search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியா்கள்"

    • சென்னை டிபிஐ., வளாகத்தில் கடந்த மே 22 -ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினோம்.
    • ஊதியம் வழங்க முடியாது என்று பள்ளி கல்வி திட்ட இயக்குநா் ஜூன் 9-ந் தேதி தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடா்பாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களின் பணி நிரந்தரம் மற்றும் மே மாத ஊதியம் வழங்கக்கோரி, சென்னை டிபிஐ., வளாகத்தில் கடந்த மே 22 -ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினோம். போராட்டம் மே 24 -ந் தேதி வரை நீடித்த நிலையில், பள்ளிகல்வித்துறை இயக்குநா், சங்க நிா்வாகிகளை அழைத்துப்பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

    அப்போது 2022 - 23 ம் ஆண்டுக்கான மே மாத ஊதியம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க முடியாது என்று பள்ளி கல்வி திட்ட இயக்குநா் ஜூன் 9 -ந் தேதி தெரிவித்துள்ளாா்.

    எனவே போராட்டத்தின் போது அளித்த உத்தரவாதத்தின்படி மே மாதத்துக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் பகுதிநேர ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொருளாளா் முருக.செல்வராசன் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தை முறைப்படுத்தி, மாவட்டத்தின் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். ஒன்றிய அளவில் வட்டார கல்வி அலுவலகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் குறைதீர் முகாம் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • கோரிக்கையை வலியுறுத்தி மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் விடுமுறையில் 48 மணி நேர அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • தி.மு.க. அரசின் தோ்தல் வாக்குறுதியான சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    திருப்பூர் :

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் (எஸ்.எஸ்.டி.ஏ) மண்டல மாநாடு அவிநாசியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில பொதுச் செயலாளா் ராபா்ட் தலைமை வகித்தாா்.மாநிலத் தலைவா் ரெக்ஸ் ஆனந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.

    இதில் தி.மு.க. அரசின் தோ்தல் வாக்குறுதியான சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    தமிழக முதல்வரின் கவனத்தை ஈா்த்திட இடைநிலை ஆசிரியா்கள், கோரிக்கையை வலியுறுத்தி மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் செப்டம்பா் முதல் பருவ விடுமுறையில் 48 மணி நேர அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×