search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 வழி தடங்களில் அரசு பஸ்கள் இயக்கம்
    X

    செய்யாறில் இரு வழி தடங்களில் செல்லும் பஸ்சை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    2 வழி தடங்களில் அரசு பஸ்கள் இயக்கம்

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • செய்யாறில் இருந்து வேலூருக்கு இரவில் இயக்கப்படுகிறது

    செய்யாறு:

    செய்யாறில் இரு வழித் தடங்களில் செல்லும் அரசு பஸ்களை எம்.எல்.ஏ.ஓ.ஜோதி வியாழக்கிழமை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து வேலூருக்கு இரவு நேர பஸ் தடம் எண்.201, நகர பஸ் எண். 56ஏ செய்யாறு - பிரம்மதேசம் - புலிவலம் - சுனைப்பட்டு ஆகிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    செய்யாறு பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து துறை துணை மேலாளர்கள் (தொழில்நுட்பம்) ரகுராமன், (வணிகம்) எஸ் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஓ ஜோதி பங்கேற்ற இரு பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆயிரம் ரூபாய்க்கு பயணச்சீட்டு பெற்று சிறிது தூரம் பஸ்ஸை ஒட்டி சென்றார்.

    நிகழ்ச்சியில் கிளை மேலாளர் எஸ் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திருத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒன்றிய குழு தலைவர்கள் வெம்பாக்கம் டி. ராஜு, அனக்காவூர் திலகவதி ராஜ்குமார், மண்டல பொதுச் செயலாளர் எஸ். சௌந்தரராஜன் மண்டல பொருளாளர் எஸ். மோகனரங்கன், மண்டல தலைவர் கே துரைசாமி, பணிமனை செயலாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் ரமேஷ், ஏ.ஞானவேல், விஜயபாஸ்கர், சின்னதுரை, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×