search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor banwarilal purohit"

    மீலாதுன் நபி விழாவை கொண்டாடும் மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை கவர்னர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். #MiladUnNabi
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீலாதுன் நபி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இறை தூதர் முகமது நபியின் பிறந்தநாள் மீலாதுன் நபி விழாவாக கொண்டாடப்படுகிறது. இறைதூதர் மனிதர்களின் மிக உயரிய பண்புகளான ஒழுக்கம், அன்பு, கருணை மற்றும் தர்ம சிந்தனையுடன் திகழ்ந்தார். மீலாதுன் நபி விழாவை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறை தூதரின் சிறந்த கொள்கைகளான அன்பு மற்றும் சகிப்பு தன்மையை வியாபித்து நமது வாழ்வை சமூகத்தில் மேம்படுத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MiladUnNabi #TNGovernor #BanwarilalPurohit
    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அதில், தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அதிமுக  பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

    ஆனால், அவர்கள் 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார். பின்னர் மீண்டும் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆய்வு செய்த கவர்னர், 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து மூவரும் நேற்று வேலூர் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.


    இந்நிலையில் 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது குறித்து ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 13 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும்படி கேட்ட தமிழக அரசின் சிபாரிசை மத்திய உள்துறை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்ப மறுத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. #TNGovt #CentralGovt RajivGandhi
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறார்கள்.

    நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக அரசும் அவர்களை விடுவிப்பதற்கு சம்மதம் தெரிவித்து மத்திய அரசிடம் இது சம்பந்தமாக சிபாரிசு செய்தது.

    மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கவர்னரே இந்த வி‌ஷயத்தில் முடிவு எடுத்து கொள்ளலாம் என கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையும் அவர்களை விடுவிக்கலாம் என கவர்னருக்கு சிபாரிசு செய்துள்ளது. இது, கவர்னரின் பரிசீலனையில் உள்ளது.

    ஏற்கனவே கொலையாளிகள் 7 பேருக்கும் மன்னிப்பு அளித்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது.

    இந்த கடிதம் 2.3.2016 அன்று மத்திய உள்துறை மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த கடிதம் தொடர்பாக மத்திய உள்துறை கடந்த ஏப்ரல் 18-ந் தேதி ஒரு தகவலை தமிழக அரசுக்கு அனுப்பியது.

    அதில், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கொலையாளிகளை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சம்பந்தப்பட்ட கொலையாளிகள் மோசமான ஒரு கொலை குற்றத்தை செய்திருக்கிறார்கள். அவர்கள் முன்னாள் பிரதமருடன் சேர்த்து 15 பேரை கொலை செய்துள்ளனர்.

    அதில் பலர் போலீஸ் அதிகாரிகள். கொலையாளிகளில் 4 பேர் வெளிநாட்டினர். அவர்கள் 3 இந்தியர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருக்கிறார்கள். எனவே, அவர்களை விடுவிக்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதன் பிறகு தமிழக அரசு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் என்ன ஆனது? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.


    இந்த நிலையில் கொலையாளிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜனாதிபதி மாளிகைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கடிதம் எழுதி, தமிழக அரசின் சிபாரிசு கடிதம் என்ன ஆனது? என்று கேட்டு இருந்தார்.

    புழல் சிறையில் உள்ள அவருக்கு தற்போது தகவல் அறியும் ஆணையத்தில் இருந்து பதில் கடிதம் வந்துள்ளது.

    அதில், தமிழக அரசு சிபாரிசு செய்த கடிதம் எதுவும் இதுவரை எங்களுக்கு (ஜனாதிபதி அலுவலகம்) வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    அதாவது தமிழக அரசு சிபாரிசு கடிதத்தை மத்திய உள்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்ப மறுத்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

    மத்திய உள்துறையின் உயர்மட்ட அதிகாரிகளே இதுபற்றி முடிவு எடுத்து கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டதாக உள்துறை வட்டாரங்கள தெரிவித்தன.

    இது சம்பந்தமாக பேரறிவாளன் வக்கீல் சிவக்குமார் கூறும்போது, தமிழக அரசின் சிபாரிசு கடிதம் எங்களுக்கு வரவில்லை என்று ஜனாதிபதியின் மாளிகையின் செயலகம் தெரிவித்துள்ளது.

    ஜனாதிபதிக்கு அனுப்பாமலே வேண்டும் என்றே முடக்கி இருக்கிறார்கள். இந்த வி‌ஷயத்தை பொறுத்த வரை சட்ட ரீதியான நடவடிக்கைகளை விட அரசியல் ரீதியான நடவடிக்கைகளே உள்ளது.

    மத்திய உள்துறையின் செயல்பாடுகள் தவறானவை. எனவே, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். #TNGovt #CentralGovt RajivGandhi
    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய 3 அ.தி.மு.க.வினரை விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. #Dharmapuribusburningcase
    சென்னை:

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கும் ஒன்றாகும்.

    கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி அந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி புறநகரான இலக்கியம் பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பஸ் மீது அ.தி.மு.க.வினர் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள். 16 மாணவிகள் காயம் அடைந்தனர்.

    தமிழக மக்களை பதை பதைப்புக்குள்ளாக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், தர்மபுரி நகர முன்னாள் செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 24 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    தூக்கு தண்டனையை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, மூன்று பேரின் தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதன் பேரில் 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய தமிழக அரசு சுமார் 1,600 கைதிகளை விடுதலை செய்தது. அப்போது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.


    ஆனால் அவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் கோரிய அரசின் ஆவணத்தை கவர்னர் பன்வாரிலால் ஏற்க மறுத்து விட்டார். 3 பேரை விடுவிப்பதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்திய அந்த ஆவணத்தை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.

    இந்த நிலையில் அந்த 3 பேரையும் விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பஸ் எரிப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல. உணர்ச்சி வேகத்தில் நடந்து விட்ட ஒன்று” என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

    தமிழக அரசின் இந்த புதிய விளக்கத்தை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை. #Dharmapuribusburningcase
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலாலுக்கு கடிதம் எழுதுவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. #TNGovernor #Banwarilalpurohit
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவு எடுக்கலாம் என்றும் இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பு வெளியானதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை உடனடியாக கூடி 7 பேரையும் விடுதலை செய்யும் பரிந்துரை தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது.

    ஆனால் கவர்னர் பன்வரிலால் இதில் இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் 7 பேர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கவர்னர் இதில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் தமிழக அரசும் கவர்னர் பன்வாரிலாலுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதுவது பற்றி ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கவர்னரின் செயலாளர் ராஜகோபாலுக்கு கடிதம் எழுத உள்ளார்.

    அதில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்படுகிறது. தற்போது விடுமுறை தினம் என்பதால் தீபாவளிக்குப் பின்பு இந்த கடிதம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் கவர்னர் முடிவு எடுக்கவில்லை, தீர்ப்பு வெளியான பின்பே முடிவு எடுப்பார். இதனால்தான் அமைச்சரவை பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernor #Banwarilalpurohit
    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் மூவரையும் விடுவிப்பதற்காக தமிழக அரசு தயாரித்து அனுப்பிய கோப்புகளை கவர்னர் பன்வாரிலால் திருப்பி அனுப்பியுள்ளார். #DharmapuriBusFire
    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிரிமினல் வழக்கு ஒன்றில் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    இதனால் ஆவேசமான அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    தர்மபுரியிலும் அ.தி.மு.க.வினர் வாகனங்களுக்கு தீ வைப்பில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கோவை விவசாய பல்கலைக் கழக பஸ்சுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

    அந்த பஸ்சில் 44 மாணவிகள், 2 ஆசிரியைகள் இருந்தனர். பஸ்சில் தீ வைக்கப்பட்டதும் மாணவிகள் அலறியடித்தப்படி கீழே இறங்கினார்கள். ஆனால் நெரிசலில் சிக்கிய 3 மாணவிகள் பஸ்சுக்குள் சிக்கிக் கொண்டனர்.

    கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற அந்த மூன்று மாணவிகளும் பஸ்சோடு தீயில் கருகி, துடிக்க, துடிக்க உயிரிழந்தனர். மனிதாபிமானமே இல்லாமல் நடத்தப்பட்ட இந்த கொடூர செயலால் மூன்று அப்பாவி இளம்பெண்கள் கொல்லப்பட்டது தமிழ்நாட்டையே உலுக்கியது.

    இந்த பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பாக சில அ.தி.மு.க. பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்தது. இறுதியில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.


    அவர்கள் மூன்று பேருக்கும் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சென்னை ஐகோர்ட்டும் அந்த தண்டனையை உறுதி செய்தது.

    இதை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். சுப்ரீம்கோர்ட்டு அந்த வழக்கை விசாரித்து, நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பனின் தூக்கு தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

    இதையடுத்து மூன்று பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அந்த கைதிகள் பற்றிய விபரம் மற்றும் அவர்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பன போன்ற தகவல்களை திரட்டி கோப்புகளாக தயாரித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது.

    10 ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் இருப்பவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள் என்ற அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை விடுதலை செய்ய கவர்னரிடம் தமிழக அரசு பரிந்துரைத்தது. அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவின்படி கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் கவர்னர் அனுமதி அளிக்க வேண்டியது அவசியமாகும். எனவேதான் கவர்னரிடம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

    தமிழக அரசு அனுப்பிய கைதிகள் விடுதலை பரிந்துரை பட்டியலில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்ற நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இந்த 3 பேரையும் விடுதலை செய்யலாமா என்று சட்ட நிபுணர்களிடம் கவர்னர் கருத்து கேட்டார்.

    மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ ஆவணங்களையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாங்கிப் பார்த்தார். பிறகு 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார்.

    நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் மூவரையும் விடுவிப்பதற்காக தமிழக அரசு தயாரித்து அனுப்பிய கோப்புகளையும் தமிழக அரசுக்கே கவர்னர் பன்வாரிலால் திருப்பி அனுப்பியுள்ளார். அதில் அவர் ஒரு குறிப்பும் எழுதி உள்ளார்.

    “தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுவிக்க கோரும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்று கவர்னர் அந்த குறிப்பில் எழுதி உள்ளார். இதனால் 3 பேரை முன்னதாக விடுதலை செய்ய தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது.

    மற்றபடி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று சுமார் 500 கைதிகளை விடுவிக்க கவர்னர் ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #DharmapuriBusFire #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernor #BanwarilalPurohit #MLAsDisqualificationCase
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர்களை சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்திருந்தார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாக கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சியில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    அதன்பிறகு நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கவர்னர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லியில் 2 நாட்கள் இருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களிடனும் விவாதிப்பார் என தெரிகிறது.

    இதனால் தமிழக அரசியல் நிலவரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. #TNGovernor #BanwarilalPurohit  #MLAsDisqualificationCase
    அரசு போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு ஊழல் தான் காரணம் என்று கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதை வரவேற்கிறோம்.

    நெடுஞ்சாலை துறையில் கடந்த 7 ஆண்டுகாலமாக ஊழல் நடைபெற்று உள்ளது என்று முன்னாள் கவர்னர் ரோசைய்யா மற்றும் தற்போதைய கவர்னர்பன்வாரிலால் புரோகித் ஆகியோரிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.

    இந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானாக பதவி விலக வேண்டும் அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    பதவியில் உள்ள ஒரு முதல்-அமைச்சரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்.

    நெடுஞ்சாலை துறை மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஊழல் குவிந்து உள்ளது. ஊழலில் தமிழகம் 3- வது இடத்தில் உள்ளது என ஆய்வு கூறுகிறது.


    கவர்னர் உயர்கல்வி துறையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது என்று கூறி விட்டு மறுநாள் மாற்றி கொண்டார். ஒரு கவர்னர் ஊழல் நடந்து உள்ளது என்று கூறுவது தவறு. அவர் தான் இதனை விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்.

    ரபேல் போர் விமானம் சம்பந்தமாக மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம் ரூ. 550 கோடி. இந்த ஆட்சியில் ரூ. 1,600 கோடிக்கு பேசி உள்ளார்கள்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு தேவையான ஊதியம் வழங்குங்கள்.

    தனியார் போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஊழல்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையில் 2 மாதம் ஆகியும் ஏன் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் ஊழல் நடப்பது பா.ஜனதா அரசுக்கு தெரியாதா? ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஊழலை ஆதரிப்பது தானே அர்த்தம்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கார் மூலமாக சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami #Banwarilalpurohit
    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக தூத்துக்குடி வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் பழைய பஸ் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். #TNGovernor #Banwarilalpurohit
    தூத்துக்குடி:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் சென்று மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட திட்ட‌ப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    குறிப்பாக கவர்னர் ஆய்வு செய்வதை தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. கவர்னர் வரும்பாதையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் கவர்னர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தாமிரபரணி புஷ்கர விழாவை தொடங்கி வைப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் இரவு ரெயில் மூலம் தென்காசிக்கு வந்தார். பின்பு அவர் நேற்று பாபநாசம், நெல்லையில் நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அவர் நேற்றிரவு நெல்லை வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இதை தொடர்ந்து இன்று காலை அவர் கார் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார். தொடர்ந்து அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்.

    பின்னர் தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகள் அகற்றுவதற்காக 18 வாகனங்களை வழங்கினார். பின்பு அவர் அங்குள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை பார்வையிட்டார்.

    பின்பு மாணவ- மாணவிகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாக பொதுமக்களுக்கு துணிப்பைகளை அவர் வழங்கினார். இதன்பிறகு கவர்னர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு பஸ் நிலையத்தை சுத்தம் செய்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிராம்பா, கமிசனர் ஆல்பின் ஜான் வர்க்கீஸ் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மதியம் அவர் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மாலையில் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.  #TNGovernor #Banwarilalpurohit
    சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகளுடன் தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், படித்துறைகளில் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடினர். #Pushkaram #ThamirabaraniMahaPushkaram
    நெல்லை:

    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    144 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. மகா புஷ்கர விழா இன்று(11-ந் தேதி) முதல் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக கடந்த ஒரு ஆண்டாகவே பல்வேறு ஆன்மீக அமைப்புகள் ஏற்பாடுகளை செய்து வந்தன.

    தாமிரபரணி நதி தொடங்கும் பொதிகை மலையின் பூங்குளத்தில் இருந்து இறுதியாக கடலில் சென்று கலக்கும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகளில் புஷ்கர விழா கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்த புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கர விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு ஆரத்தி, மாநாடுகள், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம், பொங்கலிடுதல், சிறப்பு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென்திருப்புவனம், சேரன் மகாதேவி, மேலச்செவல், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், வண்ணார் பேட்டை, எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயுதீர்த்தம், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரபரணிக்கு மஹா ஆரத்தி வழிபாடுகள் நடக்கின்றன.

    அகில பாரதீய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசம் படித்துறையில் இன்று அதிகாலை தாமிரபரணி புஷ்கர விழா தொடங்கப்பட்டது. இதையொட்டி சங்கராசாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், துறவியர்கள் கலந்து கொண்டு 108 புண்ணிய நதி கலச தீர்த்தங்களை தாமிரபரணி ஆற்றில் ஊற்றினர்.


    இதைத்தொடர்ந்து சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தாமிரபரணி நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பாபநாசம், அம்பை, சேரன்மகாதேவி, சுத்தமல்லி, குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, தைப்பூச மண்டபம், முறப்பநாடு, ஸ்ரீவை குண்டம், ஏரல் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.

    பாபநாசத்தில் துறவியர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தாமிரபரணி மகா புஷ்கர விழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து துறவியர்கள் மாநாட்டையும் கவர்னர் தொடங்கி வைத்தார்.

    பாபநாசம், வி.கே.புரம் சித்தர்கள் கோட்டம் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக 28-வது தீர்த்த கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் இன்று புஷ்கர விழா தொடங்கியது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 54 ஓமகுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஓமம் வளர்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். இன்று காலை அங்கு தசமகாவித்யா ஓமம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

    மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். கோசாலையில் வழிபாடு நடத்தும் அவர் தொடர்ந்து அங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் காசியில் கங்கைக்கு நடைபெறுவது போன்று நடத்தப்படும் மகா ஆரத்தியை தொடங்கி வைக்கிறார்.

    காஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்ய பரம்பராகத மூலாம் நாயசர் வஞ்ய பீடம் சார்பாக புடார்ச்சன சேத்திரம் எனப்படும் திருப்புடைமருதூரில் தாமிரபரணி புஷ்கர விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இன்று மாலை நடைபெறும் விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.

    நெல்லை தைப்பூச படித்துறையில் இன்று காலை கணபதி ஹோமத்துடன் தாமிரபரணி மகா புஷ்கரவிழா தொடங்கியது. தொடர்ந்து அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதில் சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள், ஆதினங்கள், மடாதிபதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இங்கும் மாலை 6 மணிக்கு தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெறுகிறது.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆற்றில் ஆழமான பகுதிகளில் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆற்றில் பக்தர்கள் நீராடும் போது பாதுகாப்புக்காக படகுகளுடன் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பாபநாசம், வீரவநல்லூர், அத்தாள நல்லூர், திருப்புடைமருதூர் மற்றும் முறப்பநாடு, ஏரல், முக்காணி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ரெயில் மூலம் வருபவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக நெல்லை ரெயில் நிலையத்தில தமிழக சுற்றுலாதுறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரி நேரடி மேற்பார்வையில் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டுகள் நெல்லை அருண்சக்திகுமார், தூத்துக்குடி முரளி ரம்பா, நெல்லை மாநகர கமி‌ஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் ஆகியோர் ஏற்பாட்டில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவர்கள் தாமிரபரணி நதியில் உள்ள படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் 13 நாட்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    நெல்லையில் விழா நடைபெறும் இடங்களில் மாநகராட்சி சார்பாக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. #Pushkaram #ThamirabaraniMahaPushkaram 
    திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து புனித நீராடினார். #ThamirabaraniMahaPushkaram #TNGovernor #BanwarilalPurohit
    நெல்லை:

    தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 8.50 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தென்காசிக்கு வந்தார். அவருக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. கபில்குமார்சரத்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் தென்காசி டி.எஸ்.பி. மணிகண்டன், ஆர்.டி.ஓ.ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டு கவர்னரை வரவேற்றனர். இதை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றாலத்துக்கு சென்றார்.

    அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். இதன்பிறகு அவர் பாபநாசம் புறப்பட்டு சென்றார். பாபநாசம் வந்த கவர்னருக்கு துறவியர்கள், பண்டிதர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திரகீல தீர்த்தப்படித்துறையில் புனித நீராடினார். பின்னர் அவர் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக நடைபெற்ற துறவியர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் புஷ்கர விழாவை தொடங்கிவைத்து விழா மலரை வெளியிட்டு அவர் பேசினார்.

    பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திரகீல தீர்த்தப்படித்துறையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புனித நீராடிய போது எடுத்தபடம்.

    இதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நெல்லை வந்தார். நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார். மாலை 5.15 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு செல்கிறார்.

    அங்கு கோசாலையை பார்வையிட்டு அங்குள்ள யாகசாலையில் நடைபெறும் சிறப்பு யாகத்தில் கலந்துகொள்கிறார். பின்னர் அவர் அங்குள்ள ஜடாயுதீர்த்த படித்துறையில் தாமிரபரணி மகா ஆரத்தியை தொடங்கி வைக்கிறார். பின்பு அவர் அங்கிருந்து புறப்பட்டு திருப்புடைமருதூர் செல்கிறார்.

    அங்கு நடைபெறும் புஷ்கர விழாவில் அவர் கலந்துகொள்கிறார். பின்னர் அவர் நெல்லை வந்து வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை காலை அவர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ThamirabaraniMahaPushkaram #TNGovernor #BanwarilalPurohit
    துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
    சென்னை:

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது, துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டதாகவும் தெரிவித்தார். தான் பதவியேற்றபிறகு தகுதியின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆளுநரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.

    இந்நிலையில் துணை வேந்தர் நியமன முறைகேடுகள் தொடர்பாக ஆளுநர் வெளியிட்ட கருத்துக்கு ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-


    துணை வேந்தர் நியமனத்தில் யார் மீதும் குற்றம் சுமத்தியோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தோ ஆளுநர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. கோடிக்கணக்கான பணத்தின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கூறிய தகவலை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.

    2018-க்கு முன் ஒரு துணைவேந்தர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தால் ஒரு துணைவேந்தர் பதவி நீக்கப்பட்டார். 2 துணைவேந்தர்களுக்கு எதிராக லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடைபெற்றுள்ளன.

    2018ல் இதுவரை 9 துணைவேந்தர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
    ×