search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US states"

    • எலிசபெத் 8 முறை மார்பிலும், 1 முறை கழுத்திலும் குத்தி கொல்லப்பட்டார்
    • 2022ல் ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்கவில்லை

    அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 27 மாநிலங்களில் கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது.

    மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டில் விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு, தூக்கு மற்றும் துப்பாக்கியால் சுடப்படுதல் ஆகியவை அனுமதிக்கப்பட்ட முறைகளாகும்.

    1988 மார்ச் 18ல் அமெரிக்க தென்கிழக்கு மாநிலமான அலபாமாவின் கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett) சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

    இக்கொலையை செய்ததாக கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் சார்ல்ஸ், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்ததாகவும், அதனை சமாளிக்க மனைவியின் காப்பீடு தொகையை பெற விரும்பியதாகவும், அதற்கு இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சொல்லி அமர்த்தியிருந்ததும் தெரிய வந்தது.

    விசாரணையின் போது சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

    1996ல் ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

    2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2022ல் அலபாமாவில், தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகளை தேட முடியாமல் போனதால் அந்த முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அவருக்கு "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தண்டனை ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என தற்போது 58 வயதாகும் ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.

    நேற்று, இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.

    இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள்.

    அலபாமா, மிசிசிபி மற்றும் ஓக்லஹாமா ஆகிய மாநிலங்கள் இந்த முறைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் இதுவரை எந்த குற்றவாளிக்கும் இது பயன்படுத்தப்பட்டதில்லை.

    மரண தண்டனையை இந்த முறையில் நிறைவேற்றுவது மனிதத்தன்மையற்ற செயல் என ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் கூறினர். புதிய முறையை எதிர்த்து ஸ்மித் தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படலாம் என தெரிகிறது.

    • கோல்டன்டூடுல் நாய்கள் வளர்ப்பவர்களிடம் அதிக விசுவாசம் கொண்டவை
    • வங்கி தரப்பிலிருந்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது

    அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் உள்ளது பிட்ஸ்பர்க் (Pittsburgh) நகரம்.

    பிட்ஸ்பர்க் நகரத்தில் வசித்து வருபவர்கள் 34 வயதாகும் க்ளேட்டன் லா (Clayton Law) மற்றும் அவரது குடும்பத்தினர். இவர்கள் செசில் (Cecil) என பெயரிட்ட கோல்டன்டூடுல் (Goldendoodle) வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். செசிலுக்கு 7 வயதாகிறது.

    கடந்த டிசம்பர் மாதம், லா, தனது வீட்டை சுற்றி புதிய வேலி அமைக்க விரும்பினார். இதற்காக தனது வங்கி கணக்கிலிருந்து $4000 கரன்சி நோட்டுக்களை எடுத்து வந்தார். அப்பணத்தை தம்பதியினர் தங்கள் சமையலறை மேடையின் மீது வைத்து விட்டு வேறு ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக செசில், அந்த ரூபாய் நோட்டுக்கள் முழுவதையும் தின்று விட்டது.

    செசில் உண்ட பிறகே ஓடி வந்து அதை கண்ட லா குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். இழந்த பணத்திற்காகவும், தங்கள் செல்ல பிராணியின் உடல்நலத்திற்காகவும் ஒரே சமயத்தில் அவர்கள் கவலைப்பட தொடங்கினர்.

    க்ளேட்டனின் மனைவி, கேரி உடனடியாக கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டார். நாயின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இல்லாத வரை அச்சப்பட வேண்டாம் என மருத்துவர் கூறியதை அடுத்து இழந்த பணம் குறித்து யோசித்தனர்.

    கேரி, இணையதளத்தில் "பணத்தை நாய் சாப்பிட்டால் என்ன செய்வது?" என கேட்டு மீட்கும் வழிமுறைகளை தேட தொடங்கினார்.

    வங்கியை தொடர்பு கொண்டு லா சம்பவத்தை தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினர்.

    சில மணி நேரம் கடந்ததும் சில கரன்சி நோட்டுக்களை செசில் வாந்தி எடுத்தது; சிலவற்றை உடலிலிருந்து கழிவில் வெளியேற்றியது.

    மிகுந்த சகிப்புத்தன்மையுடன் கிடைத்த கரன்சிகளை எடுத்து சுத்தப்படுத்தி எண்ணி பார்த்ததில் சுமார் $3,550 கரன்சிகள் அவர்களுக்கு மீண்டும் கிடைத்தது.

    வரிசை எண்கள் (சீரியல் நம்பர்கள்) சேதமடையாத கரன்சிகள் அவர்களுக்கு வங்கியில் மாற்றி தரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட இழந்த தொகையில் பெரும் பகுதி அவர்களுக்கு திரும்ப கிடைத்தது.

    இத்தனை போராட்டங்களுக்கு பிறகும் லா தம்பதியினருக்கு செசில் மீதான அன்பு குறையவில்லை.

    சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதை தொடர்ந்து "நாய்க்கு இவ்வளவு விலையுயர்ந்த உணவா?" என பயனர்கள் கிண்டல் செய்து பதிவிடுகின்றனர்.

    அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து, 16 மாநிலங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #DonaldTrump #Emergency
    கலிபோர்னியா:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு பாராளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.



    ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். இதற்கான நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

    நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டனர். அதன்படி, கலிபோர்னியா தலைமையில் 16 மாநிலங்கள் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளன. கலிபோர்னியா வடக்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நாட்டின் அவசரநிலையை அறிவித்திருப்பது அரசியலமைப்புக்கு விரோதமான செயல் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால், டிரம்பின் அவசர நிலை பிரகடனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.

    ஜனாதிபதியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும், மக்களின் வரிப்பணத்தை திருடுவதையும் தடுப்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் சேவியர் பெசிரா தெரிவித்தார். #DonaldTrump #Emergency 
    ×