search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பைகளை கையாளுவது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி
    X

    குப்பை கிடங்கில் குப்பைகளை கையாளவது குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கபட்டது.

    குப்பைகளை கையாளுவது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி

    • குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.
    • குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.

    வேதாரண்யம்நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றுவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    நகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி கடற்கரையில் தூய்மை பணி மேலும் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று வேதாரணியம் குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிப்பது எப்படிஅதில் இருந்து உயரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்திநகராட்சி ஆணையர் வெங்கட லெட்சுமணன் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சியில் குப்பை கிடங்கில் பணிபுரியும் பணியாளர்கள் குப்பைகளை எப்படி கையாளுகின்றனர் மக்கும் குப்பை மக்காத குப்பைதரம் பிரிப்பது எவ்வளவு சிரமங்கள் உள்ளன குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி என்பது குறி த்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது நகரமன்ற உறுப்பி னர்கள் நகராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×