search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி பாலியல் பலாத்காரம்: போஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது
    X

    சிறுமி பாலியல் பலாத்காரம்: போஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது

    திருச்சியில் நடந்த சென்ற சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து, மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த சிறுமி நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஜான்பாட்ஷா (வயது 29) என்பவர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து, மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

    மேலும் இது பற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து அந்த சிறுமி அவரது  பெற்றோரிடம் தெரிவிக்கவே, கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்  செய்யப்பட்டது. 

    இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் இந்திராகாந்தி விசாரணை நடத்தி, ஜான் பாட்ஷாவை போஸ்கோ மற்றும் கொலை மிரட்டல் சட்ட பிரிவின் கீழ் கைது செய்தார்.
    Next Story
    ×