search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government buses"

    • முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
    • தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ. ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பினையொட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், மருத்துவமனைகளுக்கு மற்றும் இதர வேலைகளுக்கு செல்வதற்கு ஏராளமானோர் தினந்தோறும் தனியார் பஸ்களில் சென்று வந்தனர். இன்று நடந்த போராட்டத்தை முன்னிட்டு கடலூரில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு தனியார் பஸ்கள் எதுவும் இன்று செல்லவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இன்று இயங்கின. காலை முதலே ஓரளவு அரசு பஸ்கள் மட்டும் இயங்கி வந்த நிலையில் தனியார் பஸ்கள் எதுவும் இயங்காததால் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கூடுதலாக 10 அரசு பஸ்கள் அதிகாரிகளால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டது. இதனால் பயணிகளின் கூட்டம் அலைமோதாமல் பாதுகாப்பான முறையில் பஸ்களில் பயணம் செய்தனர். மேலும் இந்த அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி சென்று வந்தது குறிப்பிடுத்தக்கது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.

    • திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • திருச்சி மாவட்டத்தில் 438 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு பஸ்களை முறையாக பராமரிக்காததே காரணம் என டிரைவர்கள் தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்திற்கு திருச்சியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் டிரைவர் கூறுகையில், தமிழக அரசு டவுன் பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என அறிவித்துள்ளது. இந்த டிக்கெட் கட்டணத்திற்கான மானியத்தை போக்குவரத்துக் கழகத்திற்கு முறையாக வழங்கவில்லை. இதனால் சீராக பஸ்கள் பராமரிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் நாங்கள் எங்கள் சொந்த பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது.

    இதுபற்றி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 438 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் தமிழக அரசின் இலவச கட்டணத்துக்குள் வருகிறது. தினமும் ரூ.13 ஆயிரம் வசூல் செய்த பஸ்ஸில் தற்போது ரூ.3000 கூட வசூல் ஆகவில்லை.

    டிரைவர், கண்டக்டர்கள் விடுமுறை இல்லாமல் இரண்டு ஷிப்ட் தொடர்ச்சியாக பணியாற்ற நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதுவும் விபத்துக்கு காரணமாக இருக்கிறது. எனவே தமிழக அரசு அரசு போக்குவரத்து கழக செயல்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இதுபற்றி திருச்சி அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, டிரைவர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. உபகரணங்களும் அவ்வப்போது மாற்றப்படுகின்றன என்றார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • செய்யாறில் இருந்து வேலூருக்கு இரவில் இயக்கப்படுகிறது

    செய்யாறு:

    செய்யாறில் இரு வழித் தடங்களில் செல்லும் அரசு பஸ்களை எம்.எல்.ஏ.ஓ.ஜோதி வியாழக்கிழமை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து வேலூருக்கு இரவு நேர பஸ் தடம் எண்.201, நகர பஸ் எண். 56ஏ செய்யாறு - பிரம்மதேசம் - புலிவலம் - சுனைப்பட்டு ஆகிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    செய்யாறு பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து துறை துணை மேலாளர்கள் (தொழில்நுட்பம்) ரகுராமன், (வணிகம்) எஸ் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஓ ஜோதி பங்கேற்ற இரு பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆயிரம் ரூபாய்க்கு பயணச்சீட்டு பெற்று சிறிது தூரம் பஸ்ஸை ஒட்டி சென்றார்.

    நிகழ்ச்சியில் கிளை மேலாளர் எஸ் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திருத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒன்றிய குழு தலைவர்கள் வெம்பாக்கம் டி. ராஜு, அனக்காவூர் திலகவதி ராஜ்குமார், மண்டல பொதுச் செயலாளர் எஸ். சௌந்தரராஜன் மண்டல பொருளாளர் எஸ். மோகனரங்கன், மண்டல தலைவர் கே துரைசாமி, பணிமனை செயலாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் ரமேஷ், ஏ.ஞானவேல், விஜயபாஸ்கர், சின்னதுரை, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரத்தில் இன்று பரபரப்பு 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
    • மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுவை மாநில அரசுக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே சீத்தாம்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் அச்சத்துடன் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் கீழே இறங்கினர். அப்போது அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது. உடனடியாக அரசு பஸ் டிரைவர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி சென்றார்.

    இதேபோல் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிநோக்கி தமிழக அரசுக்கு சொந்தமான சொகுசுபஸ் சென்றது. இந்த பஸ் சீத்தாம்பாளையம் பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. உடனடியாக இந்த பஸ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த கும்பல் பஸ்கள் மீது கற்களை வீசியது தெரியவந்தது. எனவே பஸ் மீது கற்களை வீசி சென்ற கும்பல் யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    கர்நாடகத்தில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. #BharatBandh
    பெங்களூரு:

    தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக கர்நாடகத்தில் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெங்களூருவில் இருந்து 2,543 ஊர்களுக்கு வழக்கமாக 3,300 பஸ்கள் இயக்கப்படும்.

    இன்று தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் 1,104 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் ரெயிலும், மெட்ரோ ரெயிலும் இயக்கப்பட்டது.

    வேலைநிறுத்தம்  காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இதேபோல பெங்களூரு பல்கலைக்கழகம் உள்பட மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சிகள் இன்று வழக்கம்போல் ஓடின. தபால் மற்றும் வங்கி அலுவலகங்கள் திறந்து இருந்தாலும் ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதேபோல கர்நாடக அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    வேலை நிறுத்தத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் இன்று சினிமா ஷூட்டிங் நடைபெறவில்லை.

    கர்நாடக மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இன்று வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.

    பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். #BharatBandh
    சிவகாசி பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
    சிவகாசி:

    சிவகாசி பஸ்நிலையத்தில் இருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை மதுரையில் இருந்து சிவகாசி பஸ் நிலையத்துக்கு ஒரு அரசு பஸ் வந்தது.

    பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி மீது அரசு பஸ் மோதியது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிவகாசி நகர் போலீசார் அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது போலீஸ் காரர்கள் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மற்ற அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போலீசாரை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    மேலும் அரசு பஸ்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. சிவகாசி முழுவதும் இந்த செய்தி பரவ, அரசு பஸ்கள் ஆங்காங்ககே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

    இதற்கிடையில் அரசு பஸ் போக்குவரத்து தொழிற் சங்கத்தினரிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டது.  #tamilnews
    சபரிமலையில் பெண் பக்தர்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக நிலக்கல் பகுதியில் நடந்த வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. #Sabarimala #SabarimalaProtests
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண் பக்தர்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கேரளாவில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஆச்சாரங்களை மீறக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 17-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு 50 வயதிற்குட்பட்ட பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நிலக்கல், பம்பை, பத்தனம் திட்டா போன்ற பகுதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள் பல பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

    நிலக்கல் பகுதியில் நடந்த வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. மேலும் 10-க்கும் மேற்பட்ட பக்தர்களின் வாகனங்களும் கல்வீச்சில் உடைந்தன. இது தொடர்பாக 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச இந்து பரி‌ஷத் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடை பெற்றது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன, பஸ்களும் ஓடவில்லை. நேற்றும் சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினார்கள்.

    பம்பையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சபரிமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் பந்தளம் ராஜ குடும்ப கட்டிடம் முன்பு சரண கோ‌ஷ போராட்டம் நடைபெற்றது. சபரிமலை ஆச்சாரத்தை மீறக்கூடாது என்று அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    சபரிமலை கோவில் தந்திரி ராகுல் ஈஸ்வரர் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து போராட்டம் நடத்திய மன்னர் குடும்பத்தினர் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சபரிமலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நிலக்கல், பம்பை, இலவங்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 30 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு வருகிற 22-ந்தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

    தொடர்ந்து சபரிமலை பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு இன்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  #Sabarimala #SabarimalaProtests



    டீசல் நஷ்டத்தை சரிகட்ட வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பஸ்களுக்கு டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தினமும் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஜனவரி மாதம் 20-ந்தேதி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.62.94 ஆக இருந்தது.

    இன்று ஒரு லிட்டர் ரூ.79.50 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஒரு லிட்டர் டீசல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது.

    இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. ஏற்கனவே பஸ் கட்டண உயர்வால் பயணிகள் கூட்டம் குறைந்து வருவாய் குறைந்து இருந்த நிலையில் இப்போது வரலாறு காணாத டீசல் விலை உயர்வால் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

    இந்த இழப்பை சரிகட்டுவதற்காக வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்களின் கட்டணம் மறைமுகமாக மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தவிர விழுப்புரம், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய 6 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்படும் சுமார் 2500 சாதாரண பஸ்களின் கட்டணம் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் கட்டணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சாதாரண பஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 58 பைசா எனவும், எக்ஸ்பிரஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 85 பைசாவும் அரசு நிர்ணயித்துள்ளது. வெளியூர்களுக்கு 6850 புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர 2500 சாதாரண பஸ்களும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த பஸ்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்திற்கு (வழித் தடத்திற்கு) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது சாதாரண பஸ்கள் அனைத்திலும் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பஸ் கட்டணம் ரூ.120 ஆகும். தற்போது இந்த பஸ்கள் டீலக்ஸ் ஆக மாற்றப்பட்டதால் ரூ.175 கட்டணமும், அல்ட்ரா டீலக்ஸ் கட்டணமாக ரூ.200 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    அரசு பஸ்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சீபுரம், விழுப்புரம், புதுச்சேரி, ஆற்காடு, சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் தற்போது பயணிகள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கு செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்தால் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்தாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூந்தமல்லி- வேலூருக்கு ரூ.100 கட்டணமாகும். கோயம்பேடு- வேலூர் டிக்கெட் கட்டணம் ரூ.125 வசூலிக்கப்படுகிறது. எந்த இடத்தில் இருந்து பயணம் செய்கிறோமோ அதற்குதான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் பயணம் செய்யாத இடத்திற்கும் சேர்த்து அதிகமாக கட்டணம் வசூலிப்பது ஏழை மக்களை வதைக்கும் செயல் என்று தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டக்டர் இல்லாமல் டிரைவர்களை மட்டும் வைத்து பஸ்களை கடந்த சில மாதங்களாக இயக்கி வருகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் இந்த பஸ்களில் டிரைவரே டிக்கெட் கொடுத்து விடுவார்.

    இந்த திட்டத்திற்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லாததால் விலக்கி கொள்ளப்படுகிறது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட கண்டக்டர் இல்லாத பஸ் சேவை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. #Tamilnews
    நெல்லை அருகே கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து 3 அரசு பஸ்கள் மீது நள்ளிரவில் கற்கள் வீசப்பட்டதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
    களக்காடு:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் பேசிய போது, முதலமைச்சர் மற்றும் போலீசாரை தாக்கி பேசினார். மேலும் சாதி மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியதால் அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கொலை முயற்சி, 2 சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியது, கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பரப்பியது உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அசம்பாவித நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்குநேரி, சீவலப்பேரி, தாழையூத்து, பனவடலி சத்திரம், கடையநல்லூர், நெல்லை சந்திப்பு, சி.என்.கிராமம், சுத்தமல்லி பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றியும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை அருகே நேற்று நள்ளிரவு 3 அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் 2 பெண் பயணிகள் காயம் அடைந்தனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்து கொண்டி \ருந்தது. நள்ளிரவு 11 மணிக்கு அந்த பஸ் நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகர் பகுதியில் வந்தது. அப்போது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென அந்த பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த பாளை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த சொர்ணக்கிளி என்பவரின் மனைவி பாலம்மாள் (வயது65) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இதே போல் திசையன்விளையில் இருந்து நெல்லை நோக்கி நேற்றிரவு வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். நாங்குநேரி அருகே தட்டான் குளம் பகுதியில் பஸ் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்ததில், அதில் பயணம் செய்து வந்த நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி விஜயலட்சுமி (37) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவங்கள் குறித்து பஸ் டிரைவர்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கல்வீச்சில் காயமடைந்த விஜயலட்சுமி, பாலம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்ற அரசு பஸ் மீது வள்ளியூர் அருகே கோவநேரி பகுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கிய போதும், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த 3 கல்வீச்சு சம்பவங்கள் குறித்தும் நாங்குநேரி மற்றும் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கல்வீசி தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தம் சம்பவம் நாங்குநேரி, வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சாணார்பட்டி அருகே மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பயன்படாத நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகில் உள்ள அஞ்சுகுழிபட்டி ஊராட்சிக்குட்பட்ட படுகை காட்டூர், சின்னகாளிபட்டி, குட்டுகாட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள்.

    திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புகின்றனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் சாணார்பட்டி மற்றும் கோபால்பட்டிக்கு பள்ளிக்கு செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் காலையில் 10 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் அரசு பஸ் வந்து செல்கிறது.

    இதனால் இந்த பஸ் சேவை இப்பகுதி கிராம மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன் அற்றதாக உள்ளது. காலையில் 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும் பஸ் இயக்கப்பட்டால் பள்ளிக்கு செல்பவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது காலை நேரத்தில் தாமதமாக பஸ் இயக்கப்படுவதால் 6 கி.மீ. தூரம் நடந்து மாணவர்கள் அஞ்சுகுழிபட்டியில் வந்து பஸ் ஏறி செல்கின்றனர்.

    எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் இப்பகுதி கிராம மக்களின் நிலைமையை உணர்ந்து காலையில் 8 மணிக்கும், மாலையில் 5 முதல் 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    கண்டக்டர் இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கப்படுவதற்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 1975-ம் ஆண்டு முதல் அரசு போக்குவரத்து கழகங்கள் தொடங்கப்பட்டு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை, விழுப்புரம் உள்பட 6 போக்குவரத்து மண்டல கழகங்களும், சென்னை பெருநகர போக்குவரத்து கழகமும், மாநில விரைவு போக்குவரத்து கழகமும் உள்ளன.

    இங்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதில், சுமார் 33 ஆயிரம் ஊழியர்கள் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

    பயணிகள் பஸ்களில், நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர் இல்லாமல், ஓட்டுனர் மட்டும் உள்ள பஸ்கள் பல இயக்கப்படுகின்றன.

    இது மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிரானது ஆகும். மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக பயணிகள் ஏற்றப்படுவதை தடுப்பது, பஸ்களை சுத்தமாக பராமரிப்பது போன்ற பொறுப்புகள் நடத்துனருக்கு உள்ளது.

    ஆனால், நடத்துனரே இல்லாமல், நடத்துனரின் பணியை ஓட்டுனருக்கு வழங்கி, ஓட்டுனரை மட்டும் கொண்டு இயங்கும் அரசு பஸ்கள் ஏராளமாக தமிழகத்தில் உள்ளது. இது சட்டவிரோதமாகும். இந்த நடைமுறையை தடுக்க வேண்டும். அதற்கு தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகரம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதா? என்பதற்கும், இந்த வழக்கிற்கும் பதில் அளிக்கும்படி போக்குவரத்து செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துகுடி மாவட்டத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதால், ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் இன்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்ததை அடுத்து, இரவு பேருந்துகள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    ×