என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூரில் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
புதுச்சேரி:
வில்லியனூர் புதுப்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 4 மகன்கள். இவர்களில் 3-வது மகன் பாரத் அம்பேத் (வயது 29). கார் டிரைவராகவேலை செய்து வந்தார்.
இதற்கிடையே பாரத் அம்பேத்துக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பாரத் அம்பேத் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
அதுபோல் நேற்றும் வேலைக்கு செல்லாமல் பாரத் அம்பேத் வீட்டில் இருந்தார். அப்போது அவரது தாய் ஜெயலட்சுமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தால் எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்? என கண்டித்தார். பின்னர் ஜெயலட்சுமி வயல் வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் தாய் கண்டித்ததால் மனமுடைநத பாரத் அம்பேத் தற்கொலை செய்து கொள்ள முடிவு செயதார். அருகில் உள்ள உறவினர் அஞ்சலை வீட்டுக்கு சென்ற பாரத் அம்பேத் அங்கு சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் பாரத் அம்பேத்தை மீட்டு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிசசைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாரத் அம்பேத் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், ஏட்டு கிருபாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்