search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested person"

    திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 17). பிளஸ்-2 முடித்து உள்ளார். இவரும் சிங்காரகோட்டையை சேர்ந்த குமரேசன் மகன் விஜி (18) என்பவரும் காதலித்து வந்தனர்.

    கடந்த மாதம் 2 பேரும் திடீர் என மாயமானார்கள். தனது மகளை விஜி கடத்தி சென்று விட்டதாக ஐஸ்வர்யாவின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.

    தனது மகன் காணாமல் போனதால் குமரேசன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் 2 நாட்களாக வந்து செல்கிறார். பின்னர் விரக்தியில் தற்கொலை செய்தார். இதனிடையே பெரம்பலூரில் பதுக்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் வடமதுரை போலீசார் அங்கு சென்று 2 பேரையும் மீட்டு வந்தனர். பள்ளி மாணவியை கடத்திய குற்றத்துக்காக விஜியை போலீசார் கைது செய்தனர். மாணவியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ஈரோட்டில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் சமீபகாலமாக குழந்தைக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் மட்டும் குழந்தைக்கு எதிராக பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்றும் 6 வயது சிறுமியை 50 வயதான கட்டிட தொழிலாளி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளி இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தங்கராஜ் 6 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவதாக அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். எனினும் தனக்கு நடந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினாள்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் இந்த வழக்கை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

    ஈரோடு மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தங்கராஜ் திடீரென மாயமானார் அவரை போலீசார் தேடி வந்தனர், இந்நிலையில் ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தங்கராஜ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் தங்கராஜ கைது செய்தனர்.

    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் பகுதியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் பகுதியில் ஐயன் வாய்க்காலில் இருந்து சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தல்  நடப்பதாக  தகவல் கிடைத்தது. அதன் பேரில் மண்ணச்சநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சோதனை மேற்கொண்டு சரக்கு ஆட்டோ டிரைவர் கர்ணன் (31) என்பவரை கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தார். 

    இதேபோல் சமயபுரத்தில் மணல் கடத்தல் தகவல் வந்தது.  சப்- இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த சஜித் ( 29) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
    குண்டர் சட்டத்தில் கைதானவரை தவறுதலாக விடுதலை செய்த புழல் சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதில் முறைகேடு நடந்துள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சென்னை தண்டையார்பேட்டை செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஆனால் அவர் தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த எழும்பூர் கோர்ட்டு, ரவியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தது சரியே என உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு நகல் புழல் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி புழல் சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சேகர் அந்த உத்தரவு நகலை சிறை வார்டன் பிரதீப்(26) என்பவரிடம் கொடுத்தார். ரவியின் குண்டர் தடுப்பு சட்டம் உத்தரவை உறுதி செய்து பதிவேட்டில் எழுதும்படியும் கூறினார்.

    2 மாதங்களுக்கு முன்பு கூடுதல் கண்காணிப்பாளர் சேகர் ஓய்வுபெற்றுவிட்டார். இந்தநிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் இருக்க வேண்டிய ரவி சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதை உளவுத்துறை போலீசார் கண்டுபிடித்தனர். இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விடுதலையான ரவி

    குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான ரவி எப்படி விடுதலை ஆனார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயில் உத்தரவை சரியாக படிக்காமல் வார்டன் பிரதீப் வேறு கைதிக்கு பதில் ரவியை தவறுதலாக விடுதலை செய்தாரா? அல்லது ரவியின் உறவினர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக செயல்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் சிறைத்துறை அதிகாரிகளால் சிறை வார்டன் பிரதீப் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவியை போலீசார் தேடி வருகின்றனர். 
    ×