என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lethal injection"

    • எலிசபெத் 8 முறை மார்பிலும், 1 முறை கழுத்திலும் குத்தி கொல்லப்பட்டார்
    • 2022ல் ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்கவில்லை

    அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 27 மாநிலங்களில் கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது.

    மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டில் விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு, தூக்கு மற்றும் துப்பாக்கியால் சுடப்படுதல் ஆகியவை அனுமதிக்கப்பட்ட முறைகளாகும்.

    1988 மார்ச் 18ல் அமெரிக்க தென்கிழக்கு மாநிலமான அலபாமாவின் கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett) சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

    இக்கொலையை செய்ததாக கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் சார்ல்ஸ், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்ததாகவும், அதனை சமாளிக்க மனைவியின் காப்பீடு தொகையை பெற விரும்பியதாகவும், அதற்கு இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சொல்லி அமர்த்தியிருந்ததும் தெரிய வந்தது.

    விசாரணையின் போது சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

    1996ல் ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

    2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2022ல் அலபாமாவில், தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகளை தேட முடியாமல் போனதால் அந்த முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அவருக்கு "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தண்டனை ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என தற்போது 58 வயதாகும் ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.

    நேற்று, இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.

    இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள்.

    அலபாமா, மிசிசிபி மற்றும் ஓக்லஹாமா ஆகிய மாநிலங்கள் இந்த முறைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் இதுவரை எந்த குற்றவாளிக்கும் இது பயன்படுத்தப்பட்டதில்லை.

    மரண தண்டனையை இந்த முறையில் நிறைவேற்றுவது மனிதத்தன்மையற்ற செயல் என ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் கூறினர். புதிய முறையை எதிர்த்து ஸ்மித் தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படலாம் என தெரிகிறது.

    • அவரது கால்களைத் தொட்டு வணங்கியபின் அவருடன் பேச்சுக்கொடுத்தனர்
    • குல்பாம் அவர்களைத் துரத்த முயன்றார். ஆனால் சில அடிகள் நடந்த பிறகு அவர் மயக்கமடைந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் வயிற்றில் விஷ ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பல் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்ட பாஜக தலைவரான 60 வயதான குல்பாம் சிங் யாதவ், நேற்று (திங்கள்கிழமை), ஜுனாவாய் அருகே தப்தாரா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். தகவலின்படி, நேற்று மதியம் ஒரு பைக்கில் மூன்று பேர் குல்ஃபாம் சிங் யாதவை சந்திக்க அடைந்தனர்.

    அவரது கால்களைத் தொட்டு வணங்கியபின் அவருடன் பேச்சுக்கொடுத்தனர். அப்போது மூவரில் ஒருவன் குல்பாம் சிங் எதிர்பாராத நேரத்தில் அவரது வயிற்றில் ஊசி ஒன்றை செலுத்தியுள்ளான். அதன்பின் உடனே அவர்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். குல்பாம் அவர்களைத் துரத்த முயன்றார். ஆனால் சில அடிகள் நடந்த பிறகு அவர் மயக்கமடைந்தார்.

    குடும்பத்தினர் அவரை குன்னூர் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால், அலிகார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அலிகார் செல்லும் வழியிலேயே குல்பாம் சிங் யாதவ் உயிர் பிரிந்தது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து குல்பாமுக்கு போடப்பட்ட ஊசி கைப்பற்றப்பட்டது.

    ஊசியில் இருந்தது எந்த மாதிரியான மருந்து என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. பாஜக தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

    2004 குன்னூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவை எதிர்த்து பாஜக சார்பில் குல்பாம் சிங் யாதவ் போட்டியிட்டார். மேலும் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட செயல்பாட்டாளராகவும், பாஜக மாவட்ட பொதுச் செயலாளராகவும், மேற்கு உ.பி.யின் பாஜக துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். 

    ×