search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enforcement Directorate"

    • அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.
    • மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள்.

    நெல்லை:

    கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நெல்லையில் நடத்திய அமைதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில் 17 பேர் இறந்தனர்.

    இதன் நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு மாநில தணிக்கை பொதுக்குழு தலைவருமான செல்வப் பெருந்தகை எம். எல்.ஏ., மாநில காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் ஆகியோர் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    உரிமைக்காக போராடிய போராளிகள் 17 பேருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம். உயிர்நீத்த போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    நிதிநிலையை கருத்தில் கொண்டு அதற்கான வாய்ப்பு இல்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செலவில் உயர்நீத்த 17 பேருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான ஏற்பாட்டை செய்வோம்.

    மணிப்பூரில் அங்குள்ள மக்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். மணிப்பூர் மக்களின் உரிமையை மீட்டெடுப்பதுதான் தலைவர் ராகுல் காந்தியின் முக்கிய பணியாக உள்ளது.

    ஜாதியாக, மதமாக, இனமாக மக்களை பிரித்தாலும் பா.ஜ.க.விற்கு விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் ஒருபோதும் இந்திய மக்கள் ஏமாறமாட்டார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் மீது உள்ள வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கேட்டால் அதற்கு ஆளுநர், சி.பி.ஐ. விசாரணை நடப்பதாக மறுக்கிறார். இதே நடைமுறைதான் அமைச்சர் பொன்முடிக்கும் பொருந்தும்.

    நீதிமன்ற நிலுவையில் இருக்கும் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை. மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள். குறிப் பாக காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் இதனை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்வே பணி நியமனத்தில் நடந்த இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
    • கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. கிரண்தேவி, மேல்சபை எம்.பி. பிரேம்சந்த் குப்தா ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.

    புதுடெல்லி:

    ராஷ்டிரிய ஜனதாதள (ஆர்.ஜே.டி.) கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார்.

    அப்போது ரெயில்வேயில் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதாகவும், அவர்களிடம் இருந்து அதற்கு பிரதிபலனாக லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் நிலங்களை பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    ரெயில்வே பணி நியமனத்தில் நடந்த இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக அவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.1 கோடி பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இருந்தது. பீகார் துணை முதல்- மந்திரி தேஜஸ்வி யாதவ், மிசா பாரதியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. கிரண்தேவி, மேல்சபை எம்.பி. பிரேம்சந்த் குப்தா ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது. இந்நிலையில் ரெயில்வே பணி நியமனத்தில் நிலம் பெற்ற ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று ஆஜரானார்.

    சட்ட விரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டு தொடர்பாக அவர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவர்களால் 11.30 மணியளவில் ஆஜரானார்.

    ராப்ரி தேவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • விசாரணைக்காக டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார் ஆஜரானார்.
    • வாக்குமூலத்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

    டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தியது.

    விசாரணைக்காக டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார் ஆஜராகினார். அவரது வாக்குமூலத்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பிபவ் குமார் உள்ளிட்ட 36 பேர் மீது ரூ.1000 கோடி பணமோசடி தொடர்பான ஆதாரங்களை அழிக்க 170 செல்பேசி அழைப்புகள் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுகிறது" என்று தெரிவித்தனர்.

    • பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுகிறார்.
    • மத்திய அமலாக்கத்துறையில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை?.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகும், இரவில் அரை மணி இடைவேளைக்கு பிறகும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களில் ராகுல் காந்தியிடம் மொத்தம் 40 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல் காந்தி துன்புறுத்தப் படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

    பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து, உறுதியான முறையில், குரல் கொடுத்து வருவதாகவும், எனவே ராகுல்காந்தியை துன்புறுத்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவது, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் போராட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து நாட்டை திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

    மத்திய அமலாக்கத்துறையில் மற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

    • உண்மையை சிறையில் அடைக்க முடியாது என காங்கிரஸ் கருத்து
    • ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்கும் போது, ​காங்கிரஸ் நாடகம் நடத்துவதாக பாஜக புகார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 2வது நாளாக 11 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். காலையில் சுமார் நான்கு மணி நேர விசாரணைக்கு பிறகு, மதியம் 3:30 மணியளவில் அவருக்கு ஒரு மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் வீட்டுக்குச் சென்றார்.

    மாலை 4:30 மணியளவில் அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.நேற்று விசாரணைக்கு ராகுல் ஆஜரானபோது மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரது சகோதரி பிரியங்காவும் வந்திருந்தார். விசாரணை முடிந்து நேற்றிரவு 11.30 மணியளவில் அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் இருந்து ராகுல் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்றும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக நேற்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் மற்றும் மத்திய டெல்லியைச் சுற்றி போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    தடையை மீறியதாக கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாணிக் தாகூர், ரந்தீப் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ்  உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள், தொண்டர்கள் என மொத்தம் 217 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இரவு அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதைக் காட்டுவதற்காக சாலைகளை காங்கிரஸ் தலைவர்கள் மறிப்பதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

    ஊழல் வழக்கில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கும் போது, ​​காங்கிரஸ் இது போன்ற நாடகம் நடத்தி சாலை மறியல் செய்கிறது என்றும், அக்கட்சி தனது தலைவர்களை சட்டத்திற்கு மேலாக கருதுகிறது என்றும் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறினார்.

    பொய் பணமோசடி வழக்கின் மூலம் காந்தி குடும்பத்தின் நம்பகத்தன்மையை அழித்து, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

    ராகுல்காந்தியின் அரசியலைக் கண்டு மத்திய அரசு பயப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். இந்த முழு நடவடிக்கையும் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது, இது பிரதமரின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அவர்கள் எங்களை சிறையில் அடைக்க முடியும், ஆனால் அவர்களால் உண்மையை சிறையில் அடைக்க முடியாது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால். உண்மைக்கான போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

    • நள்ளிரவு 12 மணி வரை ஒருவரைக் கேள்வி கேட்பது தவறு. எந்த குற்றம் அல்லது பணமோசடி நடந்தது?
    • கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில், அவர்கள் விசாரிப்பதில்லை.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, நேற்று காலை 11.10 மணிக்கு டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.

    பிற்பகல் ராகுல்காந்திக்கு 80 நிமிடங்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது. பின்னர் மாலையிலும் விசாரணை தொடர்ந்தது. 10 மணி நேர விசாரணை இரவு முடிவடைந்தது.

    இதையடுத்து கார் மூலம் தனது வீட்டிற்கு ராகுல்காந்தி திரும்பினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    முன்னதாக அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் டெல்லியில் காங்கிரசார் மூத்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

    காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் சரோஜினி நகர் காவல்நிலையத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டனர்.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சக்திசிங் கோஹில், அனில் சவுத்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் காவலில் வைக்கப்பட்டனர்.

    கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் துக்ளக் சாலை காவல் நிலையத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்றும் காங்கிரசாரின் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் குரலை அவர்கள் நசுக்க நினைப்பதாகவும் அதை தடுக்க போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார்.

    இதனிடையே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக்கெலாட், தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு கொடுத்துள்ளார் என்று மோடியிடம் கூற விரும்புகிறேன். சிபிஐ, வருமான வரித்துறை, மத்திய அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை கொண்டு நாட்டு மக்களை இப்படி நடத்த வேண்டாம். இதை கைவிட வில்லை என்றால் இந்த நாடு உங்களையும் விட்டு வைக்காது.

    இன்றும் காங்கிரஸ் கட்சி வீதிக்கு வரும். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான், ஆனால் நள்ளிரவு 12 மணி வரை ஒருவரைக் கேள்வி கேட்பது தவறு. எந்த குற்றம் அல்லது பணமோசடி நடந்தது? கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில், அவர்கள் விசாரிப்பதில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த காங்கிரஸ் எதிர்ப்பு
    • டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல காங்கிரஸ் எம்.பிக்கள் திட்டம்

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆஜராக உள்ளார்.

    இந்நிலையில்  ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று காலை காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக அனைத்து டெல்லிக்கு வருமாறு அனைத்து காங்கிரஸ் எம்பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு, மத்திய அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் கட்சி மீண்டும் டெல்லி காவல்துறையை அணுகியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் பேரணிக்கு டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இந்த வழக்கில் ஜூன் 13ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்
    • விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவகாசம் வழங்க சோனியாகாந்தி கோரியிருந்தார்.

    நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டத்தில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை, கடந்த 8ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

    இந்நிலையில் சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

    இதேபோல் ஜூன் 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், வெளிநாட்டில் இல்லாததால் புதிய தேதி வழங்குமாறு அவர் கோரியிருந்தார்.

    இதையடுத்து ஜூன் 13 ஆம் தேதி டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியிருந்தது.

    சமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. #VijayMallya #NiravModi #EnforcementDirectorate
    புதுடெல்லி:

    தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள்தான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், 36 தொழிலதிபர்கள் சமீப காலங்களில் தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான ஆயுத தளவாட தரகர் சூசன் மோகன் குப்தா என்பவரின் ஜாமீன் மனு மீது டெல்லி தனிக்கோர்ட்டில் நேற்று நடந்த விவாதத்தின்போது, இத்தகவலை தெரிவித்தது.



    துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ராஜீவ் சக்சேனா அளித்த தகவலின் பேரில், இந்த ஊழலில் சூசன் மோகன் குப்தாவின் தொடர்பு தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    அவரது ஜாமீன் மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குப்தாவின் வக்கீல், குப்தா சமூகத்துடன் ஆழமாக பின்னி பிணைந்தவர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்குமாறு வலியுறுத்தினார்.

    அந்த வாதத்தை அமலாக்கத்துறையின் அரசு சிறப்பு வக்கீல்கள் டி.பி.சிங், என்.கே.மட்டா ஆகியோர் நிராகரித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சந்தேசரா சகோதரர்கள் ஆகியோரும் சமூகத்துடன் பின்னி பிணைந்தவர்கள்தான். இருப்பினும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். சமீப காலங்களில், இதுபோன்று 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர். இவரும் தப்ப வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #VijayMallya #NiravModi #EnforcementDirectorate
    மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. #PunjabNationalBank #NiravModi #EnforcementDirectorate
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்த நிலையில் மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. இதில் கட்டிடங்கள், 8 கார்கள், நகைகள், ஓவியங்களும் அடங்கும். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.  #PunjabNationalBank #NiravModi #EnforcementDirectorate
    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆஜரானார். #INXMediaCase #PChidambaram
    புதுடெல்லி:

    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.



    இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ப.சிதம்பரம் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்த ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #PChidambaram

    பொருளாதார அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குனராக சஞ்சய் மிஷ்ராவை மத்திய மந்திரிசபையின் பணி நியமன தேர்வுக்குழு இன்று நியமித்துள்ளது. #SanjayMishra #ED #InterimDirector
    புதுடெல்லி:

    நாட்டில் நடைபெறும் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மற்றும் கருப்புப்பணம், வங்கி ஊழல்கள் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளை பொருளாதார அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த அமைப்பின் இயக்குனராக உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங்-கின் மூன்றாண்டு பதவிக்காலம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.

    இந்நிலையில், பொருளாதார அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குனராக சஞ்சய் மிஷ்ரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை மத்திய மந்திரிசபையின் பணி நியமன தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

    இந்த பதவிக்கான நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படும்வரை அடுத்த 3 மாதங்களுக்கு இடைக்கால  இயக்குனராக சஞ்சய் மிஷ்ரா நீடிப்பார் என மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SanjayMishra #ED #InterimDirector

    ×