search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்
    X

    பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

    • பன்னம் சத்திரம் பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது
    • விரைவில் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன .இந்த கடைகளில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள், கேரிபேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கப்புகள், அழுகிய காய்கறிகள், அழுகிய பொருட்களை தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளையும் தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.மழை நீர் கொட்டி கிடைக்கும் கழிவுகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு புழுக்கள் உற்பத்தியாகி ஆயிரக்கணக்கான கொசுக்கள் உருவாகிறது. இந்த கொசுக்கள் அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ள குடியிருப்பு வாசிகளை தீண்டுவதால் டெங்கு ,மலேரியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் இப்பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×