என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு கிரீடம் சூட்டி கவுரவிப்பு
- 10 நுண்உர செயலாக்க மையங்கள் மூலமாக குப்பைகள் தரம் பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது.
- வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி யின் அனைத்து கோட்டங்க ளிலும் மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க தொடர் நிகழ்வின் ஓர் அங்கமாக தஞ்சாவூர் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் தலைமை வகித்தார்.
ஆணையர் சரவணகுமார் , மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்போது குப்பைகள் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி உருவாகிறது.
"எனது குப்பை எனது பொறுப்பு" என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றி வரும் பரப்புரையயளர்கள் மூலமாக 51 வார்டுகளிலும் உள்ள வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு ஆண்டாக ஜெபமாலை புரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு செல்லாத வகையில் தூய்மை பணியாளர்கள் இணைந்து கொண்டு தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் செயல்பட 10 நுண்உர செயலாக்க மையங்கள் மூலமாக மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் தரம் பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது.
மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களின் பணியானது மகத்தான பணி என்று பாராட்டினர்.
இதனை யடுத்து 14 கோட்டங்களிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் லெட்சுமி, மாரியாயி, பாலகிருஷ்ணன், உலகநாதன், ராஜ்குமார், சுசிலா, சண்முகம், கணபதி, முத்துசாமி, முருகேசன், குருசாமி, கனகவள்ளி ஆகியோருக்கு மாலை அணிவித்து கீரிடம் சூட்டி நினைவு பரிசினை வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்