search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank currency"

    • கோல்டன்டூடுல் நாய்கள் வளர்ப்பவர்களிடம் அதிக விசுவாசம் கொண்டவை
    • வங்கி தரப்பிலிருந்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது

    அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் உள்ளது பிட்ஸ்பர்க் (Pittsburgh) நகரம்.

    பிட்ஸ்பர்க் நகரத்தில் வசித்து வருபவர்கள் 34 வயதாகும் க்ளேட்டன் லா (Clayton Law) மற்றும் அவரது குடும்பத்தினர். இவர்கள் செசில் (Cecil) என பெயரிட்ட கோல்டன்டூடுல் (Goldendoodle) வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். செசிலுக்கு 7 வயதாகிறது.

    கடந்த டிசம்பர் மாதம், லா, தனது வீட்டை சுற்றி புதிய வேலி அமைக்க விரும்பினார். இதற்காக தனது வங்கி கணக்கிலிருந்து $4000 கரன்சி நோட்டுக்களை எடுத்து வந்தார். அப்பணத்தை தம்பதியினர் தங்கள் சமையலறை மேடையின் மீது வைத்து விட்டு வேறு ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக செசில், அந்த ரூபாய் நோட்டுக்கள் முழுவதையும் தின்று விட்டது.

    செசில் உண்ட பிறகே ஓடி வந்து அதை கண்ட லா குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். இழந்த பணத்திற்காகவும், தங்கள் செல்ல பிராணியின் உடல்நலத்திற்காகவும் ஒரே சமயத்தில் அவர்கள் கவலைப்பட தொடங்கினர்.

    க்ளேட்டனின் மனைவி, கேரி உடனடியாக கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டார். நாயின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இல்லாத வரை அச்சப்பட வேண்டாம் என மருத்துவர் கூறியதை அடுத்து இழந்த பணம் குறித்து யோசித்தனர்.

    கேரி, இணையதளத்தில் "பணத்தை நாய் சாப்பிட்டால் என்ன செய்வது?" என கேட்டு மீட்கும் வழிமுறைகளை தேட தொடங்கினார்.

    வங்கியை தொடர்பு கொண்டு லா சம்பவத்தை தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினர்.

    சில மணி நேரம் கடந்ததும் சில கரன்சி நோட்டுக்களை செசில் வாந்தி எடுத்தது; சிலவற்றை உடலிலிருந்து கழிவில் வெளியேற்றியது.

    மிகுந்த சகிப்புத்தன்மையுடன் கிடைத்த கரன்சிகளை எடுத்து சுத்தப்படுத்தி எண்ணி பார்த்ததில் சுமார் $3,550 கரன்சிகள் அவர்களுக்கு மீண்டும் கிடைத்தது.

    வரிசை எண்கள் (சீரியல் நம்பர்கள்) சேதமடையாத கரன்சிகள் அவர்களுக்கு வங்கியில் மாற்றி தரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட இழந்த தொகையில் பெரும் பகுதி அவர்களுக்கு திரும்ப கிடைத்தது.

    இத்தனை போராட்டங்களுக்கு பிறகும் லா தம்பதியினருக்கு செசில் மீதான அன்பு குறையவில்லை.

    சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதை தொடர்ந்து "நாய்க்கு இவ்வளவு விலையுயர்ந்த உணவா?" என பயனர்கள் கிண்டல் செய்து பதிவிடுகின்றனர்.

    திருப்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ElectionFlyingSquad #LokSabhaElections2019
    திருப்பூர்:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், மொத்தமாக பணம் கொண்டு செல்வதை தடுக்க தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

    இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அது வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், போத்தனூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். வங்கி நிர்வாகிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர். #ElectionFlyingSquad #LokSabhaElections2019
    ×