search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus pass"

    • நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.

    கடலூர்:

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டலம் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூர் மண்டலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க பள்ளி, கல்லூரிகளிலிருந்து உரிய படிவங்களை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறதாததால், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவிப் பொறியாளர் (இயக்கம்) பரிமளம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் போட்டோ ஓட்டி விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். மேலும் விண்ணப்பங்களை பெற்று அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.

    • மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
    • அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணவர்-மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரையிலும் சென்று வர அனுமதிக்க வேண்டும்.

    அதே போன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில் பயற்சி நிலைய மாணவ-மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் 2022-2023-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்து கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

    இந்த உத்தரவினை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
    • தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சேலம் கோட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.

    சீருடை

    நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். சீருடை அணிந்திருந்தாலே மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்பதில்லை. மேலும், மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடப்பாண்டுக்காக இலவச பஸ் பாஸ் பயண அட்டை மற்றும் 50 சதவீ தம் கட்டணம் சலுகை பயன்படுத்தும் அட்டை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மாணவர்க ளின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் பள்ளிகளிடம் இருந்து, அந்தந்த பணிமனைகளில் கேட்டு பெறப்பட்டுள்ளது.

    2.75 லட்சம் பஸ் பாஸ்கள்

    அதன்படி, சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் பயணிக்கக்கூடிய அட்டையும் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    சென்னையில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மாணவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறினார். #FreeBuspass #Students
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி பயின்றிட ஏதுவாக, அரசின் சார்பில் இலவச பஸ் பயண அட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலவச பஸ் பயண அட்டை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.



    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 1,791 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரையில், 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கும் பயண அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.

    அதுவரையில் பள்ளி மாணவர்கள் சீருடையிலும், கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்லூரி அடையாள அட்டை வாயிலாகவும் பஸ்சில் பயணம் செய்திட அனுமதிக்குமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #FreeBuspass #Students

    முறையான பஸ் வசதி மற்றும் பஸ் பாஸ் வழங்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் திருவண்ணாமலையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து தான் வருகின்றனர். இவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் கல்லூரிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் ஏற்கனவே, இயக்கப்பட்டு வந்த ஒரு சில அரசு பஸ்களும் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்றும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அட்டையும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. முறையான பஸ் வசதி மற்றும் பஸ் பாஸ் வழங்கக்கோரியும் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து அரசு கல்லூரி வரை கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர். 
    சென்னை மாநகர பஸ்களில் சீசன் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது. #BusFareHike #TNTransport

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 20-ந் தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஏ.சி.பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.25 ஆகவும், அதிகபட்சம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டது.

    கட்டண உயர்வால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வருமானம் வரவில்லை.

    கட்டண உயர்வுக்கு முன்பு சென்னை மாநகர பஸ்களில் சுமார் 60 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். கட்டண உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 40 லட்சமாக குறைந்தது.

    அதிகளவில் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மாநகர பஸ்களில் பயணம் செய்வதை தவிர்த்து மின்சார ரெயில், ஷேர் ஆட்டோ போன்ற மாற்று போக்கவரத்துக்கு மாறினர்.

    இதையடுத்து மாநகர பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் வேலைக்கு செல்வோர் மாநகர பஸ்களில் மாதாந்திர சீசன் பாஸ் எடுத்து பயணம் செய்து வருகிறார்கள். இதே போல் ஒரு வழித்தடத்தில் செல்லும் மாதாந்திர பாஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

     


    ஏற்கனவே பயணிகள் வருகை குறைவால் வருவாய் குறைந்த நிலையில் அதிக அளவில் மாதாந்திர பாசில் ஏராளமானோர் பயணம் செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது 21.5 லட்சம் பேர் மாதாந்திர பாசில் பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தினமும் வசூலாகும் வருவாயில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது.

    இதன் மூலம் 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் விலை உயர்த்தப்படுகிறது. எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து போக்கு வரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு பயணிகள் பலர் மாதாந்திர பாஸ் எடுத்து பயணம் செய்து வருகிறார்கள். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாதாந்திர பாஸ் வைத்துள்ளனர். இதில் வேலைக்கு செல்வோர் அதிக அளவில் 1000 ரூபாய் மாதாந்திர பஸ் பாசை பயன்படுத்தி இருந்தனர்.

    இதனால் தினமும் வசூலாகும் தொகை குறைவதாக கண்டக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு பஸ்சில் 20 பயணிகள் இருந்தால் அதில் பாதி பேர் மாதாந்திர பாஸ் வைத்துள்ளனர்” என்றார்.

    1000 ரூபாய் மாதாந்திர பயண அட்டையை பயன்டுத்துவோரின் எண்ணிக்கையும் கட்டண உயர்வுக்கு பிறகு அதிகரித்துள்ளது. #BusFareHike

    சென்னை:

    பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு சென்னை மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது. தினமும் 40 லட்சம் பயணிகள் பஸ்சில் பயணம் செய்து வந்த நிலையில் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

    ரெயில், ஷேர் ஆட்டோக்களை பஸ் பயணிகள் அதிகம் நாடினார்கள். இதனால் தினசரி இயக்கப்படும் 3000 மாநகர பஸ்களில் சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

    தற்போது 1200 சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகை பாஸ்களிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

    ஒருநாள் பயண பாஸ் முறை கைவிடப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகத்திற்கு அதிக இழப்பு ஏற்படுவதால் அத்திட்டம் கைவிடப்பட்டு மாதாந்திர பாஸ் திட்டம் மட்டும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

     


    தற்போது மாதம் முழுவதும் மாநகர பஸ்களில் எங்கும் பயணம் செய்து கொள்ளக்கூடிய ரூ.1000 பஸ் பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு சலுகை கட்டண பயணமும் பஸ் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.

    ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தினமும் பயணம் செய்யக்கூடிய பயண அட்டைக்கு மூன்றில் ஒரு பங்கு சலுகை அளிக்கப்படுகிறது. வேலைக்கு செல்லக் கூடியவர்கள் அதிகம் இதனை பயன்படுத்துகிறார்கள். 2 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் இச்சலுகை பயணத்தில் பயணிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அதேபோல 1000 ரூபாய் மாதாந்திர பயண அட்டையை பயன்டுத்துவோரின் எண்ணிக்கையும் கட்டண உயர்வுக்கு பிறகு அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அந்த பயண சலுகையை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு மாதத்திற்கு ரூ.12 கோடி வருவாய் ஒரு மாதத்திற்கு முன்பே கிடைத்து விடுகிறது.

    ரூ.1000 பயண அட்டை திட்டம் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாக இருந்த போதிலும் அதனை கைவிடுவதாக இல்லை என்றே தெரிகிறது.

    ஒரு பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் 2 அல்லது 3 பஸ்களில் மாறி மாறி பயணம் செய்யக் கூடியவர்களுக்கு ரூ.1000 பஸ் பாஸ் பயன் உள்ளதாக இருப்பதால் அதிகளவு விற்பனையாகிறது.

    ஒன்றிற்கும் மேற்பட்ட பஸ்கள் மாறி செல்வதால் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் தினசரி பஸ் பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் மாதாந்திர பஸ் பாஸ்க்கு மாறி வருகிறார்கள். இதனால் அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனால் ரூ.1000 மாதாந்திர பாசை உயர்த்த இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் அப்படிப்பட்ட எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×