என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
Byமாலை மலர்10 Nov 2018 1:24 PM GMT (Updated: 10 Nov 2018 1:24 PM GMT)
சூரம்பட்டி பகுதி பள்ளியில் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது சைல்டு லைன் அலுவலர்களிடம் அந்த சிறுமி தனக்கு தனது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறினார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உதவியுடன் அந்த சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அந்த சிறுமியின் தந்தையை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதானவர் கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X