search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government schools"

    • சென்னை டிபிஐ., வளாகத்தில் கடந்த மே 22 -ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினோம்.
    • ஊதியம் வழங்க முடியாது என்று பள்ளி கல்வி திட்ட இயக்குநா் ஜூன் 9-ந் தேதி தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடா்பாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களின் பணி நிரந்தரம் மற்றும் மே மாத ஊதியம் வழங்கக்கோரி, சென்னை டிபிஐ., வளாகத்தில் கடந்த மே 22 -ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினோம். போராட்டம் மே 24 -ந் தேதி வரை நீடித்த நிலையில், பள்ளிகல்வித்துறை இயக்குநா், சங்க நிா்வாகிகளை அழைத்துப்பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

    அப்போது 2022 - 23 ம் ஆண்டுக்கான மே மாத ஊதியம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க முடியாது என்று பள்ளி கல்வி திட்ட இயக்குநா் ஜூன் 9 -ந் தேதி தெரிவித்துள்ளாா்.

    எனவே போராட்டத்தின் போது அளித்த உத்தரவாதத்தின்படி மே மாதத்துக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் பகுதிநேர ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • பல்லடம் வட்டாரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள 85 பள்ளிகளில், 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல், உள்ளிட்ட 5 புத்தகங்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்டவைகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.அரசு பள்ளி மாணவர்கள், ஜூன் 12-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது முதல் நாளிலேயே அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • நிலையான ஆசிரியர்களை அமர்த்தாமல் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த எந்த நியாயமும் இல்லை.
    • தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு பள்ளியில் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்துவது கல்வி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமூக நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. நிலையான ஆசிரியர்களை அமர்த்தும்போது, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும். ஆனால், இடைக்கால ஆசிரியர்கள் பணியமர்த்தலில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. நிலையான ஆசிரியர்களை அமர்த்தாமல் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த எந்த நியாயமும் இல்லை.

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நிலையான ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்? தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசு பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எனது தொகுதி மாண வர்களின் எதிர்காலத்தை பனையம் வைக்க ஒருபொழுதும் நான் அனுமதிக்க மாட்டேன்.
    • ஆசிரியருக்கும் இது புதிது என்பதால் அவர்களையும் தயார் செய்ய வேண்டும். பாட புத்தகம் கிடைப்பதிலும் பல இடர்பாடுகள் உள்ளதாக அறிகின்றேன்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கட்டாயமாக சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்று வதற்கான நடவடிக்கைகளை புதுவை கல்வித்துறை எடுத்து வருகின்றது.

    மத்திய அரசு அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட கல்வி முறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்துள்ளது.

    சி.பி.எஸ்.இ கல்விக் கூடங்களுக்கு மத்திய கல்வி வாரியம் சில அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கட்டி டங்கள் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் உள்ளது.

    ஆனால் புதுவை அரசு பள்ளிகளில் எந்த விதமான ஆய்வும் மேற்கொள்ளாமல் ஒரே ஒரு சுற்றறிக்கை மூலம் புதுவையில் உள்ள 127 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதிலிருந்து அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த உத்தரவு இது என்பது தெரிகிறது.

    சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்றுவதை நான் எதிர்க்கவில்லை. படிப்படியாக செயல்படுத்துங்கள் என்பதுதான் எனது கோரிக்கை.

    தற்பொழுது புதுவை கல்வித்துறை எடுத்துள்ள நடவடிக்கையை மாணவர்களிடம் மேலும் பதட்டத்தை அதிகரிக்கும். ஆசிரியருக்கும் இது புதிது என்பதால் அவர்களையும் தயார் செய்ய வேண்டும். பாட புத்தகம் கிடைப்பதிலும் பல இடர்பாடுகள் உள்ளதாக அறிகின்றேன்.

    முதலியார் பேட்டையில் உள்ள அரசு பள்ளி தற்போது தான் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ப்பட்டுள்ளது. பள்ளியின் தரம் உயர்த்த ப்பட்டதே தவிர உள்கட்ட மைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்தப் பள்ளியை சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசு பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எனது தொகுதி மாண வர்களின் எதிர்காலத்தை பனையம் வைக்க ஒருபொழு தும் நான் அனுமதிக்க மாட்டேன்.

    சி.பி.எஸ்.இ. பாடத்தி ட்டத்திலேயே தொடரும் என்றால் பள்ளி திறக்கும் நாளில் 7 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை பள்ளியில் அனுமதிக்காமல் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • விரைவில் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
    • நிதிநிலைக்கு ஏற்ப பெயிண்ட், சுண்ணாம்பு பூச்சு பணிகளை தொடங்க வேண்டும்.

    திருப்பூர் :

    பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன. விரைவில் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

    அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும். இதனால் அரசு பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணி பொதுநிதியை கொண்டு மேம்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நுழைவுவாசல், சுற்றுச்சுவர் மைதானம், வராண்டா, வகுப்பறை, கட்டிடங்கள், தினசரி இறைவணக்க கூட்டம் நடக்குமிடம், கலையரங்கம், நூலகம், ஆய்வு கூடம் உள்ளிட்ட கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். நிதிநிலைக்கு ஏற்ப பெயிண்ட், சுண்ணாம்பு பூச்சு பணிகளை தொடங்க வேண்டும். மின்கம்பி, கேபிள்களில் உரசும் வகையில் அல்லது மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் உயரமாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதிய கல்வியாண்டு தொடங்கும்போது இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பராமரிப்பு பணி தொடங்கி நடக்கிறது.

    • அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன.
    • பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

    தாராபுரம்:

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு வரும் ஜூன் மாதம் 6 -ந்தேதி முதல் செயல்பட உள்ளது.இக்குழுவில் தலைமையாசிரியர், உயர்வழிகாட்டல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர், கருத்தாளர் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இடம்பெறவுள்ளனர்.

    உடுமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல் குழு வாயிலாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.உயர்கல்விக்கு தயார் செய்வதும், விண்ணப்பிக்கச் செய்வதும் இக்குழுவின் முக்கிய பணியாகும். இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டும் வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
    • புதிய கல்வியாண்டில் இந்த திட்டம் எந்த முறையில் செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.

    உடுமலை :

    புதிய கல்வியாண்டு 2023 - 24 முதல் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஏற்கனவே குறிப்பிட்ட மாவட்டங்களில் சில பள்ளிகளில் இத்திட்டம் சோதனை முயற்சியாக நடப்பு கல்வியாண்டில் செயல்படுகிறது.

    இதன் அடிப்படையில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து விபரங்கள் அவ்வப்போது சமர்ப்பிக்க கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி வருகிறது.தற்போது கூடுதலாக பள்ளிகளில் சமையலறை கட்டமைப்புக்கு புதிதாக வண்ணம் பூசியும், சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:- புதிய கல்வியாண்டில் இந்த திட்டம் எந்த முறையில் செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி சிதிலமடைந்த நிலையில் இருக்கும் சமையலறைகள் புதுப்பிக்கப்பட்டும் இடவசதி இல்லாத பள்ளிகள் குறித்தும் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரு சத்துணவு மையத்தில் காலை உணவு செய்யப்படுமா அல்லது அந்தந்த பள்ளிகளில் மையம் செயல்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.மே மாதம் திட்டத்துக்கான முழு ஏற்பாடுகளும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
    • சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை செயல்படுத்த ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி ஒப்புதல் வழங்க கோரியுள்ளேன்.

    புதுச்சேரி:

    புதுவை மடுகரை எம்.ஆர்.சுப்புராயக்கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளியின் 70-ம் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.

    துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

    தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. இதற்காகவே சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கொண்டு வந்து தரமான கல்வியை கொடுப்பதன் மூலம் சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுவர்.

    மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானிடம் புதுவை அரசின் 121 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை செயல்படுத்த ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி ஒப்புதல் வழங்க கோரியுள்ளேன். நிச்சயம் அதற்கு அனுமதி கிடைக்கும்.

    2 முறை மத்திய மந்திரியை சந்தித்து பேசியுள்ளேன். அவரும் ஒப்புதல் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் வளர வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோ ர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளியின் நலன் கருதி இரவு காவலாளியை பணியமர்த்த வேண்டும்.
    • பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி பகுதியில் கே.வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

    இப்பள்ளியில் கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அனைத்து ஆவணங்களும் உள்ளது.

    இங்கு 10 ஆண்டுகளாக இரவு காவலரை நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.

    எனவே இப்பள்ளியின் நலன் கருதி இரவு காவலாளியை பணியமர்த்த வேண்டும்.

    பள்ளி துறையும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
    • பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    பள்ளிகளில் தேர்வு வினாத்தாள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அச்சகங்களில் அச்சிடப்பட்டு பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போன்ற வினாத்தாள்கள் சில நேரங்களில் முன்கூட்டியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அந்தப் பள்ளிகளில் பிரிண்டர் வழங்கி அதன் மூலம் மாணவ, மாணவி களுக்கு வினாத்தாள் கொடு க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட 9 மாவட்டங்களில் பிரிண்டர் முறை மூலம் வினாத்தாள்களை எடுத்து மாணவ- மாணவி களுக்கு தேர்வென்று வழங்கும் முறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையினர் கூறியதாவது:- தேர்வு தினத்தன்று பள்ளிக்கல்வி த்துறை மூலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.

    அவற்றை பிரிண்ட் எடுத்து மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வழங்க வேண்டும். ஏற்கனவே பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 480 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு எஸ். எஸ்.எ. மூலம் பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    500-க்கும் மேல் மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு பெரிய பிரிண்டரும், 500க்கும் கீழ் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு மீடியம் சைஸ் பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது. பிரிண்டர்கள் ஜூன் முதல் பயன்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.
    • முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    மாமல்லபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 1996- 97ல் படித்த மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர், அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.

    அவர்களுக்கு பாடம் எடுத்த முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    பின்னர் பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.

    அனைவரும் ஒன்று கூடி குழு போட்டோ எடுத்த பின்னர் பிரியாவிடை பெற்றனர். சரவணன், ஜலால் சலீம், செல்வம், தட்சிணாமூர்த்தி, ஸ்டாலின், பாம்பினோ சீனு உள்ளிட்டோர் இவ்விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

    • கல்வித்தரத்தில் மாணவர்கள் மேம்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டே இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது.
    • புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்.

    மடத்துக்குளம்:

    உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில், கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி, கல்வி கற்பித்தலில் மாற்றம், எளிமையான கற்றல் மற்றும் கற்பித்தல் என பல்வேறு செயல்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    கல்வித்தரத்தில் மாணவர்கள் மேம்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டே இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது.அதேநேரம் கொரோனா பரவல் காரணமாக கல்வியைக்கடந்து மாணவர்களுக்கு, எதிர்காலத்தை கற்றுக்கொடுக்கக்கூடிய இணை செயல்பாடுகள் குறைந்தது.தற்போது துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், இணைச்செயல்பாடுகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதால், அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.

    இதற்காக பல பள்ளிகளில், விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொருட்டு, மைதானங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு, பாடப்புத்தக கல்வியோடு, தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.அவ்வகையில், பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச்செயல்பாடுகளான மன்றச்செயல்பாடுகள், புத்தகம் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கண்டறியப்படுவர்.

    அவர்கள் புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர். இதேபோல, பள்ளிகளில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் புதுப்பிக்கப்படும்.இதேபோல் புதிதாக தொழில்நுட்ப அறிவு, கம்ப்யூட்டர் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கம்ப்யூட்டர் நிரல் மன்றங்கள் மற்றும் எந்திரனியல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.இணைச் செயல்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றும் வகையில், கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×