search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாணார்பட்டி அருகே பயன்படாத நேரத்தில் இயங்கும் அரசு பஸ்கள்
    X

    சாணார்பட்டி அருகே பயன்படாத நேரத்தில் இயங்கும் அரசு பஸ்கள்

    சாணார்பட்டி அருகே மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பயன்படாத நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகில் உள்ள அஞ்சுகுழிபட்டி ஊராட்சிக்குட்பட்ட படுகை காட்டூர், சின்னகாளிபட்டி, குட்டுகாட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள்.

    திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புகின்றனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் சாணார்பட்டி மற்றும் கோபால்பட்டிக்கு பள்ளிக்கு செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் காலையில் 10 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் அரசு பஸ் வந்து செல்கிறது.

    இதனால் இந்த பஸ் சேவை இப்பகுதி கிராம மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன் அற்றதாக உள்ளது. காலையில் 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும் பஸ் இயக்கப்பட்டால் பள்ளிக்கு செல்பவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது காலை நேரத்தில் தாமதமாக பஸ் இயக்கப்படுவதால் 6 கி.மீ. தூரம் நடந்து மாணவர்கள் அஞ்சுகுழிபட்டியில் வந்து பஸ் ஏறி செல்கின்றனர்.

    எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் இப்பகுதி கிராம மக்களின் நிலைமையை உணர்ந்து காலையில் 8 மணிக்கும், மாலையில் 5 முதல் 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×