search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garbage"

    • விற்பனையாகாமல் நின்று போன மாவிலைகள், வாழைக் கன்றுகளை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர்.
    • பூஜை முடிந்த பின் இன்னும் அதிகமாக குப்பைகள் குவிந்தது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பூர் சாலை, கடைவீதி, சென்னிமலை சாலை, கோவை சாலை, முத்தூர் சாலை பிரிவு உள்பட நகரின் பல இடங்களில் ஆயுதபூஜை பொருட்கள் விற்க திடீர் சாலையோரக் கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சுமார் 75 கடைகளில் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட வாழைக் கன்றுகள், மாவிலைகள், பூக்கள், தேங்காய், இளநீர் போன்ற ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்பட்டன.

    இத்துடன் வாழைப்பழம், பொரி, சூடம், திருநீறு, சந்தனம் போன்ற பூஜைப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. யஇவற்றில் விற்பனையாகாமல் நின்று போன மாவிலைகள், வாழைக் கன்றுகளை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். இத்துடன் கடைகளிலிருந்து ஏராளமான இதர குப்பைகளும் குவிந்து கிடந்தது. தவிர ஆயுத பூஜைக்காக கடைகள், வணிக வளாகங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்த போது கிடைத்த உபயோகமற்ற பொருட்கள் ஆங்காங்கே குவிந்தது. பூஜை முடிந்த பின் இன்னும் அதிகமாக குப்பைகள் குவிந்தது.

    வழக்கமாக காங்கயம் நகரில் நாள்தோறும் சுமார் 10 டன் வரை குப்பைகள் அகற்றப்படும். ஆனால் ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக குப்பைகள் சேர்ந்தது. இதனால் 16 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அகற்றப்படாத குப்பைகளை உரிய நேரத்தில் அகற்றுமாறு காங்கயம் நகராட்சி நிர்வாகத்துக்கு நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அப்பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
    • குவிந்து வரும் குப்பை காரணமாக ஈக்கள், கொசுக்கள் ஆகியவை வீட்டில் எந்த நேரமும் மொய்த்து வருகிறது

    குனியமுத்தூர்,

    கோவை பூ மார்க்கெட் அருகே வி.சி.வி லே-அவுட் அமைந்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி இதுவாகும்.

    இப்பகுதியில் அருகருகே 2 குப்பை தொட்டிகள் உள்ளது. 2 குப்பைத்தொட்டிகளும் குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை ரோட்டிலேயே வீசி செல்லும் அவலநிலை தற்போது உள்ளது. இதனால் குப்பைகள் நடுரோட்டில் வந்து காலில் மிதிபடும் அளவுக்கு கிடக்கிறது.

    இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் அந்த வழியாக செல்பவர்கள் குப்பைகளை இழுத்துக் கொண்டே செல்லும் நிலையும் காணப்படுகிறது.

    இதனால் சாலை முழுவதும் குப்பைமயமாக காட்சி அளிக்கிறது. மேலும் அப்பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இந்த குப்பை தேங்கி இருக்கும் பகுதிக்கு எதிர்புறமும், பக்கவாட்டிலும் எண்ணற்ற உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதனால் அங்கு வந்து உணவருந்தும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

    அருகிலேயே நடுநிலைப்பள்ளி ஒன்றும், திருமண மண்டபம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் அந்த வழியாக நடந்து செல்வது வழக்கம்.

    அப்படி செல்லும் பகுதியில் சாலை முழுவதும் குப்பையாக கிடப்பது மக்களுக்கு முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.

    மேலும் குவிந்து வரும் குப்பை காரணமாக ஈக்கள், கொசுக்கள் ஆகியவை வீட்டில் எந்த நேரமும் மொய்த்து வருகிறது என கூறும் பொதுமக்கள், இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    எனவே கோவை மாநகராட்சியினர் அவ்வப்போது குப்பைகளை அப்புறப்படுத்தி அந்த பகுதியை, சுகாதாரமான பகுதியாக உருவாக்க வேண்டும் என்று பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சேறும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் மணவாளன் நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டிவந்தனர்.

    ஆனால் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்பட்டு பின்னர் வெங்கத்தூர், கன்னிமாநகர் பகுதியில் பள்ளி அங்கன்வாடி குடியிருப்புகள் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது.

    இதில் தினம்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் மலை போல் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை தற்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைத்து கொட்டப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான டிராக்டர்கள் மூலம் கொட்டப்படும் கழிவுகள் சாலையோரம் குவிந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனம் மற்றும் பொது மக்கள் சென்று வரும் நிலையில் குப்பை கழிவுகளால் தொற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கழிவுகளில் பிளாஸ்டிக், தெர்மாகோல், மெத்தை, முட்டை கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கால் நடைகள், நாய்கள் அதனை இழுத்து சாலையில் போட்டு சென்று விடுகின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குப்பை கழிவுகளில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    எனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அருந்ததியர் பாளையம் பகுதியில் தேங்கிய மழைநீர் கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வைகுண்ட பெருமாள் கோவில் குளம், உலக அளந்தார் கோவில் குளத்திற்கு வரும் மழைநீர் வரத்து கால்வாய்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    பின்னர் அருந்ததியர் பாளையம் பகுதியில் தேங்கிய மழைநீர் கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மஞ்சள் நீர்கால் வாயை பார்வையிட்டு அதன் பகுதிகளில் உள்ள மக்களிடம் குப்பைகளை வடிநீர் கால்வாயிகளில் போட வேண்டாம் என்று பொதுமக்களை கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டார். இதையடுத்து ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் திருப்பருத்தி குன்றம் இரட்டை கால்வாய் தூர்வாரும் பணி, காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாநகராட்சி பொறியாளர் கணேசன், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் நீல்முடியான், உதவி பொறியாளர் மார்கண்டேயன் உடன் இருந்தனர்.

    • குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேருயுவகேந்திரா இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்களால் குப்பையில்லா இந்தியா தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி வள்ளல் சீதக்காதி ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கி சேதுபதி நகர் 5-வது தெரு வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மக்கும் குப்பைகள், மக்காத குப்பை என 50 கிலோ எடையுள்ள குப்பைகளை மாணவர்கள் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டனர். இந்நிகழ்ச்சியை குற்ற பிரிவு பொருளாதார காவல் ஆய்வாளர் நந்தக்குமார், சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் தொடங்கி வைத்தனர். மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    • நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    • சிறுதொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சியில் நாள்தோறும் 100 கிலோவுக்கு மேல் குப்பைகள், கழிவுகள் உருவாக்கும் திருமண மண்டபம், உணவகம், வணிக வளாகம், சிறுதொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

    புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், குப்பைகள், கழிவுகள் உண்டாக்கும் நிறுவனங்கள் அனைத்தும் நகராட்சியிடம் பதிவு செய்ய வேண்டும். குப்பை களை மக்கும், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வழங்க வேண்டும். தரம் பிரிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
    • 300 ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. இந்த சிலைகளை பாலவாக்கம், திருவான்மியூர், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதியில் கரைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. இதற்காக ராட்சத கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட போது கொண்டுவரப்பட்ட மாலை, பூஜை பொருட்கள், மரக்கட்டைகள், வாழை இலைகள், கயிறு, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரைகளில் குவிந்து கிடந்தன. இதனை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். மொத்தம் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டு 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி குப்பை கிடங்கு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அதிராம்பட்டினத்தில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடத்தினர்.
    • 9 வது வார்டில் குப்பைகள் சுத்தம் செய்து, கொசுமருந்து அடித்தனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகராட்சி சார்பில் தினந்தோறும் அதிகாலையில் ஒவ்வொரு வார்டிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்று வருகிறது.

    இதனடிப்படையில் இன்று காலை அதிராம்பட்டினம் 9 வது வார்டில் குப்பைகள் சுத்தம் செய்தல், கால்வாய் சுத்தம் செய்தல், மருந்து தெளித்தல், கொசுமருந்து அடித்தல் போன்ற ஒட்டுமொத்த பணிகள் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆரோக்கியசாமி, களப்பணி உதவியாளர் பத்மினி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் சந்தானம், 9வது வார்டு உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    • குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.
    • குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.

    வேதாரண்யம்நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றுவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    நகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி கடற்கரையில் தூய்மை பணி மேலும் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று வேதாரணியம் குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிப்பது எப்படிஅதில் இருந்து உயரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்திநகராட்சி ஆணையர் வெங்கட லெட்சுமணன் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சியில் குப்பை கிடங்கில் பணிபுரியும் பணியாளர்கள் குப்பைகளை எப்படி கையாளுகின்றனர் மக்கும் குப்பை மக்காத குப்பைதரம் பிரிப்பது எவ்வளவு சிரமங்கள் உள்ளன குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி என்பது குறி த்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது நகரமன்ற உறுப்பி னர்கள் நகராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி ஊழியக்காரன்தோப்பு நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஈசானி யத்தெருவில் அமைந்துள்ள நகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நகராட்சி ஆணையர் வி.ஹேமலதா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் முன்னிலை வகித்தார். நகரமைப்பு ஆய்வர் மு.மரகதம் மற்றும் சுகாதார ஆய்வர் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு விழிப்பு ணர்வு செயல்விளக்கம் அளித்தனர்.

    அப்போது 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பி.கஸ்தூரிபாய் மற்றும் 5 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி பங்கேற்றனர்.

    • மதுரையில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கியுள்ளது.
    • இதனால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.

    மதுரை

    தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. எல்லைகள் அதிகரித்தாலும் அதற்காக எந்த வசதிகளும் தற்போது வரை நிறைவேற்றப்பட வில்லை.

    விரிவாக்க பகுதியான அவனியாபுரம், வில்லா புரம், வண்டியூர், திருப்ப ரங்குன்றம் போன்ற பகுதி களில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை வசதி போன்றவை கொண்ட வரப்படவில்லை.

    மேலும் வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. மாந கராட்சி சாா்பில் குப்பை களை சேகரிப்பதற்காக கொடுக்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் 90 சதவீதம் பழுதடைந்து வெறும் காட்சி பொருளாக உள்ளன. இதனால் மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் 100 சதவீதம் மனித உழைப்பை நம்பியே உள்ளது.

    இதன் காரணமாக மாநகராட்சியில் குப்பைகள் முழுவதும் அகற்றப்படு வதில்லை. இதனால் முக்கிய சாலைகள், தெருக் கள் என அனைத்து பகுதி களிலும் குப்பைகள் மலை போல் குவிகின்றன. பண் டிகை காலங்களில் வழக் கத்தை விட குப்பைகள் அதிகளவில் சேருகின்றன. இத னால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா மதுரையில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக வாழை மரம், மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் நேற்று இரவு முதல் குவியல் குவியலாக குப்பை தொட்டியில் பொதுமக்கள் போட ஆரம்பித்தனர். சிலர் நடுரோட்டிலும் குப்பைகள் கொட்டுவதை பார்கக முடிகிறது.

    இதன் காரணமாக இன்று காலை மதுரை நகரம் குப்பை காடாக காட்சியளித்தது. குறிப்பாக பெரியார் பஸ்நிலையம், மாசி வீதிகள், ஜெய்ஹிந்துபுரம், மகால் பகுதிகள், ஜீவா நகர், செல்லூர், அண்ணாநகர், பி.பி.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் டன் பகுதியில் குப்பைகள் தேங்கின.

    பணியாளர்கள் பற்றா குறையால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மழை பெய்ததாலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் இன்னும் அதற்கான முன்னெடுப்பை தொடங்க வில்லை. இதனால் ஸ்மார்ட் சிட்டி தற்போது சுகாதார சீர்கேட்டில் உள்ளது.

    • 10 நுண்உர செயலாக்க மையங்கள் மூலமாக குப்பைகள் தரம் பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது.
    • வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி யின் அனைத்து கோட்டங்க ளிலும் மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க தொடர் நிகழ்வின் ஓர் அங்கமாக தஞ்சாவூர் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதற்கு மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் தலைமை வகித்தார்.

    ஆணையர் சரவணகுமார் , மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்போது குப்பைகள் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி உருவாகிறது.

    "எனது குப்பை எனது பொறுப்பு" என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றி வரும் பரப்புரையயளர்கள் மூலமாக 51 வார்டுகளிலும் உள்ள வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு ஆண்டாக ஜெபமாலை புரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு செல்லாத வகையில் தூய்மை பணியாளர்கள் இணைந்து கொண்டு தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் செயல்பட 10 நுண்உர செயலாக்க மையங்கள் மூலமாக மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் தரம் பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களின் பணியானது மகத்தான பணி என்று பாராட்டினர்.

    இதனை யடுத்து 14 கோட்டங்களிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் லெட்சுமி, மாரியாயி, பாலகிருஷ்ணன், உலகநாதன், ராஜ்குமார், சுசிலா, சண்முகம், கணபதி, முத்துசாமி, முருகேசன், குருசாமி, கனகவள்ளி ஆகியோருக்கு மாலை அணிவித்து கீரிடம் சூட்டி நினைவு பரிசினை வழங்கினர்.

    ×