search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warden suspended"

    ஜோலார்பேட்டையில் விடுதியில் மாணவர்களிடம் இருந்து நன்கொடையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்த வார்டனை சஸ்பெண்ட் செய்து உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகில் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி உள்ளது. இதில் ஜவ்வாதுமலை, புதூர் நாடு, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து 35 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் வார்டனாக ஜோலார்பேட்டையை சேர்ந்த பாஸ்கரன் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் விடுதியில் சுகாதாரமில்லாத உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதோடு அடிப்படை வசதிகள் இல்லாததால் நோய் தொற்று அபாயம் இருப்பதாக திருப்பத்தூர் உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவர்கள் மின் விசிறி, மின் விளக்கு இல்லாமல் இருளில் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. சமையல் அறைக்கு சென்று ஆய்வு செய்தபோது காலையில் சமைத்த உணவையே இரவுக்கும் பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று உதவி கலெக்டர் தலைமையில் நகராட்சி கமி‌ஷனர் விசாலாட்சி, ஆதிதிராவிட நல (தனி) தாசில்தார் குமரேசன் ஆகியோர் வார்டனிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவும், அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. மேலும் திருமண நாட்களில் விடுதியில் உணவு சமைக்கப்படாமல் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து உணவை எடுத்து வந்து மாணவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது.

    மேலும் விடுதி வார்டன் பாஸ்கரன் மாணவர்களிடம் இருந்து இதுவரை நன்கொடையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். #tamilnews
    மாணவர்களுக்கான அரிசியை பதுக்கியதற்காக திருத்தணி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி வார்டன் பழனியை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    திருத்தணி:

    திருத்தணி, கனகமா சத்திரம், ஆர்.கே.பேட்டை, நார் தவாடா, மேல்கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 அரசு மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படுவதில்லை என்றும், உணவு தரமானதாக இல்லை என்றும் பல்வேறு புகார்கள் வந்தன.

    மேலும் விடுதி காப்பாளர்கள் மாணவர்களுக்காக சமைக்கப்படும் அரிசியை பதுக்கி ஆந்திராவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    இதையடுத்து இன்று திருத்தணி கோட்டாட்சியர் பவநந்தி, வட்டாட்சியர் நரசிம்மன் மற்றும் அதிகாரிகள் திருத்தணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் திடீரென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு அறையில் அரிசிகள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சுமார் 8 டன் எடை கொண்ட அரிசிகளை ஆந்திராவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து விடுதி காப்பாளர் மற்றும் ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களிடம் உணவு தரம் பற்றி கேட்டு அறிந்தனர்.

    பின்னர் மாணவர்களுக்கான அரிசியை பதுக்கியதற்காக திருத்தணி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி வார்டன் பழனியை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மற்ற மாணவர்கள் விடுதிகளில் உணவு தரம் குறித்தும், அரிசி பதுக்கி விற்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    குண்டர் சட்டத்தில் கைதானவரை தவறுதலாக விடுதலை செய்த புழல் சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதில் முறைகேடு நடந்துள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சென்னை தண்டையார்பேட்டை செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஆனால் அவர் தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த எழும்பூர் கோர்ட்டு, ரவியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தது சரியே என உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு நகல் புழல் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி புழல் சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சேகர் அந்த உத்தரவு நகலை சிறை வார்டன் பிரதீப்(26) என்பவரிடம் கொடுத்தார். ரவியின் குண்டர் தடுப்பு சட்டம் உத்தரவை உறுதி செய்து பதிவேட்டில் எழுதும்படியும் கூறினார்.

    2 மாதங்களுக்கு முன்பு கூடுதல் கண்காணிப்பாளர் சேகர் ஓய்வுபெற்றுவிட்டார். இந்தநிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் இருக்க வேண்டிய ரவி சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதை உளவுத்துறை போலீசார் கண்டுபிடித்தனர். இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விடுதலையான ரவி

    குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான ரவி எப்படி விடுதலை ஆனார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயில் உத்தரவை சரியாக படிக்காமல் வார்டன் பிரதீப் வேறு கைதிக்கு பதில் ரவியை தவறுதலாக விடுதலை செய்தாரா? அல்லது ரவியின் உறவினர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக செயல்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் சிறைத்துறை அதிகாரிகளால் சிறை வார்டன் பிரதீப் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவியை போலீசார் தேடி வருகின்றனர். 
    ×