித்தின் தொடக்க ஜோடியாக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வாகியுள்ளார். 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், 4-வது இடத்தில் விராட் கோலி உள்ளார். உலகக் கோப்பையில் மட்டும் 765 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது வென்ற அவர் சச்சினை முந்தி 50 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்ததை மறக்க முடியாது என ஐசிசி கூறியுள்ளது.

    5-வது இடத்தில் நியூசிலாந்தின் டாரில் மிட்செல் மற்றும் 6-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசனும் (விக்கெட் கீப்பர்) 7-வது இடத்தில் அதே அணியின் ஆல் ரவுண்டர் மார்கோ யான்சென் இடம் பிடித்துள்ளனர். 8-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    9, 10, 11-வது இடங்கள் முறையே இந்தியாவின் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி தேர்வாகியுள்ளார்.

    ஐசிசி ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டார்ல் மிட்சேல், ஹென்றிச் க்ளாஸென், மார்கோ யான்சென், ஆடம் ஜாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி

    ×