search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலைகள் கரைப்பு: சென்னை கடற்கரையில் 2 நாளில் 150 டன் குப்பைகள் அகற்றம்
    X

    விநாயகர் சிலைகள் கரைப்பு: சென்னை கடற்கரையில் 2 நாளில் 150 டன் குப்பைகள் அகற்றம்

    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
    • 300 ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. இந்த சிலைகளை பாலவாக்கம், திருவான்மியூர், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதியில் கரைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. இதற்காக ராட்சத கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட போது கொண்டுவரப்பட்ட மாலை, பூஜை பொருட்கள், மரக்கட்டைகள், வாழை இலைகள், கயிறு, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரைகளில் குவிந்து கிடந்தன. இதனை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். மொத்தம் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டு 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி குப்பை கிடங்கு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×