search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garbage"

    • வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்
    • குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகராட்சி சொந்தமான புளிச்சக்காடு சாலை செல்லும் பகுதியில் உள்ள பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்த குப்பைகள் அவ்வபோது ஏரி ஊட்டப்படுவதாகவும் இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் விளை நிலங்கள், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருவதாக கூறுகின்றனர்.

    தினமும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பிச்சைக்காரன் விடுதியில் உள்ள மாமரங்கள், தென்னை மரங்கள், புளிய மரங்கள் தீயில் கருகி வீனாகி வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த விஜயரெங்கன் கூறுகையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. பிச்சைக்காரன் விடுதியில் சட்ட விரோதமாக குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதை கண்டிக்கும் வகையில் வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் செய்யப் உள்ளோம் என்றார்.

    • அவனியாபுரத்தில் 92, 100-வது வார்டுகளில் தேங்கும் குப்பைகள்-குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள 92, 100 ஆகிய வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இந்த வார்டுகளில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதேபோல் மாநகராட்சி சார்பில் தினமும் மேற்கண்ட வார்டுகளில் குப்பைகள் நவீன பேட்டரி வாகன மூலம் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டன இதனால் குப்பைகள் அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே மலை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

    இதை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாடு, குப்பைகள் தேங்கும் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் பூந்தோட்ட நகர், செம்பூரணி ரோடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சி வரி வசூலிக்கும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த 100-வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    • அரசு பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
    • தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை இரு பக்கமும் சுவர் கட்டி சீரமைக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கினார். ஆணையர் நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதி கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

    செந்தில் செல்வி:-

    பாதாள சாக்கடை திட்டம் மன்னார்குடியில் நிறை வேற்ற உள்ள நிலையில் அதில் இணைப்பு பெறும் வீடுகளு க்கான வைப்புத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும்.

    பாரதிமோகன்:-

    பழங்கள் ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பழக்கடைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    திருச்செல்வி:-

    தனது வார்டுக்கு உட்பட்ட ஆர்.பி. சிவம் நகரில், குப்பை எடுத்து வரும் வாகனங்களை எடை போடுவதற்கான நிலையத்தை அமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    கலைவாணி:-

    அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    எனவே, அந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    ஏபி.அசோகன்:-

    ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் டெண்டர் வைக்கப்பட்டு ள்ளது. அதில் உள்நோக்கம் உள்ளது.

    சுமதி:-

    எம்.ஜி.ஆர் நகர், தெற்கு வீதி, வடம்போக்கி தெரு ஆகியவற்றில் மழைநீர் வடிகாலை சுத்தம் செய்து தர வேண்டும்.

    ஐஸ்வர்யலட்சுமி:-

    தெருக்களில் குப்பை எடுப்பதை குறிப்பிட்ட நேரத்தில் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    சங்கர்:-

    கம்மாள தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    சூர்யகலா:-

    குன்னோஜி ராஜபாளையம் தெருவில் குடிநீர் இணைப்பை விரிவுபடுத்த வேண்டும்.

    ராஜாத்தி:-

    மீன் மார்க்கெட் கழிவுகளை அப்புறப்படுத்த நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    பாலமுருகன்:-

    தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை இரு பக்கமும் சுவர் கட்டி சீரமைக்க வேண்டும்.

    பாலகிருஷ்ணன்:-

    அந்தோணியார் கோவில் தெருமழைநீர் வடிகாலை சீரமைத்து தர வேண்டும்

    துணைத் தலைவர் கைலாசம்:-

    பாமணி சுடுகாடு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரெயில் நிலையம் செல்லும் சாலையின் அருகே உள்ள வாய்க்காலுக்கு இருபுறமும் சுவர் கட்டி சீரமைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு நகர்மன்ற தலைவர் சோழராஜன் பதிலளித்து பேசும்போது:-

    உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்க ப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றார்.

    • செட்டித்தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளக்குளம் உள்ளது.
    • அந்த குளத்தில் தான் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளித்து செல்வார்கள்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோ ட்டை அடுத்த அதிராம்பட்டினம் செட்டி த்தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளக்கு ளம் உள்ளது.

    இந்நிலையில், இந்த வெள்ளக்குளம் பல ஆண்டுக ளாக தூர்வாரப்ப டாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த குளத்தில் தான் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளித்து செல்வார்கள்.

    ஆனால், தற்போது அந்த குளம் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி, குளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக மக்கள் முன்னே ற்ற கழக நகர செயலாளர் வைத்தீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
    • நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கவும், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

    நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவ ணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

    இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நகர் மன்ற துணைத் தலைவர், நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல், நகர துணை செயலாளர் ராஜவேல், நகர்மன்ற உறுப்பி னர்கள் செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், செல்வி ராஜவேல், சண்முக வடிவு, திவ்யா வெங்கடேசன், தாமரைச்செல்வி மணிகண்டன், டி.என்.ரமேஷ், முருகேசன், டபிள்யூ.டி.ராஜா, அண்ணாமலை, அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • லோயர் பஜார் சாலையில் உள்ள தடுப்பு சுவர் இடித்து சீரமைக்கப்பட்டது.
    • இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அடிக்கடி மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி 21-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அடிக்கடி மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.

    எனவே லோயர் பஜார் சாலையில் உள்ள தடுப்பு சுவர் இடித்து சீரமைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடிபாடு பொருட்கள் அகற்றப்படவில்லை.

    மேலும் ஒருசிலர் அங்கு குப்பை மூட்டைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை மலை போல தேங்கி கிடக்கிறது.

    எனவே லோயர்பஜார் பகுதியில் இடிபாட்டு பொருட்கள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கலெக்டர் அதிரடி உத்தரவு
    • நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளிகள், கால்நடை மருத்துவமனை, சிறிய வணிக வளாகங்கள், துணி கடைகள், உள்ளிட்டவைகள் உள்ளன.

    சுற்று வட்டார மக்கள் மட்டுமின்றி, மலைவாழ் மக்களும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அணைக்கட்டுக்கு தான் அதிகம் வருகின்றனர். சிறிய வர்த்தக நகரமாக திகழும் இந்த அணை க்கட்டில் மக்கள் அதிகம் கூடுவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    அணைக்கட்டு பஜாரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. கடைகள், வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சேகரிக்கின்றனர்.

    தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பை களை அணைக்கட்டு- வேலூர் சாலையில் உள்ள கெங்கநல்லூர் சந்தைமேடு அருகே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டு ஏற்படுகிறது. மலைபோல் குவிக்கப்படும் குப்பைகள் சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே தீயிட்டு கொளுத்து கின்றனர்.

    அந்த சமயத்தில் கரும்புகை மண்டலம் உருவாகி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் கண்களில் எரிச்சலை உருவாக்குகிறது.

    இது தொடர்பான செய்தி மாலைமலரில் புகைப்படத்துடன் வெளியானது.

    இதனைத் தொடர்ந்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அணைக்கட்டு சாலை யோரத்தில் குப்பகைளை தீ வைத்து எரிப்பதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது எரிந்து கொண்டிருந்த குப்பை களை தண்ணீர் ஊற்றி அணைத்து கொட்ட ப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இனிமேல் இங்கு குப்பைகள் கொட்ட கூடாது. சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை அகற்றாமல் வைத்திருந்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அணைக்கட்டு அல்லது கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க இடம் வழங்க வேண்டும்.

    மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை உரமாக மாற்றி உடனடியாக அப்புற ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து அணைக்கட்டு தாலுகா ஆஸ்பத்திரி மற்றும் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, வின்சென்ட்ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மிகப்பெரிய நீர் நிலையாக இருந்த ஏரி, சாலை அமைக்கப்படுவதற்காக பாதி அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஆக்கிரமிக்கப்பட்டது.
    • மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    சேர்ந்தே இருப்பது... குப்பை மேடும் கோபுரங்களும்...

    சேராது இருப்பது... சுத்தமும், சுகாதாரமும்...

    கண்டு கொள்வது... கடற்கரையும் காதலர்களும்... கண்டுகொள்ளாதது... கண்ட கண்ட இடங்களில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவதை.

    இதுதான் சென்னையின் நிலை. அழகான நகரம் இப்படி அலங்கோலப்படுத்தப்படுவது தடுக்கப்படுமா? இந்த நகரத்தின் அழகு மீட்டெடுக்கப்படுமா? என்ற ஏக்கம் சென்னை வாசிகளிடம் நெடு நாளாகவே இருக்கிறது. ஆனால் அழகை மீட்பதற்கு பதில் நாளுக்கு நாள் சிதைத்து தான் வருகிறார்கள்.

    நகரம் விரிவடைந்தது. கூடவே நிழல் போல் நரக சூழலும் தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். விரிவாக்கத்தின் அடையாள ரேகை போல் குரோம்பேட்டையில் இருந்து துரைப்பாக்கம் வரை 200 அடி ரேடியல் ரோடு உருவாக்கப்பட்டது.

    இந்தச் சாலை அமைந்த பிறகு அந்தப் பகுதியில் வளர்ச்சி மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

    அதே நேரம் மிகப்பெரிய நீர் நிலையாக இருந்த ஏரி சாலை அமைக்கப்படுவதற்காக பாதி அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஆக்கிரமிக்கப்பட்டது.

    மிச்சமிருந்த ஏரி குப்பை கொட்டும் வளாகம் போல் மாறிவிட்டது.

    குப்பைகள் கட்டிட கழிவுகள் டன் கணக்கில் குவிக்கப்பட்டு இப்போது அந்த ஏரி குப்பை மலையாக மாறி இருக்கிறது. அங்கிருந்து துரைப்பாக்கம் வழியாக பள்ளிக்கரணை சென்றால் மிகப் பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது. லட்சக்கணக்கான டன் குப்பை குவிந்து சில கிலோ மீட்டர் தூரத்திற்கு மலை போல் உயர்ந்து காட்சியளிக்கிறது.

    இந்த குப்பை கிடங்குகள் காரணமாக சதுப்பு நில பகுதி முற்றிலும் பாழ்பட்டு கிடக்கிறது. இந்தப் பகுதி ஐ.டி.நிறுவனங்கள் நிறைந்த பகுதி மழை பெய்தால் தண்ணீரில் கலந்து துர்நாற்றம் வீசும்... வெயில் அடித் தால் நெருப்பு பற்றிக் கொள்ளும். அதில் இருந்து வெளியேறும் புகை வழியாக துர்நாற்றம் வரும். இப்படி ஆண்டு முழுவதும் இந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும்.

    12 ஏக்கர் பரப்பளவில் நான் கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கடல் போல் நீர் நிரம்பி காணப்பட்டது செம்மஞ்சேரி ஏரி. பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

    அதன் பிறகு மெல்ல மெல்ல இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டது. 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதி கட்டிட இடிபாடுகளை கொட்டி கட்டாந்தரை போல் ஆக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. அதற்கு விதிப்படி தேவையான இடத்தை ஏரியில் இருந்து எடுத்து சுற்றுச் சுவரும் கட்டப்பட்டு உள்ளதாக பசுமை தாயகம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கூறினார். அந்த பகுதி யில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயும் இந்த ஏரியில் கொண்டு விடப்பட்டு உள்ளது. ஏற்கனவே தூர்ந்து போன ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் வரும் போது அந்த கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை மூழ்கடிக்கும் என்கிறார்கள்.

    தற்போது கெட்டப்படும் கட்டிட கழிவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் பிளாட் போட்டு விற்கப்படும் என்கிறார்கள். இப்படித்தான் சோழிங்கநல்லூரில் பல குட்டைகள் காணாமல் போய்விட்டதாக ஆதங்கப்பட்டார் நிர்மல்குமார்.

    தென் சென்னையிலேயே இப்படியென்றால் வட சென்னையை கேட்க வேண்டியதில்லை. ஏற்க னவே கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு கொடுமையை அந்த பகுதி வாசிகள் அனுபவித்து வருகிறார்கள்.

    இதேபோல் மிகப்பெரிய நீர் ஆதாரமான ரெட்டேரி ஏரியும் கட்டிட கழிவுகளை கொட்டும் வளாகமாக மாற்றப்பட்டது. பொது மக்கள் போராட்டத்தால் ஓரளவு குறைந்தாலும் ஏரியை சுற்றி ஏராளமான கட்டிட கழிவுகள் லாரி, லாரியாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர்கள் கட்டிட கழிவுகளை இந்த பகுதியில் கொட்டுகிறார்கள். அதை பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்துவதில்லை.

    ரெட்டேரி ஏரியின் தென் கரையோரம் பெரம்பூர்-ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உர உற்பத்தி மையத்தை ஒட்டியுள்ள 3 இடங்களில் கட்டிட இடிபாடுகள் மட்டு மில்லாமல் ஏராளமான கழிவுப் பொருட்களும் இந்த பகுதியில் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது.

    இதனை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    புதிய நீர் நிலைகளை உருவாக்குவது கடினம். இருக்கும் நீர் நிலைகளை யாவது பாதுகாப்பதில் கவனம் செலுத்தலாமே.

    • பன்னம் சத்திரம் பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது
    • விரைவில் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன .இந்த கடைகளில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள், கேரிபேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கப்புகள், அழுகிய காய்கறிகள், அழுகிய பொருட்களை தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளையும் தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.மழை நீர் கொட்டி கிடைக்கும் கழிவுகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு புழுக்கள் உற்பத்தியாகி ஆயிரக்கணக்கான கொசுக்கள் உருவாகிறது. இந்த கொசுக்கள் அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ள குடியிருப்பு வாசிகளை தீண்டுவதால் டெங்கு ,மலேரியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் இப்பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மாணவா்களுக்கு நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    • குப்பைகள் கொட்டுவதையும், அவற்றுக்கு தீ வைப்பதையும் நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட அகிலாண்டபுரம் பகுதியில் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியிலுள்ள சிலா் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு அருகில் குப்பைகள் கொட்டுவது, அவற்றுக்கு தீ வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

    பள்ளிக்கு அருகில் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மாணவா்களுக்கு நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, தீ வைக்கப்படும் குப்பைகளில் இருந்து எழும் புகை மாணவா்களை பாதிக்கிறது.

    எனவே, பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு அருகே குப்பைகள் கொட்டுவதையும், அவற்றுக்கு தீ வைப்பதையும் நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். 

    • குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
    • இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    தென் இந்தியாவின் மான்செஸ்டர், தொழில்களின் நகரம் என பல்வேறு பெயர்களுடன் தாங்கி நிற்கிறது கோவை மாவட்டம்.

    இந்த நகர் கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்ைப கொடுக்கும் நகரமாகவும் இருந்து வருகிறது. தற்போது கோவை மாநகரின் பல பகுதிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவுபடுத்தப்பட்டு, அந்த பகுதிகள் எல்லாம் அழகுற காட்சியளிக்கிறது.கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் குப்பைகள் அள்ளப்பட்டு அந்த பகுதி சுத்தமாக காட்சி அளிக்கிறது. ஆனால் ஒரு சில பகுதிகளில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவியல், குவியலாக கிடக்கிறது.

    கோவை மாநகரில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை தங்களது வேலையை தொடங்கும் அவர்கள் மாலை வரை பணியாற்றுகிறார்கள். குப்பைகளை சேகரித்து மாநகரை தூய்மையான கோவையாக வைத்து கொள்வதில் அவர்களுக்கு தான் பெரும் பங்கு உள்ளது.

    கோவை மாநகரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 35 ஆயிரம் டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் ஏராளமான பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதையும் நாம் பார்த்து தான் வருகிறோம்.

    இப்படி கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியை கடக்கும் மக்கள் மிகவும் சிரமத்துடனேயே சென்று வருகிறார்கள். மேலும், குப்பைகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள், வியாதிகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

    கோவை சாய்பாபா காலனியில் என்.டி.சி மில் குவாட்டர்ஸ் அருகே நீண்ட நாட்களாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சாப்பிடுவதற்காக, ஆடு, மாடுகள் அங்கு சுற்றி திரிந்து வருகின்றன.

    அப்படி வரும், ஆடு மாடுகள் குப்பைகளை இழுத்து ெகாண்டு வந்து சாலையில் போட்டு விட்டு செல்கின்றன. இதனால் அந்த சாலைகளில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்வதே சிரமமாக உள்ளது.

    இந்த பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதி ஆகும். இங்குள்ள பொதுமக்கள் விடிந்தவுடன் நடைப்பயிற்சி செல்லும்போது குப்பையை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட நாட்கள் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். சாலையின் நடு பகுதி வரை குப்பை பரந்து விரிந்து கிடப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலையும் அங்கு அரங்கேறி வருகிறது.

    ராஜா அண்ணாமலை சாலை என்பது கோவை சாய்பாபா காலணியின் மிக முக்கியமான சாலை ஆகும். என்.எஸ். ஆர் ரோடு, அழகேசன் ரோடு, பாரதி பார்க் ரோடு, பாரதி பார்க் ரோட்டின் குறுக்கு சாலைகள் இவை அனைத்தையும் இணைக்க கூடிய முக்கியமான சாலையாகும். இந்த பகுதியிலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    இந்த குப்பைகள் தேங்கி கிடக்கும் இடத்திற்கு நேர் எதிரே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர். தினமும் காலையிலும், மாலையிலும் அப்பள்ளி மாணவ, மாணவிகளும், அவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்களும் இந்த குப்பையை தாண்டி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று எதுவும் ஏற்படும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் தினமும் தவித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் கடந்து வரும் இந்த சாலை இப்படி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது போன்று மாநகரின் பல பகுதிகள் மற்றும் சாக்கடை கால்வாய்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்று காணப்படுகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தூய்மையான நகரம், சுத்தமான நகரம், ஸ்மார்ட் சிட்டி என்று மார்தட்டி கூறிவரும் சூழ்நிலையில் இத்தகைய குப்பைமேடுகள் மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. குடியிருப்புகளுக்கு நடுவே இவ்வாறு குப்பை தேங்குவது மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும். இந்த அவல நிலை மாற வேண்டும்.

    இதில் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை. நகரத்தை சுத்தமாக வைப்பது மட்டுமன்றி, வரப்போகும் நோயிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் பொதுமக்கள் தயார் நிலையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கோவை மாநகரப் பொருத்தவரை சுகாதாரப் பணியாளர்கள் தினமும் வீட்டு வாசலுக்கு வந்து குப்பைகளை சேகரித்து விட்டு செல்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அவர்கள் வரும் சமயத்தில் குப்பைகளை போடாமல் விட்டுவிடுகின்றனர். பின்னர் அந்த குப்பையை எங்கே போடுவது என்று தெரியாமல் தேவையில்லாத இடத்தில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். ஒவ்வொருவரும் என் நகரத்தை நான் தூய்மையாக வைத்திருப்பேன் என்று உறுதிமொழி எடுத்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அனாசியமான இடத்தில் குப்பைகள் தேங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. அவ்வாறு கோவை மாநகராட்சியும் நாமும் இணைந்து செயல்பட்டால் நகரும் தூய்மையாகும். நாமும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலத்துக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சுகாதார பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
    • 2-வது மற்றும் 3-வது மண்டலத்தில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலத்துக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சுகாதார பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தினர் மேற்கொள்ளும் சுகாதார பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் 3-வது மண்டல அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் வினோத் மற்றும் 2-வது மற்றும் 3-வது மண்டல கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இதுபோல் 1-வது மண்டல அலுவலகத்தில் 1-வது மற்றும் 4-வது மண்டல வார்டுகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி மற்றும் 1-வது, 4-வது மண்டல வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றார்கள்.

    ஏற்கனவே 2-வது மற்றும் 3-வது மண்டலத்தில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். அதே நிறுவனத்துக்கு 4 மண்டலத்துக்கான குப்பை அள்ளும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    அப்போது 1-ந் தேதி முதல் 1-வது மற்றும் 4-வது மண்டல பகுதியில் குப்பை அள்ளும் பணியை தனியார் மேற்கொள்வதை 2 வாரங்களுக்கு பார்வையிட்டு அதன்பிறகு மேல்நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×