search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poxco law"

    திருவேற்காட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    திருவேற்காடு சக்ரேஸ்வர் நகரில் உள்ள முள்புதரில் நேற்று மாலை ஒரு சிறுமியின் அழுகுரல் கேட்டது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்றனர். அப்போது பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணிவியை முதியவர் ஒருவர் அங்கு இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது.

    இதனால் அங்கு சென்றவர்கள் அந்த முதியவரை அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர்.

    மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட முதியவரை பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் ஏழுமலை (60). திருவேற்காடு முருகன் நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    தினமும் பள்ளியில் இருந்து அந்த வழியாக வீடு திரும்பும் மாணவியை நோட்டம் பார்த்து அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.#tamilnews
    புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நரியன் புதுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் அன்பரசன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

    அதன்பேரில் கடந்த 19-ந் தேதி மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி விசாரணை நடத்தி, அன்பரசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அன்பரசனுக்கு உடந்தையாக, பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன் செயல் பட்டதாகவும் புகார் எழுந்தது.

    இதனிடையே 2 பேர் மீதும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் தலை மறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    சென்னையில் மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போஸ்கோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில கடந்த வாரம் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அந்த குடியிருப்பின் காவலாளிகள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டப்பிரிவின் கீழ் 17 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னையில் மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெசன்ட்நகர், கொடுங்கையூர், பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

    பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள பிரபலமான சி.பி.எஸ்.இ. பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்ற வாலிபர் சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார். பின்னர் அங்குள்ள சிறிய சந்துக்குள் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற ரவீசந்திரன் தகாத முறையில் நடந்து கொண்டார்.

    இதனை அந்த பகுதி மக்கள் பார்த்துவிட்டனர். வாலிபரின் செயலை நேரில் கண்ட அவர்கள் ஒன்று திரண்டு செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட ரவீந்திரனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர்.

    பின்னர் சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார்.

    கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜெயவேல் என்பவரது 11 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் வெளிமாநிலத்தை சேர்ந்த கோவிந்தகுமார் என்ற வாலிபர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அவரையும் பொது மக்கள் மடக்கி பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். கோவிந்தகுமாரும் கைது செய்யப்பட்டார்.

    கைதான 2 வாலிபர்கள் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    திருவள்ளூரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 6 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இது தொடர்பாக மேலும் 15 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை சேர்ந்த மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 20), தலகாஞ்சேரியை சேர்ந்த நவீன்குமார் (19) ஆகியோர் காதலிப்பது போல நடித்து உள்ளனர். அப்போது அந்த மாணவியை கஞ்சா, மது பழக்கத்துக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இது பற்றி தலகாஞ்சேரியை சேர்ந்த தங்கள் நண்பர்கள் கார்த்திக் (19), அருண் (20), கமல் என்ற ராஜ்கமல் (23), திருவள்ளூரை சேர்ந்த மகேஷ் (20) ஆகியோரிடம் ராஜேஷ் தெரிவித்து உள்ளார். அவர்களும் அந்த மாணவிக்கு மது, கஞ்சா கொடுத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் திருவள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிபிச்சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவியிடம் விசாரித்த போது, தன்னை 21 பேர் வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ராஜேஷ், நவீன்குமார், கார்த்திக், அருண், கமல் என்ற ராஜ்கமல், மகேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

    தலைமறைவாக உள்ள மேலும் 15 பேரை பிடிக்க துணை சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    ×