search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration card holders"

    • சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு குடிமை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
    • தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட ஈழொளி வயல், கண்ணங்குடி வட்டத்திற்குட்பட்ட எழுவன்கோட்டை ஆகிய பகுதிகளில் ரேசன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட ஈழொளி வயல், கண்ணங்குடி வட்டத்திற்குட்பட்ட எழுவன்கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் ரேசன் கடைகளில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 660 முழு நேரம் மற்றும் 204 பகுதிநேர நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக, 4 லட்சத்து 20 ஆயிரத்து 792 குடும்ப அட்டைதாரர் களுக்கு குடிமைப்பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர் களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிமைப்பொருட்களின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடையளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து, மாதந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நியாய விலைக்கடை களுக்கு வருகை தரும் குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்ட றியப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவவாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான விலையில்லா வேட்டி- சேலைகள் லாரிகளில் திருச்சிக்கு வந்து சேர்ந்தன.
    திருச்சி:

    தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விலையில்லா வேட்டி-சேலை வழங்குவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து எல்லா மாவட்டங்களுக்கும் வேட்டி-சேலைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேட்டி-சேலைகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்து உள்ளன. திருச்சி மேற்கு தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலைகள் நேற்று காலை வந்தன. வேட்டி-சேலை மூட்டைகளை லாரியில் இருந்து இறக்கிய தொழிலாளர்கள் அதனை தனி அறைக்கு கொண்டு சென்று அடுக்கி வைத்தனர்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் சுமார் 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவற்றில் அரிசி பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் பச்சரிசி, முந்திரி பருப்பு, சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி முதல் வாரம் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 
    ×