search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government schools"

    • மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
    • சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

    இடாநகர்:

    அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டசபையில் கல்வி மந்திரி பசங் டோர்ஜி சோனா பதில் அளித்தார்.

    அப்போது அவர், மாநிலத்தில் செயல்படாத அல்லது மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    இதைப்போன்ற மேலும் சில பள்ளிகளை மூட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
    • மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும்

    சென்னை:

    அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைத்து பணி நிரவல் கலந்தாய்வை பள்ளிக் கல்வி துறை நடத்துகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு அவசியமாக உள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

    விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் பயிற்சி களமாக பள்ளி மைதானங்கள் விளங்கி வருகின்றன.

    இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

    250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 700 மாணவர்களாக அரசு உயர்த்தி உள்ளது.

    1997-ம் ஆண்டு அரசாணையின்படி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 250-ஐ தாண்டும்போது ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

    ஒவ்வொரு கூடுதல் 300 மாணவர்களுக்கும் ஒரு உடற்கல்வி ஆசிரியர். அதிகபட்சமாக 3 பேர் வரை நியமிக்கப்படுவார்கள். மேல் நிலைப்பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் நியமிக்கப்படுகிறார்.

    அரசு பள்ளிகளில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்த நிலையில் அந்த இடங்களுக்கு புதிய உத்தரவின் படி கூடுதலாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை இடமாற்றம செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    தற்போது 700 மற்றும் அதற்கு குறைவான மாணவர்கள் கொண்ட உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    700-க்கும் அதிகமாக மாணவர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 701 முதல் 1500 வரை உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 என இரண்டு பேருக்கு அனுமதி.

    1500-க்கும் மேல் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் 2 உடற் கல்வி ஆசிரியர்கள் ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 அல்லது நிலை-1 என மொத்தம் 3 பேர் அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவிட்டுள்ளது.

    தற்போது மாணவர்கள் இடையே போதைப்பொருள், புகையிலை பயன்பாடு இருக்கின்ற நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைப்பதன் மூலம் வகுப்புகள் குறையக் கூடும். இது மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
    • பள்ளிகளுக்கு ஜூன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது, தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுஉள்ளது.

    மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கு ஜுன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மன நிலையோடு கல்வி கற்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது
    • மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

    அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இதுவரை 63,433 ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து உள்ளனர்.

    தொடக்க கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,078 பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 7,106, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 4,309, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 822 என 26,075 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

    இதே போல் பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 719, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 20,466, முதுநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,308, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 913, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    அதன்படி ஒட்டுமொத்தமாக 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது 90 சதவீத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை வெகுவாக பாதிக்கும் என ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஆனாலும் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு முன்பு கலந்தாய்வு நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    • கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.
    • வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும். கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள். சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்கான பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    அரசுப் பள்ளிகளில் இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 6223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    6992 நடுநிலைப் பள்ளிகளில் 3267 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி வழங்கப்படும்.

    மேலும், அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    • மாணவர்கள் உருவாக்கிய 167 அறிவியல் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
    • அனைத்து ஆசிரியர்கள்-ஆசிரியைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.

     புதுச்சேரி:

    புதுவை தமிழ் தென்றல் திரு.வி.க.அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து அறிவியல் கண்காட்சியை நடத்தியது.

    தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மரூபஸ், தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோஜ் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் உருவாக்கிய 167 அறிவியல் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஞானமணி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காட்சி படைப்புகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார்.

    பள்ளி அளவில் நடைபெற்ற இக்கண்காட்சிக் கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்கள்-ஆசிரியைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்கிறது.
    • தலைமை ஆசிரியர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    தாராபுரம்:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக மையம் (என்.ஐ.இ.பி.ஏ.,) ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்கிறது. 2017 முதல் ஆண்டுதோறும் மதிப்பீட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு பள்ளி நிர்வாகங்களும், அடிப்படை வசதி குறித்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பாக இது அமைகிறது. நடப்பாண்டுக்கான சுயமதிப்பீட்டு பணிகளை ஒவ்வொரு பள்ளிகளும் துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாநில திட்ட இயக்குனரிடம் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் பள்ளியில் உள்ள வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கம்ப்யூட்டர், மின்சார வசதி, மதிய உணவு பொருட்கள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து இம்மாதம் 30-ந் தேதிக்குள் சுயமதிப்பீடு செய்ய வேண்டும். மேலாண்மை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து வட்டார அளவிலான கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    அதற்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளை தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.
    • 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     ஈரோடு:

    பள்ளிகளில் மரக்க ன்றுகள் நடுதல், மூலிகை தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைக ளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பா ண்டில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் பள்ளிகல்வி த்துறை சார்பில் இந்தாண்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே மாணவர்க ளுக்கு இயற்கை மீதான பற்றினை உருவாக்கவும், மூலிகை தாவரங்கள் குறி த்தும், அதன் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தாவரத்தின் பெயர், பயன்கள், அவற்றை பராமரிக்கும் முறைகளை எடுத்துக்கூறும் வகையில் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.

    தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இந்த மூலிகை தோட்டத்தை தொண்டு சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளது.

    12 சென்ட் காலி இடம், சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதி உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள் மூலிகை தோ ட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    பள்ளி வளாகத்தில் காலி இடம் இல்லாவிட்டாலும், மாடியில் இடமிருந்தாலும் மூலிகை தோட்டம் அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் செலுத்தினார்.
    • கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள வடபழஞ்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வன்னிச்செல்வி மணி தலைமை வகித்தார். ஆனந்த வள்ளி ராஜாங்கம் முன் னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் பயணப்படி மற்றும் அமர்வுப்படியில் இருந்து கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டது.

    கிராம சபை சிறப்பு கூட்டத்தில் வடபழஞ்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் 30 பேர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தனர். அவ்வாறு சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்றம் செலுத்தியதற்கான ரசீதை பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி வழங்கினார்.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் தொகுதியில் 6 பள்ளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேஜைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள 6 பள்ளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேஜைகள் வழங்கப்பட்டு உள்ளது. சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை தாங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் செய்யது அலி, முத்துக்குமார், நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புதாய், மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சை, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ராஜ், அன்சாரி, மாவட்ட வக்கீல் துணை அமைப்பாளர் காளிராஜ், உதவி தலைமை ஆசிரியர் பூமாரி, உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தமிழ் ஆசிரியர் சங்கர்ராம், என்.சி.சி. அலுவலர் பாலமுருகன், ஆசிரியர் ராமநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமார், துணை தலைவர் குமார், உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, மனோகரன், வேல்ராஜ் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த அஜய்மகேஷ்குமார், கணேஷ், ஜெயக்குமார், நகராட்சி கவுன்சிலர் ராஜா ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், சங்கர், குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் தொடங்கப்பட்டது.
    • இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் என ரூ. 4 லட்சம் நிதியில் உயர்தர (ஸ்மார்ட்) வகுப்பறை அமைக்கப் பட்டது. அதனை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனும், யூனியன் சேர்மன் சிங்கராஜூம் மாணவ மாணவிகளின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்த னர்.

    அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாகவும், ஏழை எளிய குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் முதல்கட்டமாக ராஜ பாளையம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம், 30 லட்சம் நிதி ஒதுக்கி ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது அதில் முதல் பள்ளியாக சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டுமெனும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்து நல்லதொரு வழிகாட்டுதலை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கி தந்துள்ளார். இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது.

    ராஜபாளையம் தொகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதன்படி அந்த பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தியிருந்தோம் இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் கல்வித்துறையின் மானியக்கோரிக்கையில் ரூ. 12கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் அழகு ராஜலட்சுமி, கவுன்சிலர் அனுசுயாகண்ணன், கிளைச்செயலாளர்கள் ரத்தினக்கனி, பிள்ளையார், வைரமுத்து ,ரமேஷ், கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    ×