search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free"

    • தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் -டீ கல்லூரியில் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,) திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    கடந்த 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 150 பேருக்கு அப்பேரல் பேஷன் டிசைன் பயிற்சி அளிக்க கல்லூரியின் திறன் பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உபகரணங்களுடன் இலவசமாக பேஷன் டிசைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ் 2 மற்றும் அதற்குமேல் படித்த கிராமப்புற இளைஞர்கள் இப்பயிற்சியில் இணையலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைக்கு அலங்காரம் மற்றும் பூஜைகள் அந்தந்த பகுதி நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது.

    தாராபுரம் :

    இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி தாராபுரம் வட்டாரத்திற்குட்பட்ட குண்டடம், மூலனூர், தாராபுரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதியில் உள்ள குக்கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் 31-ந் தேதி காலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அன்று அதிகாலை முதல் 10 மணி வரை விநாயகர் சிலைக்கு அலங்காரம் மற்றும் பூஜைகள் அந்தந்த பகுதி நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி மதியம் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அமராவதி ரவுண்டானாவில் வெளியூரிலிருந்து வரும் விநாயகர் சிலைகள் ஒன்று திரண்டு கடைவீதி, பூக்கடை வீதி வழியாக என்.என்.பேட்டை சென்று பழைய அமராவதி ஆற்று பாலம் அருகே ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    விநாயகர் சிலை வேண்டுவோர் தாராபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
    • தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சேலம் கோட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.

    சீருடை

    நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். சீருடை அணிந்திருந்தாலே மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்பதில்லை. மேலும், மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடப்பாண்டுக்காக இலவச பஸ் பாஸ் பயண அட்டை மற்றும் 50 சதவீ தம் கட்டணம் சலுகை பயன்படுத்தும் அட்டை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மாணவர்க ளின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் பள்ளிகளிடம் இருந்து, அந்தந்த பணிமனைகளில் கேட்டு பெறப்பட்டுள்ளது.

    2.75 லட்சம் பஸ் பாஸ்கள்

    அதன்படி, சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் பயணிக்கக்கூடிய அட்டையும் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நலச் சேவை அமைப்பினர் தலைவர் என்.ஈஸ்வரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனா். அவா்கள், ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினா்.

    இது குறித்து மக்கள் நல சேவை அமைப்பின் தலைவா் ஈஸ்வரி கூறுகையில் கடந்த 3 மாதங்களாக இலவச வீட்டு மனை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம். இனியும் தாம–தப்படுத் தும்பட்சத்தில் காலியாக உள்ள அரசுக்குச் சொந்த மான நிலங்களில் நாங்களாகவே குடியேறி விடு–வோம் என்றாா்.

    • சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.750 உதவித்தொகையுடன் பெண்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.
    • மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இன்டர்நெட் வசதியுடன் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் கலெக்டர் பங்களா அருகே அய்யந்திருமாளிகை ரோட்டில் இயங்கி வரும் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. இங்கு சேருவதற்கு 10-ம் வகுப்பு தேறிய, தவறிய மற்றும் பட்டம் பெற்ற பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    ஓராண்டு தொழிற்பிரிவுகளான கணினி இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர், வரவேற்பு கூட அலுவலக உதவியாளர், 2 ஆண்டுகள் தொழிற்பிரிவுகளான கட்டிடப்பட வரைவாளர், மின்சார பணியாள், கம்பியர் மின்னணுவியல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, கம்பியர் கருவிகள், ஏ.சி., பிரிட்ஜ் டெக்னீசியன் ஆகிய பயிற்சிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.

    மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இன்டர்நெட் வசதியுடன் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் கணினி மற்றும் தொழிற்கல்வி பெற விரும்பும் பெண்கள், இல்லத்தரசிகள் பயிற்சியில் சேரலாம். வயது வரம்பு கிடையாது. பயிற்சி கட்டணம் கிடையாது.

    இலவச பஸ் பாஸ் மற்றும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். பாடப்புத்தகம், வரைபட கருவிகள், 2 செட் சீருடை மற்றும் அதற்கான தையல் கூலி ஆகியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும். வருகிற 20-ந் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான விலையில்லா வேட்டி- சேலைகள் லாரிகளில் திருச்சிக்கு வந்து சேர்ந்தன.
    திருச்சி:

    தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விலையில்லா வேட்டி-சேலை வழங்குவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து எல்லா மாவட்டங்களுக்கும் வேட்டி-சேலைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேட்டி-சேலைகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்து உள்ளன. திருச்சி மேற்கு தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலைகள் நேற்று காலை வந்தன. வேட்டி-சேலை மூட்டைகளை லாரியில் இருந்து இறக்கிய தொழிலாளர்கள் அதனை தனி அறைக்கு கொண்டு சென்று அடுக்கி வைத்தனர்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் சுமார் 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவற்றில் அரிசி பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் பச்சரிசி, முந்திரி பருப்பு, சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி முதல் வாரம் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்படும் என்று சென்னிமலையில் நடந்த விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
    சென்னிமலை:

    சென்னிமலையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. அதற்கு 85 மருத்துவ குழுக்களை உருவாக்கி சிகிச்சை கொடுத்து தற்போது கோமாரி நோய் கட்டுக்குள் உள்ளது.

    அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் நோய் தாக்குதல் இருந்தது. அங்கும் 50 சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு நோய் கட்டுக்குள் உள்ளது.

    மேலும் நோய் பரவாமல் தடுக்க இன்னும் 15 நாட்களுக்கு கால்நடை சந்தைகள் நடப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் நோய் பரவாமல் தடுக்கப்படும். சத்தியமங்கலம் பகுதியில் நோய் பரவல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கும் மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்.

    ஈரோடு, திருப்பூர் உள்பட 6 மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை பாலி கிளினிக்குகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது கோமாரி நோய் தாக்குதலில் இறந்த கால்நடைகளை கணக்கெடுத்து வருகிறோம். இவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

    கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு நிதி கொடுத்த பின்பு விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
    மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அபிஜித் சோனாவானே என்ற டாக்டர் வீடு இல்லாத நடைபாதை வாசிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். #Punedoctor #AbhijeetSonawane #treatsforfree
    மும்பை:

    இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் டாக்டர்களை அனைவரும் கடவுளாக பார்க்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அபிஜித் சோனாவானே என்ற டாக்டர் தினமும் கோவில்களுக்கும், ஆன்மீக ஸ்தலங்களுக்கும் சென்று அங்குள்ள நடைபாதை வாசிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.



    இதுகுறித்து டாக்டர் அபிஜித் சோனாவானே கூறுகையில், ‘எனது வாழ்வின் முக்கியமான நெருக்கடியின்போது வீடுகள் இல்லாத இவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர். தற்போது என்னுடைய புனிதமிக்க தொழில் மூலம் நான் அவர்களுக்கு உதவி செய்கிறேன். இதன் மூலம் சமூகத்துக்கு நான் நன்றிகடன் செலுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

    தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை புனே நகரின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கிறார். நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை வழங்குவது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு மருந்துகளும் இலவசமாக அளித்து வருகிறார். நோயாளிகளின் நிலைமை மோசமாக இருக்கும்பட்சத்தில் அவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பரிந்துரைத்து அனுப்பி வைக்கிறார்.



    இவரது இந்த மனித நேயத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக நடைபாதை வாசிகளிடமும், உடல் ஊனமுற்றோரிடமும் இவர் சகஜமாக உரையாடி அவர்களின் மனக்குறைகளையும் கேட்டறிகிறார். அதே சமயம், நல்ல உடல்நிலையில் இருந்து பிச்சை எடுப்பவர்களை உழைத்து வாழும்படி அறிவுறுத்தியும் வருகிறார்.

    மருத்துவ தொழில் வியாபாரம் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் டாக்டர்களை கடவுளாக பார்ப்பதற்கான தேவையான தகுதிகளுடன் ரோல் மாடலாக திகழ்கிறார் அபிஜித் சோனாவானே. #Punedoctor #AbhijeetSonawane  #treatsforfree
    மாணவர்கள் சீருடையில் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். #mrvijayabhaskar #schoolstudents
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே ரூ. 137.18 மதிப்பில் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சோதனைச்சாவடியில் ஆந்திரா மற்றும் வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களுக்காக 10 வழித்தடங்களும், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்காக 6 வழித்தடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    கடத்தல் பொருட்களை மிக நுட்பமாக கண்டறியும் வகையில் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஸ்கேனிங் வசதியும், சரக்கு வாகனங்களுக்கான எடை மேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சோதனைச் சாவடியாக அமைந்துள்ளது. இதற்கான முழு பணிகளும் முடிவடைந்து விட்டன. முதல்-அமைச்சரால் மிக விரைவில் இது திறக்கப்பட உள்ளது.

    பள்ளிகள் திறந்திட இன்னும் 15 நாட்கள் உள்ளது. அதற்குள் போக்குவரத்து துறை அதிகாரிகள் அனைத்து பள்ளி வாகனங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு அந்த வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதிக்கப்படும்.

    நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் கூடிய 5 ஆயிரம் புதிய பேருந்துகள் போக்குவரத்து துறையிலே கொண்டு வர இருக்கிறோம். மாணவர்கள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக நவீன படிகட்டுகள் கொண்ட பேருந்துகளாக அவை அமைக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 70 புதிய பேருந்து பணிமனைகளை திறக்க வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதிகளின் படி அறிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது சுமார் 54 பணிமனைகள் திறக்கப்பட்டு உள்ளன. சில பணிமனைகளுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

    சில பணிமனைகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. இவையெல்லாம் முடிவு பெற்று கூடிய விரைவில் அறிவிக்கப்பட்ட அத்தனை பணிமனைகளும் திறக்கப்படும்.

    மாணவ-மாணவிகளுக்கு விரைவில் இலவச பயண அட் டையை வழங்கிட ஏற்பாடு செய்து வருகிறோம். பள்ளிகள் திறக்கப்படக் கூடிய சூழலில், மாணவர்களின் பயணத்திற்கு அரசு போக்குவரத்தில் எந்தவித இடையூறும் இருக்காது.



    மாணவர்கள் சீருடையில் இருந்தால் போதும். அவர்களை பஸ்சில் இலவசமாக பயணம் செய்திட அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை போட்டு உள்ளோம்.

    இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

    அப்போது அவருடன் ஊரக தொழில்துறை அமைச் சர் பெஞ்ஜமின், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி, இணைஆணை யர் பிரசன்னா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி, பொன்னேரி எம். எல்.ஏ. சிறுனியம் பலராமன், கும் மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கே.எஸ். விஜயகுமார் ஆகியோர் உடன் வந்தனர். #mrvijayabhaskar #schoolstudents

    ×