என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் அபராதம்
- நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
- சிறுதொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை நகராட்சியில் நாள்தோறும் 100 கிலோவுக்கு மேல் குப்பைகள், கழிவுகள் உருவாக்கும் திருமண மண்டபம், உணவகம், வணிக வளாகம், சிறுதொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், குப்பைகள், கழிவுகள் உண்டாக்கும் நிறுவனங்கள் அனைத்தும் நகராட்சியிடம் பதிவு செய்ய வேண்டும். குப்பை களை மக்கும், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வழங்க வேண்டும். தரம் பிரிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story






