search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிண்டர் விநியோகம்"

    • அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
    • பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    பள்ளிகளில் தேர்வு வினாத்தாள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அச்சகங்களில் அச்சிடப்பட்டு பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போன்ற வினாத்தாள்கள் சில நேரங்களில் முன்கூட்டியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அந்தப் பள்ளிகளில் பிரிண்டர் வழங்கி அதன் மூலம் மாணவ, மாணவி களுக்கு வினாத்தாள் கொடு க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட 9 மாவட்டங்களில் பிரிண்டர் முறை மூலம் வினாத்தாள்களை எடுத்து மாணவ- மாணவி களுக்கு தேர்வென்று வழங்கும் முறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையினர் கூறியதாவது:- தேர்வு தினத்தன்று பள்ளிக்கல்வி த்துறை மூலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.

    அவற்றை பிரிண்ட் எடுத்து மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வழங்க வேண்டும். ஏற்கனவே பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 480 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு எஸ். எஸ்.எ. மூலம் பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    500-க்கும் மேல் மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு பெரிய பிரிண்டரும், 500க்கும் கீழ் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு மீடியம் சைஸ் பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது. பிரிண்டர்கள் ஜூன் முதல் பயன்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேர்வு வினாத் தாள்களை பிரிண்ட் எடுக்க சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது
    • முழு ஆண்டுத் தேர்வு உள்ளிட்டவை நடத்தும்போது, தேர்வு வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    சேலம்:

    தேர்வு வினாத் தாள்களை பிரிண்ட் எடுக்க சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது

    9-ம் வகுப்பு வரை...

    அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் மாண–வர்களுக்கு காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு உள்ளிட்டவை நடத்தும்போது, தேர்வு வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் நிலையில் தேர்வுக்கு முன்ன–தாக வினாத்தாள் கசிந்து, முறைகேடு நடைபெறும் வாய்ப்பும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

    இதைத் தடுக்க அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தேர்வு நாளான்று மின்னஞ்சல் மூலமாக வினாத்தாளை அனுப்பி, அதை அந்தந்த பள்ளிகளிலேயே பிரிண்ட் எடுத்துப் பயன்–படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    இதன்படி, சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    661 பள்ளிகளுக்கு பிரிண்டர்

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகள் 366, உயர்நிலைப்பள்ளிகள் 136, மேல்நிலைப்பள்ளிகள் 159 என மொத்தம் 661 அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    அதில், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் கூடுதலாக கொண்டிருக்கும் பள்ளிக–ளுக்கு பெரிய அளவிலான பிரிண்டரும், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தால் சிறிய பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது.

    அவற்றை பயன்படுத்தும் வழிமுறைக் குறித்து, அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கு சேலத்தில் பயிற்சி வழங்கப்–பட்டுள்ளது.பிரிண்டர்களில் பயன்ப

    டுத்துவதற்கான பேப்பர் களை வாங்குவதற்காக அனைத்து பள்ளி–களுக்கும் மொத்தம் ரூ.54.13 லட்சம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகள் 366, உயர்நிலைப்பள்ளிகள் 136, மேல்நிலைப்பள்ளிகள் 159 என மொத்தம் 661 அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
    • பிரிண்டர்களில் பயன்படுத்துவதற்கான பேப்பர்களை வாங்குவதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.54.13 லட்சம் அனுப்பப்பட்டு உள்ளது.

    சேலம்:

    அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு உள்ளிட்டவை நடத்தும்போது, தேர்வு வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் நிலையில் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்து, முறைகேடு நடைபெறும் வாய்ப்பும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

    இதைத் தடுக்க அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தேர்வு நாளான்று மின்னஞ்சல் மூலமாக வினாத்தாளை அனுப்பி, அதை அந்தந்த பள்ளிகளிலேயே பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகள் 366, உயர்நிலைப்பள்ளிகள் 136, மேல்நிலைப்பள்ளிகள் 159 என மொத்தம் 661 அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    அதில், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் கூடுதலாக கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு பெரிய அளவிலான பிரிண்டரும், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தால் சிறிய பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது.

    அவற்றை பயன்படுத்தும் வழிமுறைக் குறித்து, அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கு சேலத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பிரிண்டர்களில் பயன்படுத்துவதற்கான பேப்பர்களை வாங்குவதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.54.13 லட்சம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×