search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested student"

    வேதாரண்யத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னம் புலத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் நேற்றும் அதே சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவர் மீது வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ஏதும் அறியாத சிறுமியை 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பலாத்காரம் செய்தது சமூக அவலத்தை வெளிப் படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற மனநிலை உருவாக என்ன காரணம்? என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் நல்லொழுக்கம் கடைபிடிக்க பாடதிட்டங்களில் மாற்றம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய பின்னர் திருமணத்திற்கு மறுத்த மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பாண்டி (18) என்பவரும் படித்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

    பாண்டியுடன் நெருங்கி பழகியதில் மாணவி 6 மாத கர்ப்பமானார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி வற்புறுத்தினார்.

    ஆனால் மாணவர் பாண்டி திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியை கைது செய்தனர்.

    செல்போன் திருட்டில் ஈடுபட்ட மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை:

    கோவை மாநகரில் சமீப காலமாக சாலையில் நடந்து செல்பவர்களிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் துணை கமி‌ஷனர் பெருமாள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விபின்(வயது 18), வடகோவையை சேர்ந்த கார்த்திக்(18), தடாகம் ரோட்டை சேர்ந்த ரோகித்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் கார்த்திக் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    விபின் கார் மெக்கானிக் ஆவார். ரோகித் வாஷிங்மிஷின் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார்.

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் சொகுசாக வாழ ஆசைப்பட்டு செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக கூறினார். இவர்களிடம் இருந்து 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மணவாளக்குறிச்சி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவி கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை செதுவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் குளச்சல் பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    விக்னேஷ், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி. படிக்கும் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்தார். அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அந்த மாணவி விக்னேசின் காதலை ஏற்காமல் அவரை புறக்கணித்தார். இதனால் விக்னேஷ், அந்த மாணவியை பின்தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலையில் கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக அந்த மாணவி, தனது தோழியுடன் கருமன்கூடல் பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார். அப்போது விக்னேஷ், தன்னுடன் படிக்கும் மாணவர்களான கழுவன்திட்டவிளையைச் சேர்ந்த ஸ்ரீசுதன் (22), ஆரோக்கியபுரம் ராஜசிங் (20) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார்.

    3 பேரும் அந்த மாணவியை கேலி செய்து பேசினர். அந்த மாணவி அவர்களை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த 3 மாணவர்களும், மாணவியிடம் அத்துமீறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். மேலும் தங்களுக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது, செத்துப்போ என கூறி மாணவியை அவர்கள் 3 பேரும் தாக்கினர். இதில் அந்த மாணவியின் மார்பில் பலத்த அடிபட்டு கீழே சரிந்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் வடிந்து அவர் பேச்சு மூச்சற்ற நிலையில் மயங்கினார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் 3 மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மயங்கி கிடந்த மாணவியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த மாணவி தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் விக்னேஷ், ஸ்ரீசுதன், ராஜசிங் ஆகியோரை கைது செய்தனர். அவர்களில் ராஜசிங் ஜெயிலில் அடைக்கப்பட்டார். விக்னேஷ், ஸ்ரீசுதன் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    இதற்கிடையே மாணவியை தாக்கியபோது அவருடன் நின்ற தோழி, மாணவர்களை தடுக்க முயன்றார். அப்போது தோழியையும் மாணவர்கள் தாக்கினர். இதன் காரணமாக ஏற்பட்ட காயத்தால் தோழியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

    சங்கரன்கோவில் அருகே 11-ம் வகுப்பு மாணவன், 5 வயது சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரை சேர்ந்த 16 வயது சிறுவன் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பக்கத்து வீட்டில் 5 வயது சிறுமி ஒன்று உள்ளது. அந்த சிறுமியிடம் மாணவன் அடிக்கடி பேசி விளையாடி கொண்டிருப்பான்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு அந்த சிறுமி விளையாடி கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த மாணவன் சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து தூக்கி சென்றான். பின்னர் வீட்டின் பின்புறம் அந்த சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டான். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தது.

    பின்னர் சிறுமியின் பெற்றோர் விபரம் கேட்டனர். இதற்கு அவள் நடந்த விபரத்தை கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாணவன் அடைக்கப்பட்டான். 11-ம் வகுப்பு மாணவன், 5 வயது சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×