search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் பாஸ் வழங்க  பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று  விண்ணப்பம் பெறும் போக்குவரத்து துறை
    X

    பஸ் பாஸ் வழங்க பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பம் பெறும் போக்குவரத்து துறை

    • நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.

    கடலூர்:

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டலம் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூர் மண்டலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க பள்ளி, கல்லூரிகளிலிருந்து உரிய படிவங்களை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறதாததால், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவிப் பொறியாளர் (இயக்கம்) பரிமளம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் போட்டோ ஓட்டி விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். மேலும் விண்ணப்பங்களை பெற்று அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.

    Next Story
    ×