search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government bus driver"

    • பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள செம்பரக்கல் பகுதியை சேர்ந்தவர் பரீத் (வயது49). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக தம்பனூர் சென்ட்ரல் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

    கருநாகப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்பு நெஞ்சுவலி தாங்க முடியாமல் பஸ்சுக்குள்ளேயே சுருண்டு படுத்தார். இதையடுத்து அவர் கருநாகப்பள்ளி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக வந்தனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும், பரீத் தான் ஓட்டிவந்த பஸ்சை கவனமாக மெதுவாக ஓட்டிச்சென்று ரோட்டோரமாக நிறுத்தி விட்டார். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த 30 பயணிகள் தப்பினர்.

    பயணிகளை காப்பாற்றி விட்டு, தனது உயிரை விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பருத்தியூர் கிராமத்திற்கு தடம் எண் 33 என்ற டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை டிரைவர் பிரபாகர் ஓட்டினார். கண்டக்டராக குமார் பணிபுரிந்தார். இந்தநிலையில் தேவனூர் புதூர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து 3 பேர் பஸ்சில் ஏறினார்கள்.

    குடிபோதையில் இருந்த அவர்கள் கண்டக்டரிடம் தங்களை இலவசமாக உடுமலைக்கு அழைத்துச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். ஆனால் அவர்கள் டிக்கெட் எடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் கண்டக்டர் சின்னப்புதூர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமிகளை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் புங்கமுத்தூர் பிரிவில் பஸ்சை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லைக்கொண்டு டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர், டிரைவரை தாக்கிய போதை ஆசாமிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு கீழத்தெருவை சேர்ந்த மனோகரன் மகன் ஆனந்தன் (22) , கோவை மாவட்டம் கோட்டூர் அங்கலகுறிச்சியை சேர்ந்த சுந்தரேஸ்வரன் மகன் மகேந்திரபிரசாத் (19)ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார்.
    • சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அப்போது, திண்டிவனம் புறவழிச் சாலை தீர்த்தகுளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, ஓசூரில் இருந்து புதுவை சென்று கொண்டிருந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சவுந்தர்ராஜன் தனது குடும்பத்தாருடன் வந்த கார் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அரசு பஸ் டிரைவரும், சவுந்தர்ராஜனும் சமாதானமாகி அங்கிருந்து சென்றனர். இதனை அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இது திண்டிவனம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது36). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பழனி கிளையில் இருந்து அரசு பஸ்சை இயக்கி வருகிறார்.

    இவர் கடந்த சில மாதங்களாக பழனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இந்நிலையில் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் பலமுறை உயரதிகாரிகளிடம் தெரிவித்தும் தொழிற்சங்க நிர்வாகிகளின் தூண்டுதலால் தனக்கு ஓய்வில்லாத அளவிற்கு பணி வழங்குவதாகவும் கூறினார்.

    எனவே மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தனது மரணத்திற்கு காரணம் போக்கு வரத்துக் கழக மேலாளர் கார்த்திகேயன் என்பவரே என கூறி வீடியோ பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

    அதன்பிறகு பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த சக பணியாளர்கள் ராஜ்குமாரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல்முகநாடார் தெருவை சேர்ந்தவர் திரவியம் ஜெபக்குமார் (வயது48). அரசு பஸ் டிரைவர்.
    • சம்பவத்தன்று வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்றார்

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல்முகநாடார் தெருவை சேர்ந்தவர் திரவியம் ஜெபக்குமார் (வயது48). அரசு பஸ் டிரைவர்.

    5 பவுன் நகை கொள்ளை

    இவர் சம்பவத்தன்று வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்றார். அப்போது கல்லிடைக் குறிச்சி அருகே ஒரு மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றார்.

    பின்னர் வந்த போது அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு கிடந்த கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை கொள்ளை போயி ருந்தது.

    இது தொடர்பாக அவர் கல்லிடைக்குறிச்சி போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி.காமி ராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் திரவியம் ஜெபக்குமாரை பின் தொடர்ந்து வருவது தெரியவந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவையில் இருந்து திருச்சிக்கு குடிபோதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சிக்கு சென்ற அரசு பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.

    பஸ் நிலையத்தில் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் பஸ்சை தாறுமாறாக ஓட்டினார். இதனால் பயணிகள் பீதியுடன் பயணம் செய்தனர்.

    இந்நிலையில் பஸ் ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் மீது தாறுமாறாக சென்றபோது பாலத்தின் சுவர் மீது உரசியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். பின்னர் இருகூர் பிரிவு அருகே சென்றபோது பஸ்சை பயணிகள் நிறுத்தி டிரைவரை சிறைபிடித்தனர்.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்ற விசாரணை நடத்தினர்.

    அப்போது பஸ்சை ஓட்டியது கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த சுப்பிரமணியம்(42) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பஸ்சில் பயணித்த பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் டிரைவர் சுப்பிரமணியம் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக காங்கேயம் பஸ் டெப்போ அதிகாரிகளும் விசாரணை நடத்தி உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தனர்.

    இதனடிப்படையில் டிரைவர் சுப்பிரமணியத்தை முதற்கட்டமாக சஸ்பெண்டு செய்து திருப்பூர் கோட்ட மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுப்பிரமணியம் மீது ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ச்சியான புகார்கள் இருக்கும்பட்சத்தில் டிரைவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேச்சேரி அருகே அரசு பஸ்சில் தூங்கி கொண்டிருந்த டிரைவர் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து மேச்சேரி வழியாக கீரைக்காரனூருக்கு நேற்று இரவு டவுன் பஸ் ஒன்று சென்றது.

    அந்த பஸ்சை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வில்லிபாயைத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 56) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.

    இரவு அந்த பஸ் கீரைக் காரனூரில் நிறுத்தப்பட்டது. பின்னர் பஸ்சுக்குள் டிரைவர் செல்வராஜும், கண்டக்டரும் தூங்கினார்கள்.

    இன்று காலை 5 மணிக்கு பஸ் மீண்டும் ஓமலூருக்கு புறப்பட வேண்டும். அதிகாலை கண்டக்டர் எழுந்து பார்த்தபோது செல்வராஜ் எழும்பவில்லை. அவரை கண்டக்டர் தட்டி எழுப்பினார். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் அங்கு விரைந்து வந்து செல்வராஜை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இறந்த செல்வராஜுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செல்வராஜ் உடல் மருத்துவ பரிசோனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
    சிவகாசி:

    சிவகாசி பஸ்நிலையத்தில் இருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை மதுரையில் இருந்து சிவகாசி பஸ் நிலையத்துக்கு ஒரு அரசு பஸ் வந்தது.

    பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி மீது அரசு பஸ் மோதியது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிவகாசி நகர் போலீசார் அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது போலீஸ் காரர்கள் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மற்ற அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போலீசாரை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    மேலும் அரசு பஸ்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. சிவகாசி முழுவதும் இந்த செய்தி பரவ, அரசு பஸ்கள் ஆங்காங்ககே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

    இதற்கிடையில் அரசு பஸ் போக்குவரத்து தொழிற் சங்கத்தினரிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டது.  #tamilnews
    அரசு பேருந்து ஓட்டுநர் வங்கியில் இருந்து லோன் வாங்கிய ரூ 2 லட்சம் பணத்தை மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்து இருந்தார். அந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள வீரப்பநாய்க் கன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (47), இவர் அரசு பேருந்து ஓட்டுநராக அரூர் பணி மனையில் பணிபுரிந்து வருகிறார். 

    காலை 11 மணியளவில் அரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பர்சனல் லோன் ரூ. 2 லட்சம் வாங்கி கொண்டு வங்கியின் முன்புறம் நிறுத்தியிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துவிட்டு அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்க்கு சென்றுவந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் ரூ. 2 லட்சத்தை காணவில்லை. மர்ம நபர்கள் இதனை நோட்டமிட்டு திருடிச் சென்றுள்ளனர்.

    இதனையடுத்து அரூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் வண்டியில் வைத்த பணம் 2 நிமிடத்தில் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் மோசமாக உள்ளன என்ற டிரைவரின் புலம்பல் வாட்ஸ்அப்பில் வீடியோவாக வெளியானதால் அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். #DriverSuspended
    பழனி:

    பழனி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் டிரைவராக பணியாற்றிவரும் பஸ் ஓட்டை உடைசல் குறித்து வாட்ஸ்அப்பில் வெளியானதால் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    பழனி அருகே கீரனூரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது45). பழனி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து பழனிக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது மழை பெய்ததால் பஸ் ஒழுகியுள்ளது. டிரைவர் இருக்கை அருகிலுள்ள ‌ஷட்டர் வேலை செய்யாததால் நனைந்தபடியே விஜயகுமார் பஸ்சை இயக்கியுள்ளார்.

    இதனால் அதிருப்தி அடைந்த விஜயகுமார் போதிய பராமரிப்பு இல்லாததால் அரசு பஸ்கள் மோசமாக உள்ளன. உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பாதுகாப்பில்லை என புலம்பியுள்ளார்.



    இதை பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதற்கிடையே பேசிக்கொண்டே அஜாக்கிரதையாக பஸ் ஓட்டியதாக கூறி விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்து பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். இது சக ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், போதிய பராமரிப்பின்றி அரசு பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. பல பஸ்களில் பிரேக் பிடிப்பதில்லை. இதுதொடர்பாக பஸ்சில் நான் பேசியதை பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார்.

    இதனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மக்களுக்கு தெரியவந்தது. தங்கள் மீதான தவறை மறைக்க என்னை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். பயணிகள், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டே பேசினேன். எனவே சஸ்பெண்ட் ஆர்டரை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றார். #DriverSuspended



    சேலத்தில் அரசு பஸ் டிரைவரை வக்கீல் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    சேலம்:

    சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 47). இவர் நாமக்கல் கோட்டில் வக்கீலாக உள்ளார். தினமும் நாமக்கல்லுக்கு பஸ்சில் சென்று வருவார். இன்று காலையில் கோர்ட்டுக்கு செல்வதற்காக அயோத் தியாப்பட்டிணத்தில் இருந்து ஜங்சன் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சை கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார்.

    பஸ் சீலநாயக்கன் பட்டி அருகே சென்ற போது வக்கீல் அன்பரசன் டிரைவரிடம் ஏன் பஸ்சை மெதுவாக ஓட்டி செல்கிறீர்கள் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வக்கீல், டிரைவர் ராஜேந்திரனை அடித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பஸ்சை நடு ரோட்டில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் அன்பரசனை கைது செய்தனர். சேலத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×