என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் கருணாநிதி இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்11 Aug 2018 7:37 AM GMT (Updated: 11 Aug 2018 7:37 AM GMT)
கருணாநிதி இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை கணபதி பாரதி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (58). தி.மு.க. தொண்டர். மேலும் தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாரதி நகரில் சாலை ஓரம் விஷம் குடித்த நிலையில் முத்துச்சாமி மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். முத்துச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி முத்துச்சாமி இறந்தார்.
அவர் தனது சட்டைப் பையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது பெயர், அவரது மகன் பெயர், செல்போன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது. கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கணபதி பாரதி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (58). தி.மு.க. தொண்டர். மேலும் தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாரதி நகரில் சாலை ஓரம் விஷம் குடித்த நிலையில் முத்துச்சாமி மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். முத்துச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி முத்துச்சாமி இறந்தார்.
அவர் தனது சட்டைப் பையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது பெயர், அவரது மகன் பெயர், செல்போன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது. கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X