search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார்மயமாக்கல்"

    • மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலத்துக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சுகாதார பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
    • 2-வது மற்றும் 3-வது மண்டலத்தில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலத்துக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சுகாதார பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தினர் மேற்கொள்ளும் சுகாதார பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் 3-வது மண்டல அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் வினோத் மற்றும் 2-வது மற்றும் 3-வது மண்டல கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இதுபோல் 1-வது மண்டல அலுவலகத்தில் 1-வது மற்றும் 4-வது மண்டல வார்டுகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி மற்றும் 1-வது, 4-வது மண்டல வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றார்கள்.

    ஏற்கனவே 2-வது மற்றும் 3-வது மண்டலத்தில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். அதே நிறுவனத்துக்கு 4 மண்டலத்துக்கான குப்பை அள்ளும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    அப்போது 1-ந் தேதி முதல் 1-வது மற்றும் 4-வது மண்டல பகுதியில் குப்பை அள்ளும் பணியை தனியார் மேற்கொள்வதை 2 வாரங்களுக்கு பார்வையிட்டு அதன்பிறகு மேல்நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×