search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி இணை செயல்பாடு"

    • கல்வித்தரத்தில் மாணவர்கள் மேம்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டே இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது.
    • புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்.

    மடத்துக்குளம்:

    உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில், கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி, கல்வி கற்பித்தலில் மாற்றம், எளிமையான கற்றல் மற்றும் கற்பித்தல் என பல்வேறு செயல்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    கல்வித்தரத்தில் மாணவர்கள் மேம்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டே இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது.அதேநேரம் கொரோனா பரவல் காரணமாக கல்வியைக்கடந்து மாணவர்களுக்கு, எதிர்காலத்தை கற்றுக்கொடுக்கக்கூடிய இணை செயல்பாடுகள் குறைந்தது.தற்போது துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், இணைச்செயல்பாடுகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதால், அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.

    இதற்காக பல பள்ளிகளில், விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொருட்டு, மைதானங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு, பாடப்புத்தக கல்வியோடு, தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.அவ்வகையில், பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச்செயல்பாடுகளான மன்றச்செயல்பாடுகள், புத்தகம் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கண்டறியப்படுவர்.

    அவர்கள் புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர். இதேபோல, பள்ளிகளில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் புதுப்பிக்கப்படும்.இதேபோல் புதிதாக தொழில்நுட்ப அறிவு, கம்ப்யூட்டர் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கம்ப்யூட்டர் நிரல் மன்றங்கள் மற்றும் எந்திரனியல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.இணைச் செயல்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றும் வகையில், கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×