என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl molestation"
செங்கம் மேல்நாச்சிபட்டு அரசுப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த கும்பல் ஆசிரியரை அடித்து உதைத்தனர்.
அப்போது, ஆசிரியரை விட்டு விடுமாறு மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறினர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் கண்ணனை விடுவிக்ககோரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து, கண்ணக்குருக்கை- மேல்நாச்சிப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் கண்ணனை விடுதலை செய்ய கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
வடவள்ளி:
கோவை வீரகேரளம் தென்றல் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் பீளமேடு பகுதியில் போஸ்டர் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
மணிகண்டன் அப் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச் சிறுமி தனது தாயிடம் கூறினார். அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து சென்று சிறுமியிடம் சில் மிஷம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மணிகண்டனுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதால் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.
ஈரோடு:
ஈரோட்டில் சமீபகாலமாக குழந்தைக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் மட்டும் குழந்தைக்கு எதிராக பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும் 6 வயது சிறுமியை 50 வயதான கட்டிட தொழிலாளி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளி இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தங்கராஜ் 6 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவதாக அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். எனினும் தனக்கு நடந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினாள்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் இந்த வழக்கை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
ஈரோடு மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தங்கராஜ் திடீரென மாயமானார் அவரை போலீசார் தேடி வந்தனர், இந்நிலையில் ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தங்கராஜ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் தங்கராஜ கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அந்த சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த பெண் கர்ப்பம் தரித்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் ஈரோடு மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இது குறித்து மகளிர் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய போத அந்த சிறுமி கூறியதாவது:-
சிவகிரி பகுதியை சேர்ந்த வாழை தோட்டம் கார வலசு ஜே.ஜே. நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் என்னிடம் பழகி ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். திருமணம் செய்வதாக கூறி என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதில் நான் கர்ப்பமாகி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்த போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்தனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் சண்முகத்தை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில கடந்த வாரம் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அந்த குடியிருப்பின் காவலாளிகள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டப்பிரிவின் கீழ் 17 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெசன்ட்நகர், கொடுங்கையூர், பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள பிரபலமான சி.பி.எஸ்.இ. பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்ற வாலிபர் சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார். பின்னர் அங்குள்ள சிறிய சந்துக்குள் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற ரவீசந்திரன் தகாத முறையில் நடந்து கொண்டார்.
இதனை அந்த பகுதி மக்கள் பார்த்துவிட்டனர். வாலிபரின் செயலை நேரில் கண்ட அவர்கள் ஒன்று திரண்டு செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ரவீந்திரனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர்.
பின்னர் சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார்.
கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜெயவேல் என்பவரது 11 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் வெளிமாநிலத்தை சேர்ந்த கோவிந்தகுமார் என்ற வாலிபர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவரையும் பொது மக்கள் மடக்கி பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். கோவிந்தகுமாரும் கைது செய்யப்பட்டார்.
கைதான 2 வாலிபர்கள் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
திருவள்ளூரை சேர்ந்த மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 20), தலகாஞ்சேரியை சேர்ந்த நவீன்குமார் (19) ஆகியோர் காதலிப்பது போல நடித்து உள்ளனர். அப்போது அந்த மாணவியை கஞ்சா, மது பழக்கத்துக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது பற்றி தலகாஞ்சேரியை சேர்ந்த தங்கள் நண்பர்கள் கார்த்திக் (19), அருண் (20), கமல் என்ற ராஜ்கமல் (23), திருவள்ளூரை சேர்ந்த மகேஷ் (20) ஆகியோரிடம் ராஜேஷ் தெரிவித்து உள்ளார். அவர்களும் அந்த மாணவிக்கு மது, கஞ்சா கொடுத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் திருவள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிபிச்சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவியிடம் விசாரித்த போது, தன்னை 21 பேர் வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ராஜேஷ், நவீன்குமார், கார்த்திக், அருண், கமல் என்ற ராஜ்கமல், மகேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள மேலும் 15 பேரை பிடிக்க துணை சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டையைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது24). இவர் திருபுவனத்தில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திருபுவணம் கீழவீதியைச் சேர்ந்த 8 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு கடை அருகே விளையாடி கொண்டிருந்தாள் . அப்போது அங்கு வந்த மணிகண்டன் சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. மணிகண்டனை பார்த்து பயமடைந்த சிறுமி அந்த இடத்தை விட்டு தப்பி சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் திருபுவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரை சேர்ந்த 16 வயது சிறுவன் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பக்கத்து வீட்டில் 5 வயது சிறுமி ஒன்று உள்ளது. அந்த சிறுமியிடம் மாணவன் அடிக்கடி பேசி விளையாடி கொண்டிருப்பான்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு அந்த சிறுமி விளையாடி கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த மாணவன் சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து தூக்கி சென்றான். பின்னர் வீட்டின் பின்புறம் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டான். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தது.
பின்னர் சிறுமியின் பெற்றோர் விபரம் கேட்டனர். இதற்கு அவள் நடந்த விபரத்தை கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாணவன் அடைக்கப்பட்டான். 11-ம் வகுப்பு மாணவன், 5 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்