என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எட்டு மாதங்களில் 22 கோடி அபராதம் வசூலித்த போக்குவரத்து காவல் துறை
Byமாலை மலர்8 Sep 2018 11:35 AM GMT (Updated: 8 Sep 2018 11:35 AM GMT)
இந்தியாவில் போக்குவரத்து வழிமுறைகளை ஒழுங்குப்படுத்துவதற்கு புதிய எடுத்துக் காட்டாக பூனே நகர போக்குவரத்து காவல் துறை அமைந்திருக்கிறது. #TrafficViolation
பொது மக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வைக்க பூனே நகர போக்குவரத்துக் காவல் துறை மிகவும் கடுமையாக இருக்கிறது. போக்குவரத்து காவல் துறையின் துணை ஆணையர் தேஜஸ்வி சத்புட் விதிகளை மீறுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இவரது கடுமையான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக பூனே நகர போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை இருக்கிறது. இதுவரை போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.22.55 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக பூனே நகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
நேம் அன்ட் ஷேம் எனும் திட்டத்தை பூனே நகர போக்குவரத்து காவல் துறை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்படுகின்றன. இத்துடன் விதிமீறுபவர்களின் டாப் 200 பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.
விதிமீறுவோர் சிக்கினால், விதிமீறலுக்கு ஏற்ப அபராத தொகை அவர்களுக்கு இ-செல்லான்கள் மூலம் அனுப்பப்படுகிறது. அதன் பின் அபராத தொகையை போக்குவரத்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செலுத்த வேண்டும்.
விதிமீறியவர்களின் பட்டியலை சுவாரஸ்யப்படுத்தும் வகையில், ஒருவர் 32 முறை விதிமீறி முதலிடத்திலும் மற்றொருவர் 20 முறை என இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஜனவரி 1, 2018 முதல் கடுமையாக்கப்பட்ட விதிகள், ஆகஸ்டு 31, 2018 வரை மொத்தம் 10,18,560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பத்து லட்சம் வழக்குகளில் இதுவரை ரூ.22,54,62,250 வசூலிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறுவோரில் பெரும்பாலானோர் சிக்னல்களில் நிறுத்தாமல் செல்வது, மக்கள் சாலையை கடக்கும் வழிகளை கடப்பது, நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவது, ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வது, சீட் பெல்ட் போடாமல் கார் பயணம் செய்வது, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது உள்ளிட்டவை இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X