என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl molestation"
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் 34 வயது கார் டிரைவர். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் டிரைவர் அடிக்கடி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மது போதையில் இருந்த அவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் பயந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாய் இது குறித்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை காங்கயம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 22). மாற்றுத்திறனாளி.
இவர் அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தி சென்றார்.
பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஒரு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு ராமு தப்பி சென்று விட்டார்.
காப்பகத்தில் இருந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பாட்டியிடம் தெரிவித்தார். இதையடுத்து புதுவை குழந்தைகள் பாதுகாப்பு குழு அதிகாரி ராஜேந்திரன் விசாரணை நடத்தினார்.
பின்னர் இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை ஏமாற்றி ராமு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து ராமுவை கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த பெருமுகை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 37), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஷாஜகானின் மனைவி மற்றும் மகள் அவரை விட்டு பிரிந்து சேத்துப்பட்டில் வசித்து வருகின்றனர்.
மனைவியை பிரிந்து தனிமையாக வாழ்ந்து வந்த ஷாஜகான் கடந்த சில மாதங்களாக 10 வயது நிரம்பிய மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாஜகான் நேற்று முன்தினம் இரவு சிறுமியை ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஷாஜகான், சிறுமியை அழைத்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.
அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு ஷாஜகான் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தந்தை வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மைதிலி வழக்குப்பதிந்து ‘போக்சோ’ சட்டத்தில் ஷாஜகானை கைது செய்தார்.
மனநிலை பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பெயிண்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #girlmolestation
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர், கடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவருடைய பக்கத்து வீட்டில் 6 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.
இதையடுத்து அந்த சிறுமி வீட்டை பூட்டிவிட்டு அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். இதை பார்த்த அந்த பிளஸ்-2 மாணவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
பின்னர் சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வலியால் சிறுமி அலறினாள்.
அவளது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சிறுமியின் தாய் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த மாணவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி சுப்பாண்டா பாளையத்தை சேர்ந்தவர் ஹனிபா (62). இவர் அப்பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி வேலைக்கு சென்று திரும்பிய தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து ஹனிபாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காசிமேட்டை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த மாணவிக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் மோகன் (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்தவர்.
இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி மாணவி மாயம் ஆனார். இது குறித்து மாணவியின் தாயார் காசிமேடு போலீசில் புகார் செய்தார்.
காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தார். இந்த நிலையில் 9-ந்தேதி மாணவி மாதவரம் பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டார். விசாரணையில் மாணவி கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.
மாணவியிடம் பழகிய வாலிபர் மோகன், 8-ந்தேதி அதிகாலை மாணவியை ஆந்திர மாநிலம் ரேணி குண்டாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதற்கு அவருடைய நண்பர் விஜய் என்பவர் உறுதுணையாக இருந்துள்ளார்.
ரேணிகுண்டாவில் விஜய்க்கு சொந்தமான வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று மோகன், பாலியல் கொடுமை செய்துள்ளார். பின்னர் மாணவியை மாதவரம் பஸ் நிலையத்தில் கொண்டு விட்டுவிட்டு தப்பிவிட்டார்.
இந்த தகவலை போலீசாரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் ஆந்திரா சென்று மாணவியை பாலியல் கொடுமை செய்த வாலிபர் மோகன், இதற்கு உறுதுணையாக இருந்த வாலிபர் விஜய் ஆகியோரை பிடித்து வந்தனர்.
அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனம் அம்மாள், போக்சோ சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அதை தொடர்ந்து மோகன், விஜய் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
திருச்சி:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக வந்த டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 5-ந்தேதி இரவு கஞ்சா மற்றும் குடிபோதையில் 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பெற்றோர்களே, அந்த 4 பேரையும் வெளியே விடுங்கள், நாங்கள் கொன்று விடுகிறோம் என்று கூறுமளவிற்கு நடந்த இந்த கொடூர சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
திருச்சி ஸ்ரீரங்கம், யாத்திரி நிவாஸ் பகுதியைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய சிறுமி நேற்று மாலை அங்கு உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அவருடன் 18 வயது தோழியும் சென்றார். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடினாலும் நிறைந்த மனதுடன் அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர்.
அதே சமயம் ஆற்றில் தண்ணீர் ஓடாமல் மணல் திட்டாக இருக்கும் இடத்தில் 4 வாலிபர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர். தலைக் கேறிய போதையில் தங்களை மறந்த வாலிபர்களின் பார்வை ஆற்றில் குளித்த சிறுமி மற்றும் அவரது தோழி மீது பட்டது.
காலியான மது பாட்டில்களை தூக்கி எறிந்துவிட்டு சிறுமிகள் குளிக்கும் இடத்திற்கு வந்தனர். போதையுடன் காமமும் தலைக்கேறிய அவர்கள் குளித்துக்கொண்டு இருந்தவர்களின் கைகளை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது சிறுமியின் தோழி அந்த கும்பலிடம் இருந்து தப்பினார்.
ஆனால் 13 வயது சிறுமியால் அந்த காம கொடூர வாலிபர்களிடம் இருந்து தப்ப முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
இதற்கிடையே அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமியின் தோழி, ஊருக்குள் சென்று அந்த வாலிபர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது குறித்து கூறி காப்பாற்றும் படி கதறினார். உடனே பொதுமக்கள் அங்கு சென்று இளைஞர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். அப்போது 2 வாலிபர்கள் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பாலு மற்றும் மகேஷ் என தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அந்த சிறுமிக்கு பரிசோதனை நடக்கிறது. பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரிடமும் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ரவிச்சந்திரன். இன்ஸ்பெக்டர்கள் உமா சங்கர், மும்தாஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது 2 பேர் மட்டுமே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற 2 பேர் யாரும் வருகிறார்களா என புதருக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறினர். அந்த 2 பேர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வாலிபர்களிடம் இருந்து தப்பித்த சிறுமியின் தோழியிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் இதில்அதிரடி தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. #trichycauveryriver #girlmolestation
திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவள் 11 வயது சிறுமி. அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர் கடைக்கு சென்ற சிறுமியை திருக்கோவிலூர் அடுத்த ஆலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம்(வயது 59) என்பவர், வழிமறித்து அருகில் வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி சண்முகம் மீது சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஆரணி:
ஆரணி அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் 5 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். சிறுமி தனது எதிர் வீட்டில் உள்ள உறவினர் மகேந்திரன் (வயது 27). என்பவரிடம் டியூசன்சென்று வந்தார்.
நேற்று வழக்கம் போல் சிறுமி டியூசனுக்கு சென்றுள்ளார். அப்போது மகேந்திரன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது தாயிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவரது தாய் உறவினர்களுடன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் மகேந்திரனிடம் விசாரணை நடத்தி அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது சைல்டு லைன் அலுவலர்களிடம் அந்த சிறுமி தனக்கு தனது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறினார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உதவியுடன் அந்த சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அந்த சிறுமியின் தந்தையை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதானவர் கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை பகவதிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக்(வயது19). அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று 3 வயது சிறுமி இவரது கடைக்கு மிட்டாய் வாங்க வந்துள்ளார்.
அந்த சிறுமியை நைசாக பேசி தனது வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மகளை காணாமல் தேடினர். நீண்டநேரத்திற்கு பின்பு வந்த சிறுமியின் உடலில் மாற்றம் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனை தொடர்ந்து அசோக்கை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை:
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிறுவன குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இவர் கடந்த 2016-ம் வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ராமநாதபுரம் போலீசார் 13 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பின்னர் சிறுவன் ஜாமீனில் வெளியே வந்தான்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிறுவர்களுக்கான விசாரணை ஆணையத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சிறுவன் மீண்டும் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்