search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 லட்சத்து 20 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு குடிமை பொருட்கள் விநியோகம்
    X

    எழுவன்கோட்டை ரேசன் கடையில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    4 லட்சத்து 20 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு குடிமை பொருட்கள் விநியோகம்

    • சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு குடிமை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
    • தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட ஈழொளி வயல், கண்ணங்குடி வட்டத்திற்குட்பட்ட எழுவன்கோட்டை ஆகிய பகுதிகளில் ரேசன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட ஈழொளி வயல், கண்ணங்குடி வட்டத்திற்குட்பட்ட எழுவன்கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் ரேசன் கடைகளில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 660 முழு நேரம் மற்றும் 204 பகுதிநேர நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக, 4 லட்சத்து 20 ஆயிரத்து 792 குடும்ப அட்டைதாரர் களுக்கு குடிமைப்பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர் களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிமைப்பொருட்களின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடையளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து, மாதந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நியாய விலைக்கடை களுக்கு வருகை தரும் குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்ட றியப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவவாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×