search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver suicide"

    வால்பாறை அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை கஞ்சமலையை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 37). டிரைவர். இவரது மனைவி யோகேஸ்வரி. கடந்த வருடம் நடந்த விபத்தில் பத்மநாதன் படுகாயம் அடைந்தார். படுகாயம் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த பத்மநாதன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட பத்மநாதனின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசேதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    சென்னிமலை அருகே லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகில் உள்ள ஈங்கூரில் மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் முருகேசன் (51). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் விரக்தியடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். குடும்பம் நடத்த பணம் எதுவும் தராமல் இருந்ததால் இதுகுறித்து இவரது மனைவி இவரிடம் கேட்டுள்ளார். அப்போது வீட்டை விட்டு வெளியில் சென்ற முருகேசன் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை.

    பின்னர் அதிகாலையில் சென்று தேடியபோது ஈங்கூரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரிந்தது.

    இதுகுறித்து இவரது மகன் கவுரிசங்கர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    லாஸ்பேட்டையில் விபத்தில் ஏற்பட்ட காயத்தால் அவதி அடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை மகாவீர் நகர் முதல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் வின்சென்ட் சிபியோன், (வயது45). இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மணியம்மை (40) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மணியம்மை தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வின்சென்ட் சிபியோன் வாகனத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக காயம் அடைந்தார். இதையடுத்து காயம் காரணமாக வின்சென்ட் சிபியோன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மணியம்மை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகன், மகள் பள்ளிக்கு சென்றனர். வின்சென்ட் சிபியோன் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் காயம் காரணமாக அவதி அடைந்து வந்ததால் மனமுடைந்த வின்சென்ட் சிபியோன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    ஆஸ்பெட்டாஸ் கூரை கம்பியில் அவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். மாலையில் வேலைமுடிந்து வீடு திரும்பிய மணியம்மை கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வின்சென்ட் சிபியோன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர், ஏட்டு முருகதாஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசை கண்டித்து கால்டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    மறைமலைநகர்- சிங்கபெருமாள் கோவில் இடையே கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் ரெயிலில் அடிபட்டு தலை துண்டாகி கிடந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    ராஜேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ ஒன்று வெளியானது. அதில் எனது சாவுக்கு சென்னை போலீசே காரணம் என்று அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

    திருமங்கலம் பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவன பெண் ஊழியரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, போலீஸ்காரர்கள் 2 பேர் தரக்குறைவாக என்னை திட்டினர். இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்கிறேன் என்று ராஜேஷ் பேசி இருந்த வீடியோ விவகாரம் போலீசுக்கு எதிராக திரும்பியது.

    இதனைத் தொடர்ந்து ராஜேசிடம் அத்துமீறி நடந்துகொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்களும், கால்டாக்சி டிரைவர்களும் திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கால்டாக்சி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் போலீசை கண்டித்து போராட்டம் நடத்தினர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இரும்புலியூர் முதல் வண்டலூர் வரை வாகன பேரணி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பங்கேற்றன.

    தென்இந்திய சுற்றுலா வாகனங்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் இதுபோன்று போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் ராஜேசை தரக்குறைவாக திட்டிய போலீஸ்காரர்கள் யார்- யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரி, விசாரணை நடத்தி கமி‌ஷனரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையில் கால் டாக்சி டிரைவரை அவதூறாக பேசிய போலீஸ்காரர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    போக்குவரத்து போலீஸ்காரரான அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    கோவை அருகே குடி பழக்கத்தை கைவிட முடியாமல் 2 முறை தற்கொலைக்கு முயன்ற டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகன் கார்த்திக் (வயது 21). டிரைவர். திருமணமாகவில்லை. கார்த்திக் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனை கைவிட வலியுறுத்தி அவரது பெற்றோர் அறிவுரை கூறி வந்தனர். ஆனால் குடி பழக்கத்தை கைவிட முடியாமல் கார்த்திக் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் ஏற்கனவே குடி போதையில் 2முறை தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது கார்திக்கை வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றினர்.

    நேற்று இரவு வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கார்த்திக் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கார்த்திக்கை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வில்லியனூரில் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் புதுப்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 4 மகன்கள். இவர்களில் 3-வது மகன் பாரத் அம்பேத் (வயது 29). கார் டிரைவராகவேலை செய்து வந்தார்.

    இதற்கிடையே பாரத் அம்பேத்துக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பாரத் அம்பேத் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    அதுபோல் நேற்றும் வேலைக்கு செல்லாமல் பாரத் அம்பேத் வீட்டில் இருந்தார். அப்போது அவரது தாய் ஜெயலட்சுமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தால் எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்? என கண்டித்தார். பின்னர் ஜெயலட்சுமி வயல் வேலைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் தாய் கண்டித்ததால் மனமுடைநத பாரத் அம்பேத் தற்கொலை செய்து கொள்ள முடிவு செயதார். அருகில் உள்ள உறவினர் அஞ்சலை வீட்டுக்கு சென்ற பாரத் அம்பேத் அங்கு சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் பாரத் அம்பேத்தை மீட்டு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிசசைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாரத் அம்பேத் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், ஏட்டு கிருபாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கக்கன் காலனியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 42). டாக்சி டிரைவர். இவரது மனைவி பிந்து. இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி புதிதாக ஆம்னி வேன் வாங்கினார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக அஜித்குமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜித்குமாரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருணாநிதி இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை கணபதி பாரதி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (58). தி.மு.க. தொண்டர். மேலும் தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாரதி நகரில் சாலை ஓரம் வி‌ஷம் குடித்த நிலையில் முத்துச்சாமி மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். முத்துச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி முத்துச்சாமி இறந்தார்.

    அவர் தனது சட்டைப் பையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது பெயர், அவரது மகன் பெயர், செல்போன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது. கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேனி அருகே மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் அப்பிபட்டி காந்திஜி நடுநிலைப்பள்ளி விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(43). இவர் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் ராஜேந்திரன் மிதமிஞ்சிய போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் ஆர்த்தி சத்தம்போட்டார். இதில் மனமுடைந்த ராஜேந்திரன் தன்னுடைய மதுபழக்கத்தால் வீட்டில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது என வேதனையடைந்து தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர், தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே குழந்தை இல்லாததால் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 36). இவரது மனைவி முத்து மாரியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    குடிபோதைக்கு அடிமையான சரவணக்குமார் தனது டிரைவர் தொழிலையும சரிவர செய்யவில்லை.

    வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடியபடி இருந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக சரவணக்குமாரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனாலும் சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×