search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election flying squad"

    கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.44 கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections #GoldSeized
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் தொகுதி பறக்கும்படை அலுவலர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள் புலிய குளம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவ்வழியாக வந்த ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் ஏராளமான துணிப்பைகளில் மொத்தம் 149 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் இருந்தது. வேனில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் தங்க கட்டிகளை மொத்தமாக வாங்கி பெரியகடைவீதி, டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைகடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இவற்றின் மொத்தமதிப்பு ரூ.44 கோடி ஆகும்.

    இதுகுறித்து வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட் ராம் தலைமையில் ஏராளமான நகைக்கடைக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

    இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. உரிய ஆவணங்களை காட்டினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    149 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விசாரணை நடத்தினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறி உள்ளது. இன்று காலை ஆவணங்களை கொண்டு வந்து காட்டுவதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு காட்டினால் ஆவணங்களை சரி பார்த்த பின்பு, முறையாக இருந்தால் தங்ககட்டிகள் திரும்ப ஒப்படைக்கப்படும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சூலூர் கரடிவாவி பகுதியில் இருந்து செலக்கரைசல் செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் மகேந்திரன் மற்றும் அலுவலர்கள் வாகனசோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் கட்டுக் கட்டாக ரூ.56 லட்சம் இருந்தது தெரியவந்தது.


    வேனில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, செலக்கரைசல் பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்வதாக கூறினர். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.56 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    சூலூர் பறக்கும்படை அலுவலர் சந்தோஷ்உதய ராகவன் தலைமையிலான அலுவலர்கள் சோமனூர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் காடா துணிகள் இருந்தது. விசாரணையில் அவை சோமனூர் லாரி அலுவலகத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு வழக்கமாக அனுப்பப்படுகிற காடா துணிகள் என்றனர். ஆனால் காடாதுணி பேல்களுக்கு முறையான இ-பில் இல்லை. இதையடுத்து காடாதுணிகளு டன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொண்டாமுத்தூர் பறக்கும்படை அலுவலர்கள் இன்று அதிகாலை சுகுணாபுரம் சோதனை சாவடியில் வாகனசோதனை செய்த போது அவ்வழியாக வந்த ஒரு மினிஆட்டோவை சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது.

    இதுகுறித்து ஆட்டோவில் இருந்த பாலக்காடை சேர்ந்த சேமையர் (வயது 22) என்பவரிடம் விசாரித்த போது வியாபார ரீதியாக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். அவரிடம் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections #GoldSeized
    புதுவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வினியோகம் உள்ளிட்டவற்றை தடுக்க புதுவை மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் நேற்று மதியம் 2 மணியளவில் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் மடக்கி தீவிர சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் அதை கைப்பற்றி தேர்தல் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் புதுவை பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், முருகன் ஆகியோர் மி‌ஷன் வீதி-ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக பணத்துடன் வந்த வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ரூ.1 கோடியே 86 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவுமில்லாததையடுத்து வாகனத்துடன் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் நேரில் வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது புதுவையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து நேற்று மாலை ரூ.1 கோடியே 86 லட்சத்தை பெற்றுக்கொண்டு வங்கி ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் தகவல் தெரிவித்ததன்பேரில் வருமானத்துறையினர் பெரியகடை போலீஸ் நிலையம் வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். வங்கி அதிகாரிகள் ரூ.1 கோடியே 86 லட்சத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த பணத்தை அரசு கருவூலத்தில் வைத்தனர்.

    நேற்று ஒரு நாளில் புதுவையில் ரூ.1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.  #LokSabhaElections2019


    பல்லடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 கோடி வங்கி பணம் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டட பின்னர் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. #ElectionFlyingSquad #LokSabhaElections2019
    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியில் குண்டடம் வேளாண்மை துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குழந்தைசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் ரங்கசாமி உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படை நிலைக்குழுவினர் நேற்று பல்லடம் செட்டிபாளையம் சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது கோவையில் இருந்து வந்த ஒரு டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். தனியார் வங்கி போத்தனூர் கிளையிலிருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கி தலைமையகத்திற்கு 4 இரும்பு பெட்டியில் ரூ.10 கோடி ரொக்கம் கொண்டு செல்வது தெரியவந்தது. அந்த பணம் கொண்டு செல்ல எந்தவிதமான ஆவணமும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது அறிவுறுத்தலின் பேரில் திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரி ராஜசேகரன் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனியார் வங்கி அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அதைத் தொடர்ந்து போத்தனூர் வங்கி கோவை மாவட்டத்தில் வருவதால் கோவை மாவட்ட வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் பல்லடத்திற்கு வந்தனர்.

    இதுகுறித்து போத்தனூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போத்தனூர் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு வங்கி அதிகாரிகளிடம் திருப்பூர் மற்றும் கோவை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் பணத்துக்கு உரிய ஆவணங்களை காண்பித்தனர். ஆவணங்களை பரிசோதனை செய்த அதிகாரிகள் வங்கி பணம் தான் என்பதை உறுதி செய்த பின்னர் திருப்பி ஒப்படைத்தனர்.

    இதேபோன்று ஊட்டி- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்லட்டியில் இருந்து ஊட்டிக்கு சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் உள்ள பெட்டியில் கத்தை கத்தையாக ரூ.73 லட்சம் பணம் இருந்தது.

    விசாரணையில் தனியார் ஏஜென்சி மூலம் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு செல்லப்பட்டதாக கூறினர். இதனையடுத்து வேனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் பணத்துடன் வேன் விடுவிக்கப்பட்டது.

    இதேபோன்று கூடலூரில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.62 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. ஊட்டி- மஞ்சூர் சாலை லவ்டேல் பகுதியில் நடத்திய சோதனையில் ரூ.50 ஆயிரத்து 500 சிக்கியது. கல்லாறில் வியாபாரி கமல்ராஜ் என்பவரிடம் ரூ.54 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. குன்னூரில் நடந்த சோதனையில் குண்டாடா பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்தனிடம் ரூ.65 ஆயிரம் சிக்கியது.

    சிறுமுகை சத்தி மெயின்ரோடு கூத்தாமண்டி பிரிவில் காரமடை வட்டாரவளர்ச்சி அலுவலர் பி.சைலஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியே வந்த மினி லாரியை சோதனை செய்தபோது டிரைவர் மாரியப்பன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி புனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதேபோன்று அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சரஸ்வதி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 4 லட்சத்து 6,500 பறிமுதல் செய்யப்பட்டது.  #ElectionFlyingSquad #LokSabhaElections2019
    திருப்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ElectionFlyingSquad #LokSabhaElections2019
    திருப்பூர்:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், மொத்தமாக பணம் கொண்டு செல்வதை தடுக்க தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

    இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அது வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், போத்தனூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். வங்கி நிர்வாகிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர். #ElectionFlyingSquad #LokSabhaElections2019
    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு லட்சுமி நகரில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தனியார் செக்யூரிட்டி வேனில் ரூ.5 லட்சம் ரொக்க பணம், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    வடவள்ளி:

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு லட்சுமி நகரில் இன்று காலை வடக்கு சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், ஏட்டுகள் ராஜேந்திர பிரசாத், ரங்கசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு தனியார் செக்யூரிட்டி வேனில் 5 பேர் வந்தனர். வேனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியபோது கணபதியில் இருந்து இருட்டுப்பள்ளத்துக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப செல்வதாக வேனில் இருந்தவர்கள் கூறினர். அவர்கள் கொண்டு வந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. மேலும் அவர்களிடம் 2 ஏர் ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதற்கும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் காரில் வந்தவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது 40), ஜம்முவை சேர்ந்த சவாதிகான் (22), பணப்பொறுப்பாளர் கங்காதரன், உதயகுமார் மற்றும் வேன் டிரைவர் நாகராஜ் ஆகியோர் என்பதும் இவர்கள் கோவை ராமநாதபுரத்தில் இயங்கி வரும் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மற்றும் 2 துப்பாக்கிகளும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019


    கோவையில் இன்று அதிகாலை தேர்தல் வாகன சோதனையில் 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை வைத்திருந்த திருச்சூரை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019
    கோவை:

    கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை அலுவலர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை 5 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் 15 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை வைத்திருந்த திருச்சூரை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் தாமஸ் வீதியில் ஒரு வியாபாரியிடம் இருந்து வாங்கி சென்றதாக கூறினார். இதையடுத்து பறிதல் செய்த குட்கா பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 11-ந் தேதி முதல் இதுவரை எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 83 லட்சத்து 38 ஆயிரத்து 865 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் உரிய ஆவணங்களை 19 பேர் சமர்ப்பித்ததின் அடிப்படையில் ரூ.1 கோடி 6 லட்சத்து 26 ஆயிரத்து 980 மற்றும் 64 பட்டுப்புடவைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    மீதமுள்ள ரூ.77 லட்சத்து 11 ஆயிரத்து 885 மற்றும் 213 பட்டுப்புடவைகள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களிலும், 1497 மது பாட்டில்கள் மற்றும் ஒரு ஏர்பிஸ்டல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #LokSabhaElections2019

    சேலம் கொண்டலாம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    சேலம்:

    சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை சேலம் கொண்டலாம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டெம்போ டிராவல்ஸ் வேன் ஒன்று வந்தது.

    இந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் பைகளில் 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் வேனில் இருந்தவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த நகையை எங்கு எடுத்து செல்கிறீர்கள்? இதற்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என விசாரித்தனர்.

    அதற்கு அவர்கள் நாங்கள் நகைக்கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக மும்பையில் இருந்து வேனில் கொண்டு வருகின்றோம் என்று கூறி ஆவணங்களை கொடுத்தனர்.

    இந்த ஆவணத்தை பரிசோதித்தபோது, அதில் குறிப்பிட்டிருக்கும் எடையை காட்டிலும் அதிகமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தது.

    இதனால் பறக்கும் படை அதிகாரிகள், வேனில் இருந்த தங்கம், வெள்ளியை பறிமுதல் செய்து தேர்தல் உதவி அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் ரோகிணி, உடனடியாக தேர்தல் உதவி அலுவலகத்திற்கு விரைந்து வந்து அங்கு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த தங்கம்- வெள்ளி ஆகியவற்றை பார்வையிட்டார். வேனில் நகையை கொண்டு வந்த நபர்களிடமும் விசாரணை நடத்தினார்.

    இதனை தொடர்ந்து நகைக்கான ஆவணங்கள் பற்றி விசாரிப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உரிய வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என விசாரித்து வருகின்றனர். #LokSabhaElections2019

    வந்தவாசி அடுத்த எட்டிதாங்கல், தெள்ளார் கிராமங்களில் பைனாஸ் ஊழியர், செல்போன் டவர் பராமரிப்பாளரிடம் இருந்து ரூ.1.11 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பறிமுதல் செய்தனர். #LSPolls
    வந்தவாசி:

    ஆரணி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வந்தவாசி சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டுக்கள் பாபு, கோமதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வந்தவாசி சேத்துபட்டு நெடுஞ்சாலை எட்டிதாங்கல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் வந்தவாசியை சேர்ந்த பைனாஸ் ஊழியர் பழனிசாமி என்பவர் ரூ.56 ஆயிரம் எடுத்து வந்ததை பறிமுதல் செய்தனர்.

    பறக்கும் படை தேர்தல் அலுவலர் அற்புதம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட குழுவை சேர்ந்தவர்கள் தெள்ளாரில் நேற்று மாலை வாகன சோதனை செய்தனர்.

    அப்போது ஜீப்பில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த சென்னையை சேர்ந்த செல்போன் டவர் பராமரிப்பு பணி ஒப்பந்ததார் எத்திராஜ் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.11 லட்சத்தை வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இருந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லாவண்யாவிடம் ஒப்படைத்தனர்.

    இதனை ஆய்வு செய்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தவாசி கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தாசில்தார் அரிக்குமார் கருவூலத்தில் ஒப்படைத்தார். #LSPolls

    சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ரூ.1.36 கோடி பணம் சிக்கியது. ஆந்திராவை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LSPolls #ElectionFlyingSquad
    சென்னை:

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையிலும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களுடன் மோட்டார் சைக்கிள்களும் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. பறக்கும் படை அதிகாரிகள் போலீசாரின் துணையுடன் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் பறக்கும்படை சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக பஸ்களிலும் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஒரு சிலர் சைக்கிள்களிலும் பணத்தை பைகளில் போட்டு தொங்க விட்டுச் செல்கிறார்கள். இதுபோன்று பணத்தை எடுத்துச் செல்லும் நபர்களை பிடிக்கவும் போலீசார் இப்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் ரோட்டில் இன்று காலை 6.45 மணியளவில் சிட்டி டவர் ஓட்டல் அருகில் சந்தேகத்துக்கிடமாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வழியாக சென்ற போக்குவரத்து போலீஸ் ஏட்டுகள் மதியழகன், பரமசிவம் ஆகிய இருவரும் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக பூக்கடை போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது 4 பேரும் உடலில் எதையோ பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களது சட்டையை கழற்றி சோதனை செய்தனர். அப்போது 4 பேரும் தங்களது உடலில் ரூ.1 கோடியே 36 லட்சம் பணத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தினர்.

    பிடிபட்ட 4 பேரும் பாஷா, சீனிவாசலு, ஆஞ்சநேயலு, ஷேக்சலீம் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஆம்னி பஸ் மூலம் சென்னைக்கு இந்த பணத்தை கடத்தி வந்துள்ளனர்.



    4 பேரும் பணத்தை தனித்தனியாக பிரித்து தங்களது சட்டைக்குள் மறைத்து எடுத்து வந்துள்ளனர். இந்த பணம் எதற்காக எடுத்து வரப்பட்டது? யாருடைய பணம்? என்பது தெரியவில்லை. முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.1.36 கோடியை போலீசார் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். தேர்தல் செலவுக்காக இந்த பணம் கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

    சென்னை திருநீர்மலை பகுதியில் பறக்கும்படை அதிகாரி கவிதா நடத்திய சோதனையில் ரூ.72 ஆயிரம் பணம் பிடிபட்டது. சந்திரமோகன் என்பவரின் காரில் நடத்திய சோதனையில்தான் இந்த பணம் பிடிபட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #LSPolls #ElectionFlyingSquad

    மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.50 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #ElectionFlyingSquad #LSPolls
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், மதுரை யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கத்தை கத்தையாக ரூ.4.50 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    வாகனத்தில் வந்த ஊழியர்களிடம் விசாரித்தபோது, அந்த பணம் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், திருச்சியில் இருந்து எடுத்து வருவதாகவும் கூறினர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.  இதையடுத்து பணத்துடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து, மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.  பணத்திற்கான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



    இதேபோல் சென்னை யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #ElectionFlyingSquad #LSPolls

    சென்னையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையின்போது, வால்டாக்ஸ் சாலையில் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #LSPolls #ElectionFlyingSquad
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.



    இந்நிலையில் சென்னை யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், தண்டையார்பேட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls #ElectionFlyingSquad

    ×