search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் பள்ளிக்கு அருகில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க ேகாரிக்கை
    X

    கோப்புபடம்

    காங்கயத்தில் பள்ளிக்கு அருகில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க ேகாரிக்கை

    • குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மாணவா்களுக்கு நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    • குப்பைகள் கொட்டுவதையும், அவற்றுக்கு தீ வைப்பதையும் நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட அகிலாண்டபுரம் பகுதியில் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியிலுள்ள சிலா் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு அருகில் குப்பைகள் கொட்டுவது, அவற்றுக்கு தீ வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

    பள்ளிக்கு அருகில் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மாணவா்களுக்கு நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, தீ வைக்கப்படும் குப்பைகளில் இருந்து எழும் புகை மாணவா்களை பாதிக்கிறது.

    எனவே, பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு அருகே குப்பைகள் கொட்டுவதையும், அவற்றுக்கு தீ வைப்பதையும் நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    Next Story
    ×