search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctor"

    • கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அகரம்சேரி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததது. இதில், கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் நர்சுகள் தையல் போட்டுள்ளனர். மாலை 4 மணி ஆகியும் டாக்டர் வராததால் கார்த்திகேயன் வலியால் துடித்துள்ளார். முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கார்த்திகேயன் தலையில் சிக்கிக்கொண்ட நட்டு அகற்றப்பட்டது.

    இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி கூறியதாவது:-

    இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு அனைத்திற்கும் விளக்கம் தெரியும். குற்றம் நிரூபனமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

    • 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
    • சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி இட்டேரி சாலை பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது37). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி கவுசல்யா. இவரும் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். பின்னர் ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. போலீசாரின் தீவிர கண்காணிப்பால் குற்ற சம்பவங்கள் குறைந்தன. தற்போது மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டத் தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் உதயகுமாரை தாக்கி கட்டிப்போட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் மற்றொரு டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்குமோ? என சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆரம்பத்தில் பதில் அளிக்காத டாக்டர்களுக்கு தற்போது பகிரங்க நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது.
    • 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாட்னா :

    பீகார் மாநில சுகாதாரத்துறை, அறிவிப்பு இல்லாமல் நீண்ட காலமாக விடுப்பில் இருந்த 62 அரசு டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும், மேலும் சிலர் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பு சுகாதார துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அனுமதியற்ற விடுமுறைக்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பதில் அளிக்காத டாக்டர்களுக்கு தற்போது பகிரங்க நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது. இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர இருக்கிறது. அதிகபட்ச ஒழுங்கு நடவடிக்கையாக தவறு செய்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட சட்டத்தில் இடம் உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும்.
    • ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரியில், டாக்டர் வந்தனா தாஸ், சிகிச்சைக்கு வந்த கைதியால் கத்தரியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் 2012-ம் ஆண்டின் கேரள சுகாதாரத்துறை பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து இருந்தார்.

    அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மருத்துவத் துறையின் முழு பாதுகாப்புக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

    புதிய சட்ட திருத்த மசோதா குறித்து கேரள சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய சட்ட திருத்த மசோதா மூலம், சுகாதாரத்துறையில் உள்ள டாக்டர்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    ஆஸ்பத்திரிகளில் அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. கொலை தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும். டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் ஆகியோர் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் இந்த புதிய சட்ட திருத்தத்தின் கீழ் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

    இந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். சுகாதாரத்துறையினருக்கு எதிரான குற்றங்களுக்கு, சிறை தண்டனை மட்டுமின்றி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.

    டாக்டர்கள், ஊழியர்களை தாக்குபவர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    மந்திரிசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவர்னரின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னரின் அங்கீகாரம் கிடைத்த பின், சட்டசபை கூட்டத்தில் சுகாதாரத்துறை தொடர்பான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும்.
    • உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம்.

    குடிமங்கலம் :

    சிக்ஸ் பேக்ஸ்' உடலுக்காக இன்றைய இளைஞர்கள் தங்களை வருத்திக் கொள்ள தயங்குவதில்லை.இதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கின்றனர்.தசைகளை சிறந்த முறையில் வலுப்பெற செய்ய, புரோட்டீன் சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்கின்றனர்.

    இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- வயது மற்றும் எடைக்கு ஏற்ப தேவையான அளவு புரோட்டீனை எடுத்துக்கொ ண்டால் போதும்.ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும். அதாவது ஒருவரின் எடை 50 கிலோ எனில் 75 கிராம் புரோட்டீன் போதும்.தொடர்ச்சியாக, உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம். எளிதாக தசையை வலுப்பெற வைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் அதற்கு பின்னரும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு முறையை பின்பற்ற வேண்டும். இத்துடன் சிறிது கார்போ ஹைட்ரேட், கொழுப்பு கொண்ட உணவு சாப்பிடலாம். தேவையின்றி அதிக புரோட்டீன் உட்கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.நாம் உண்ணும் உணவிலேயே புரோட்டீன் உள்ளது. காய்கறிகளில் புரோட்டீன் உள்ளவற்றை சாப்பிடலாம்.இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. மாறாக அதிக புரோட்டீன் உள்ள உணவு உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும், சிறுநீரகம் பாதிப்படைவது உறுதி. உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக புரோட்டீன் தேவை என ஒரு சில புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்கின்றனர்.

    இது உடனடி பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் சிறிது காலத்துக்கு பின் பாதிப்பு ஏற்படும்.ஒரு சிலர் புரோட்டீன் உணவை தவிர வேறு எதையும் உட்கொள்வதில்லை. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்றனர்.

    • புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
    • உணவளிக்கும் போதும், எச்சங்களை அகற்றும் போதும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    புறா வளர்ப்பதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் அதிகம் உண்டு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். புறா எச்சம் காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், கொரோனா பாதிப்பு அவரது நுரையீரலை மேலும் பலவீனப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததன் பின்னணியில் புறாக்களின் எச்சம் காரணமாக இருந்தது அந்நாட்டு மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புறாக்களுக்கு உணவளிப்பதையும், அதன் எச்சத்தை சுத்தம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சில வருடங்களில் அவர் மூச்சு விட முடியாமல் தவித்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் பிழைத்து இருக்கிறார். மருத்துவ செலவுக்காக அவர் ரூ.35 லட்சம் செலவழித்து உள்ளார்.

    புறாக்களின் எச்சங்களை சுவாசிப்பது மிகப்பெரிய தீங்கை விளைவித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    புறாக்களின் இறக்கையில் இருக்கும் செல் பூச்சிகள், எச்சங்களில் இருந்து வெளி வரும் பூஞ்சைகள் ஆகியவற்றை சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்கிறது. இது நாளடைவில் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கிறது. நுரையீரலில் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டறிவது கடினம் என்பதால் தொற்றுகள் நுரையீரல் திசுக்களை செயலற்றதாக்கி விடுகிறது. இது போன்ற பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

    புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. எனவே புறாக்களை கையாளும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    புறாக்களுக்கு உணவளிக்கும் போதும், எச்சங்களை அகற்றும் போதும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தில் கை வைக்கவோ, உணவு சாப்பிடவோ கூடாது. புறாக்களின் எச்சங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கால்நடை வளர்ப்பு தொழில் மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.
    • வெப்ப நிலையால் வாய் திறந்த நிலையில் சுவாசித்தல் உள்ளிட்டவை வெப்ப அயர்ச்சி பாதிப்பு அறிகுறிகள்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் கால்நடை வளர்ப்புத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. விவசாயம் அல்லாத காலங்களில், கால்நடை வளர்ப்பு தொழில் மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு வெப்ப அயர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.

    சுத்தமான தண்ணீரை வழங்குவதன் வாயிலாக, வெப்ப அயற்சி வராமல் தடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:- நிழலில்தஞ்சம் அடைதல், அதிகமானதண்ணீர் பருகுதல், பசியின்மை, அதிகமானஉமிழ்நீர் வடிதல், அதிக உடல் வெப்ப நிலை யால் வாய் திறந்த நிலையில் சுவாசி த்தல் உள்ளிட்டவை வெப்ப அயர்ச்சி பாதிப்பு அறிகுறிகள்.கலப்புத் தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு துாவும் போது,மாடுகளின் தண்ணீர் குடிக்கும்அளவு அதிகரிக்கும்.வறண்ட வெப்ப நிலையின்போது கால்நடைகள்அதிக ப்படியான உலர் மற்றும் நார் சத்துக்களையும், குறை வாக செரிக்க கூடிய தீவனங்களையும் உட்கொ ள்கின்றன.சுத்தமான தண்ணீரை முறையாக பருகினால் கால்நடை களுக்கு வெப்ப அயர்ச்சி நோய் ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

    • குழந்தை பெற்ற பின்பு தாமரைச்செல்விக்கு ரத்த கசிவு இருந்தது. இதற்கு சிகிச்சை அளித்து வந்தோம்.
    • ரத்த கசிவு நீடித்ததால் மீண்டும் இங்கு வந்த அவருக்கு சோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி, தொழிலாளி. இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 25). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான தாமரைச் செல்வி பிரசவத்திற்காக கடந்த 6-ந்தேதி ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆபரேசன் தாமரைச் செல்விக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் பிரசவம் முடிந்த பின்பு அவருக்கு அடிக்கடி ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவரை ஆஸ்பத்திரியில் தொடர்ந்து இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அதை கேட்காமல் உறவினர்கள் கடந்த 9-ந்தேதி தாமரைச் செல்வியை வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்ற பின்பும் அவருக்கு ரத்தகசிவு தொடர்ந்து நீடித்ததால் தாமரைச்செல்வி உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து உறவினர்கள் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு விவரம் கேட்ட டாக்டர்கள், பிரசவம் பார்த்த ஆஸ்பத்திரிக்கே செல்லுமாறு கூறினர். இதனை தொடர்ந்து தாமரைச்செல்வி மீண்டும் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தாமரைச் செல்விக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் ரத்தம் உறைந்த காரணத்தால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் மீண்டும் சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் தற்போது ஆஸ்பத்திரியில் உடல்நலம் தேறி வருகிறார்.

    இதற்கிடையே குழந்தை பெற்ற பெண்ணில் வயிற்றில் கவனக்குறைவாக பஞ்சு வைத்ததாக தகவல் பரவியது. இதற்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மாரியப்பன் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-

    குழந்தை பெற்ற பின்பு தாமரைச்செல்விக்கு ரத்த கசிவு இருந்தது. இதற்கு சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் உறவினர்கள் அவரை முன்கூட்டியே அழைத்து சென்றுவிட்டனர். ரத்த கசிவு நீடித்ததால் மீண்டும் இங்கு வந்த அவருக்கு சோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.

    வயிற்றில் மருத்துவர்கள் கவனக்குறைவாக பஞ்சு வைத்ததாக வதந்தி பரவி இருப்பது வருத்தமடைய செய்கிறது. அது முற்றிலும் தவறான தகவல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராட்சத அலையில் டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா சிக்கிக் கொண்டனர்.
    • உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்திற்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர்.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், நேற்று திருவனந்தபுரம் விழிஞ்சம் வந்தனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா விடுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் சுற்றுலா வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் ராஜாத்தி (வயது 45) தனது உறவினர் மகள் சாய்கோபிகா (9) மற்றும் சிலருடன் கடற்கரையில் நடைபயிற்சி சென்றார்.

    அவர்கள் கடல் அலை யில் கால் நனைத்தபடி நடந்து சென்ற போது, ராட்சத அலை வந்தது. அந்த அலையில் டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா ஆகியோர் சிக்கிக் கொண்ட னர். அவர்களை அங் கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் பலனின்றி டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பேச்சு பயிற்சி சிகிச்சையாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
    • கொரோனா முழு அடைப்பு காரணமாக குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு இல்லாததால் குழந்தைகளின் பேச்சு மெதுவாக உள்ளது.

    திருப்பதி:

    கொரோனா தொற்று பரவல் கடுமையாக இருந்த போது முழு அடைப்பு போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்த முழு அடைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள் சிறைப்பட்டு கிடந்தனர். வெளி பழக்க வழக்கங்கள் இல்லாமல் குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாதது போல் இருந்தனர்.

    பிறந்த குழந்தைகளால் சரிவர பேச முடியாமல், குழந்தைகள் தங்கள் இயல்பான ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை இழந்தனர்.

    சக குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பெற்றோர், உறவினர்களுடன் பழக முடியாமல் விலகி செல்போன்களில் மூழ்கினர். இதன் தாக்கம் அவர்களின் மன வளர்ச்சியில் தற்போது காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தங்கள் குழந்தைகள் சரியான வார்த்தைகளைப் பேச முடியாததால் பெற்றோர்கள் மருத்துவமனைகளை நாடி செல்வது அதிகரித்துள்ளது. விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மனநலப் பிரிவுக்கு வாரத்திற்கு 20 பேர் வரை இதுபோன்ற குழந்தைகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகின்றனர். இதனால் பேச்சு பயிற்சி சிகிச்சையாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

    கொரோனா பரவலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, பிறந்த குழந்தைகளின் வயது இப்போது 3-5 வயதுக்குள் உள்ளது.

    அவர்களின் உடல் வளர்ச்சியைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சில குழந்தைகள் இயற்கையான மன முதிர்ச்சி குறைவாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

    பேச்சுத் திறன் இல்லாமை, பதிலளிக்காதது போன்ற குறைபாடுகளைக் கண்ட பெற்றோர் மருத்துவர்களை தொடர்பு கொள்கின்றனர். ப்ளே ஸ்கூல் அல்லது நர்சரியில் சேர்க்கப்படும் வயதில், பேச்சு சிகிச்சையாளர்களிடம் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

    குழந்தைகள் இயல்பான நிலையில் இல்லாததால் 3 ஆண்டுகளுக்குப் பிறகும், எல்கே.ஜியில் சேர்க்க முடியவில்லை.

    இப்போது குழந்தைகளுக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுப்பதே எங்கள் வேலையாகிவிட்டது' என்கிறார் விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை.

    இது சம்பந்தமாக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் உளவியலாளர் துர்காபிரசாத் என்பவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனா முழு அடைப்பு காரணமாக குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு இல்லாததால் குழந்தைகளின் பேச்சு மெதுவாக உள்ளது. பெற்றோர் இருவரும் வேலை செய்யும் குடும்பங்களில் இந்த பிரச்சனை அதிக அளவில் உள்ளது. குழந்தைகள் 2 வயது வரை செல்போன் மற்றும் டிவியிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

    குழந்தை பருவத்தில் சுற்றுச்சூழலை கவனிப்பதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது என்றார். 

    • சித்த மருத்துவம் கற்றுக்கொண்டு போலியாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததார்.
    • குறைந்த படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தபடி அப்பகுதி மக்களுக்கு ஆங்கிலம் மருத்துவம்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக முத்துப்பேட்டை மற்றும் எடையூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நாச்சிகுளம் பகுதியில் சோதனை செய்தபோது அப்பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம்(வயது 62) என்பவர் சித்த மருத்துவம் கற்றுக்கொண்டு போலியாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த அடைஞ்சவிளாகம் பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(56) என்பவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது .இதனையடுத்து ராஜேநதிரனை போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல் முத்துப்பே ட்டை அடுத்த எடையூர் போலீசார் அம்மலூர் மாரியம்மன் கோவில் தெரு வில் சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(65) என்பவர் குறைந்த படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தபடி அப்பகுதி மக்களுக்கு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிவசுப்பிரமணியனை கைது செய்தனர்.

    • தட்டார்மடம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
    • இதில் சுமார் 90 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட த்தின் சார்பாக தட்டார்மடம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இதில் சுமார் 90 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

    5-ம் நாளில் கண் பரிசோதனை, இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. தட்டார் மடத்திலுள்ள ஏஞ்சல் நகரில் அமைந்துள்ள தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் டாக்டர் முகமது தலைமையில் கண் மருத்துவ முகாமும், நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் டாக்டர் அருணாச்சலம் தலைமையில் இலவச இருதய பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

    முகாமை தட்டார்மடம் அண்ணாள் நகர் பங்குத்தந்தை ஜோசப் கலைச்செல்வன் ஆசீர் வழங்கி தொடங்கி வைத்தார். ஊர் நலப் பொருளாளர் மகேஷ் ராஜா உடனிருந்தார். அனைத்து இந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை, தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டார். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களான உமா பாரதி, பேராசிரியை வளர்மதி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

    ×