search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூனே"

    இந்தியாவில் போக்குவரத்து வழிமுறைகளை ஒழுங்குப்படுத்துவதற்கு புதிய எடுத்துக் காட்டாக பூனே நகர போக்குவரத்து காவல் துறை அமைந்திருக்கிறது. #TrafficViolation



    பொது மக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வைக்க பூனே நகர போக்குவரத்துக் காவல் துறை மிகவும் கடுமையாக இருக்கிறது. போக்குவரத்து காவல் துறையின் துணை ஆணையர் தேஜஸ்வி சத்புட் விதிகளை மீறுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். 

    இவரது கடுமையான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக பூனே நகர போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை இருக்கிறது. இதுவரை போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.22.55 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக பூனே நகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. 

    நேம் அன்ட் ஷேம் எனும் திட்டத்தை பூனே நகர போக்குவரத்து காவல் துறை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்படுகின்றன. இத்துடன் விதிமீறுபவர்களின் டாப் 200 பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.




    விதிமீறுவோர் சிக்கினால், விதிமீறலுக்கு ஏற்ப அபராத தொகை அவர்களுக்கு இ-செல்லான்கள் மூலம் அனுப்பப்படுகிறது. அதன் பின் அபராத தொகையை போக்குவரத்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செலுத்த வேண்டும். 

    விதிமீறியவர்களின் பட்டியலை சுவாரஸ்யப்படுத்தும் வகையில், ஒருவர் 32 முறை விதிமீறி முதலிடத்திலும் மற்றொருவர் 20 முறை என இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஜனவரி 1, 2018 முதல் கடுமையாக்கப்பட்ட விதிகள், ஆகஸ்டு 31, 2018 வரை மொத்தம் 10,18,560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பத்து லட்சம் வழக்குகளில் இதுவரை ரூ.22,54,62,250 வசூலிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    போக்குவரத்து விதிமீறுவோரில் பெரும்பாலானோர் சிக்னல்களில் நிறுத்தாமல் செல்வது, மக்கள் சாலையை கடக்கும் வழிகளை கடப்பது, நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவது, ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வது, சீட் பெல்ட் போடாமல் கார் பயணம் செய்வது, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது உள்ளிட்டவை இருக்கிறது.
    மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அபிஜித் சோனாவானே என்ற டாக்டர் வீடு இல்லாத நடைபாதை வாசிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். #Punedoctor #AbhijeetSonawane #treatsforfree
    மும்பை:

    இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் டாக்டர்களை அனைவரும் கடவுளாக பார்க்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அபிஜித் சோனாவானே என்ற டாக்டர் தினமும் கோவில்களுக்கும், ஆன்மீக ஸ்தலங்களுக்கும் சென்று அங்குள்ள நடைபாதை வாசிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.



    இதுகுறித்து டாக்டர் அபிஜித் சோனாவானே கூறுகையில், ‘எனது வாழ்வின் முக்கியமான நெருக்கடியின்போது வீடுகள் இல்லாத இவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர். தற்போது என்னுடைய புனிதமிக்க தொழில் மூலம் நான் அவர்களுக்கு உதவி செய்கிறேன். இதன் மூலம் சமூகத்துக்கு நான் நன்றிகடன் செலுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

    தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை புனே நகரின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கிறார். நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை வழங்குவது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு மருந்துகளும் இலவசமாக அளித்து வருகிறார். நோயாளிகளின் நிலைமை மோசமாக இருக்கும்பட்சத்தில் அவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பரிந்துரைத்து அனுப்பி வைக்கிறார்.



    இவரது இந்த மனித நேயத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக நடைபாதை வாசிகளிடமும், உடல் ஊனமுற்றோரிடமும் இவர் சகஜமாக உரையாடி அவர்களின் மனக்குறைகளையும் கேட்டறிகிறார். அதே சமயம், நல்ல உடல்நிலையில் இருந்து பிச்சை எடுப்பவர்களை உழைத்து வாழும்படி அறிவுறுத்தியும் வருகிறார்.

    மருத்துவ தொழில் வியாபாரம் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் டாக்டர்களை கடவுளாக பார்ப்பதற்கான தேவையான தகுதிகளுடன் ரோல் மாடலாக திகழ்கிறார் அபிஜித் சோனாவானே. #Punedoctor #AbhijeetSonawane  #treatsforfree
    ×