search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK protest"

    • இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து புறாக்களை பறக்கவிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    கோவை:

    மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோவை மாவட்டத்தில் தெற்கு தாசில்தார் அலுவலகம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடல் ஆகிய 3 இடங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடந்தது.கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கோவை மாநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வி. ஜி. கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திருமலை ராஜா, அவைத்தலைவர் ராஜ்குமார், பொருளாளர் முருகன், பகுதி செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, கோவை லோகு, வ.ம.சண்முகசுந்தரம் மற்றும் பூம்புகார் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் காலையிலேயே தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதுதவிர மத்திய அரசின் நீட் தேர்வு, மத்திய அரசின் கல்வி கொள்கையை தமிழகத்தில் திணிப்பதற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு புறா மூலமாக தூது அனுப்புவது போல புறாக்களை பறக்க விட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கினார். இதில் வடவள்ளி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

    கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கோவை மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தை யொட்டி அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #KodanadVideo #DMKProtest
    சென்னை:

    கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் பதவி விலக வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.



    முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டுமென்றும், தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 24-ம் தேதி அன்று காலை 10 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி, ஆளுநர் மாளிகை நோக்கி இன்று காலை திமுக நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர். ஆளுநர் மாளிகையை நெருங்கியபோது, போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து, திமுகவினரை தடுத்து நிறுத்தினர். ஆனால் திமுகவினர் தொடர்ந்து முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் செல்ல விடவில்லை. இதையடுத்து திமுகவினர் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். #KodanadVideo #DMKProtest
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டியில், தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. #gajacyclone #relief #dmk
    திருத்துறைப்பூண்டி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். ஆடலரசன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் பாண்டியன், கோட்டூர் ஒன்றிய செயலாளர்கள் பாலஞானவேல், தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஓட்டு வீடு, கூரை வீடு, மாடி வீடு என பாரபட்சம் இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர்கள் கார்த்தி, ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமாரை, அவரது அலுவலகத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  #gajacyclone #relief #dmk
    சமூக ஆர்வலர்கள் கைதை கண்டித்தும், சிட்லப்பாக்கம் பேரூராட்சியை கண்டித்தும் இன்று தி.மு.க.வினர் சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    தாம்பரம்:

    சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் கால்வாய் பணி நடந்து வருகிறது. இதில் டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் 15-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

    இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். அதில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இருந்தார்.

    இதையடுத்து சமூக ஆர்வலர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் கைதை கண்டித்தும், சிட்லப்பாக்கம் பேரூராட்சியை கண்டித்தும் இன்று தி.மு.க.வினர் சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இதற்கு புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி நிர்வாகத்தையும், போலீசையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் தேவேந்திரன், லோகநாதன், அமுதா குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயிலை மாங்கொல்லையில் இன்று மாலை அ.தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேசுகிறார். #DMK #Kanimozhi
    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயிலை மாங்கொல்லையில் இன்று மாலை அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

    அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை கண்டித்து நடத்தப்படும் இந்த பொதுக் கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் த.வேலு தலைமை தாங்குகிறார். இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகிறார்கள்.

    கூட்டத்தில் கு.க.செல்வம், எம்.கே.மோகன், குமரி விஜயகுமார், எம்.டி.ஆர். நாதன், துரை, வெல்டிங் மணி, ஐ.கென்னடி, செல்வி சவுந்தரராஜன், ராணி ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அன்பு கபாலி, ரேவதி, மலர், டில்லிராணி உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இதே போல் வருகிற 1-ந்தேதி (திங்கள்) மாலை 6 மணிக்கு தி.நகர் பஸ் நிலையம் அருகே முத்துரங்கன் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி, ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகின்றனர். பகுதிச் செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, வட்டச் செயலாளர் உதயசூரியன், ஜானகிராமன், அசோக்நகர் சுப்பையா, லலிதாபுரம் துரை மற்றும் ஏராளமானோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். #DMK #Kanimozhi
    அரியூர் ரெயில்வே மேம்பால பணி தாமதம் ஏற்பட்டதால் இதனை கண்டித்து திமுகவினர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். #dmkprotest

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் ரெயில்வே மேம்பால பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கால வரையறைக்குள் முடிக்காமல் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூரில் இருந்து ஸ்ரீபுரம் தங்க கோவில், ஊசூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், அரசு ஊழியர்கள், தங்கக் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதற்கு மாற்று வழியாக உள்ள சித்தேரி ரெயில்வே மேம்பால தரைச்சாலையும் முறையாக பராமரிக்காமல் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

    மேலும் வேலூர் கஸ்பா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கஸ்பா ரெயில்வே மேம்பாலம் பணியிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து அரியூர் ரெயில்வே கேட் அருகே இன்று வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் விழுப்புரம், காட்பாடி பாசஞ்சர் ரெயிலை மறித்து போராட்டத்தில ஈடுபட்டனர்.

    கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி 4-வது மண்டல செயலாளர் அய்யப்பன் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    அரியூர் ரெயில்வே மேம்பால கட்டுமான பணியை நிறைவேற்ற வேண்டும்.

    தற்போது அணைக்கட்டு பஸ்கள் செல்லும் சித்தேரி சாலையை சீரமைக்க வேண்டும், கஸ்பா ரெயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரியூர் போலீசார் மறியல் செய்த 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர். #dmkprotest

    குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து நேற்று நாமக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்தும், அதில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாவட்ட பொறுப்பாளருமான காந்திசெல்வன் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என்பது குறித்தும், ஊழலில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் உடையவர், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ராணி, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசாமி, பொன்னுசாமி, பழனியம்மாள், சரஸ்வதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மோகன் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #Kanimozhi #DMKProtest
    திண்டிவனம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் திண்டிவனம் வண்டிமேடு வ.உ.சி. திடலில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் இது. தமிழகத்தில் ஊழல், லஞ்சம், கொள்ளை அதிகரித்துள்ளது.

    கேரளாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட, தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பை விட அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பேரழிவுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

    அத்தனை துறைகளிலும் ஊழல் நடக்கிறது. நல்ல அதிகாரிகள் மாற்றப்பட்டு அவர்களை தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள். மக்களால் ஓட்டுப்போட்டு முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் முதல்-அமைச்சராகி உள்ளார்.

    இந்த ஆட்சியில் எந்த திட்டமும் வளர்ச்சி அடையவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. தலைமை செயலாளர் இந்த அரசுக்கு பினாமியாக செயல்படுகிறார். நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்த பாரதிய ஜனதா பிரமுகர் எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைப்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி ஆர்வமாக உள்ளார். இதற்கு கமி‌ஷன்தான் காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #Kanimozhi #DMKProtest
    அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம் மத்திய, தெற்கு மாவட்டங்கள் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், ராதாமணி, மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட தளபதி நற்பணி மன்ற தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் தனசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துகுமார், அவைத்தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாவாடை குழந்தைசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் வக்கீல் அருள்குமார், சிங்காரவேல் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.
    ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். அவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
    வேலூர்:

    காட்பாடியில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை கடைகள் 2016ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடி 39 லட்சத்து 13 ஆயிரத்து 350-க்கு விற்பனை நடந்துள்ளது.

    ரூ.5.97 லட்சம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. தரமான காய்கறிகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும், வெளிமார்க்கெட்டுகளில் காய்கறி விலையை கட்டுப்படுத்துவதற்காகவே பண்ணை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை. இந்தாண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படுகிறது. வேளண்மை கூட்டுறவு சங்கங்களில் ரசாயன உரத்துடன் இயற்கை உரமும் விற்பனை செய்யப்படுகிறது.


    ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். கசாப்பு கடைக்காரன் காரூன்யம் பேசுவது போல் உள்ளது. ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி தான் கலைக்கப்பட்டது. சர்க்காரியா கமி‌ஷனால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சியும் தி.மு.க. தான்.

    தி.மு.க.வின் சொத்துக்கள் எவ்வளவு. இவர்கள் என்ன கல்குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா? இவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக உள்ளது. யார்... யாரை குற்றம் சாட்டுவது என்று பொதுமக்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.

    தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், இன்னாள் மாவட்ட செயலாளர்களை ஆராய வேண்டும். அவர்களின் ஆரம்ப நிலை என்ன? இப்போது சொத்து சேர்த்தது எப்படி? அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. திட்டங்கள் சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
    டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலகாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று இன்று நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஜெ.அன்பழகன் பேசினார். #DMK #DMKProtest
    சென்னை:

    அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்தும், குட்கா ஊழலில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கி உள்ள போலீஸ் அதிகாரிகள், அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் காணப்படுகிறது. பொதுப் பணித்துறை நெடுஞ்சாலைத் துறையில் உள்ள ஊழல்களை உயர்நீதிமன்றமே பட்டியலிடுகிறது. இதுவரை கொடுக்கப்பட்ட டெண்டர் விவரங்களை பட்டியலிட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி உள்ளது. ஆனாலும் இவர்கள் பதவி விலக மறுக்கிறார்கள்.

    எந்த புகாருக்கும் ஆளாகாதவர்தான் பதவி நீடிப்பில் டி.ஜி.பி.யாக இருக்க முடியும். ஆனால் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பதவி விலகாமல் தொடர்ந்து நீடிக்கிறார்.

    எனவே அவர் பதவி விலகாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் நான் வழக்கு தொடருவேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மு.க.தமிழரசு, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், எம்.எல்.ஏ.க்கள் அண்ணா நகர் மோகன், கு.க.செல்வம், தலைமை கழக நிர்வாகி பூச்சி முருகன், வி.எஸ்.ராஜ், பகுதி செயலாளர்கள் சேப்பாக்கம் மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மா.பா.அன்புதுரை, ராமலிங்கம், கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, வேலு, அகஸ்டின்பாபு, பரமசிவம், மாணவரணி மாநில துணை செயலாளர் மோகன், பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் பா.சிதம்பரம், லாகூர், கோவிந்தன், மாரி, பாபா சுரேஷ், மேட்டுக்குப்பம் கமலக்கண்ணன், முத்து ராமன், தனிகாசலம், பிரசன்னா, ராமச்சந்திரன் வடிவேலு உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கந்தன் சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

    தாம்பரத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, திண்டுக்கல் லியோனி, வைத்தியலிங்கம், தமிழ்மணி, மேடவாக்கம் ரவி, படப்பை மனோகரன், பெருங்களத்தூர் சேகர், புகழேந்தி, பம்மல் கருணாநிதி, பொழிச்சலூர் வனஜா, மாவட்ட பிரதிநிதி ரஞ்சன், செல்வகுமார், இமயவர்மன், ஜோசப் அண்ணாதுரை, ஜானகிராமன், சிவக்குமார், திருநீர்மலை ஜெயக்குமார், காமராஜ், தமிழ்மாறன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    கட்டுமானத் தொழிலாளர் கட்சி பொன்.குமார், எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், க.தனசேகரன், மகேஷ்குமார், பாலவாக்கம் த.விஸ்வநாதன், துரை.கபிலன், வாசுகிபாண்டியன், இப்ராஹிம், பி.டி.சி.செல்வராஜ், எஸ்.வி.ரவிச்சந்திரன், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், குணாளன், சந்திரன், கண்ணன், மு.ராஜா, சுசேகர், பாலவாக்கம் மனோகர், சி.பிரதீப், பிரேமா, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு மன்றங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்.

    இதில் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தி.மு.க. மாநில பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், கிரிராஜன், ஆர்.டி.சேகர், வே.சுந்தர்ராஜன், ஜெபதாஸ் பாண்டியன், மருது கணேஷ், பி.டி.பாண்டிச்செல்வம், ரெயின்போ விஜயகுமார், ஏ.வி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, தமிழகத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி ஊழலில் மிதந்து கொண்டுள்ளது. குட்கா ஊழலுக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. பதவி விலக வேண்டும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு கஜானாவுக்கும், மக்களின் திட்டங்களுக்கம் வரிப்பணம் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளையடிக்கின்றனர்.

    ஆகவே தமிழகம் தலை நிமிர தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி மலர அனைவரும் சம்மதமேற்று பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சேகர்பாபு எம்.எல்.ஏ. பேசும்போது, ‘‘தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் அமைச்சர் மீது குட்கா வழக்கு, சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் டி.ஜி.பி. மீது ஊழல் வழக்கு உள்ளது. இது பற்றி முதல்-அமைச்சரிடம் புகார் செய்ய சென்றால் அவர் மீதே கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. துணை முதல்-அமைச்சர் மீதும் புகார் உள்ளது.

    டெண்டர் விடுவதில் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் இப்படி எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும் கட்சியில் வெற்றிடம் ஏற்பட்டு விடும் என்று சொன்னார்கள். ஆனால் தளபதி தலைமைஏற்று கட்சி வீறுநடை போட்டு செல்கிறது. விரைவில் சட்டமன்ற தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ வரும். இதில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி ஏற்ப அனைவரும் பாடுபட வேண்டும்’’ என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், தாயகம் ரவி, ரவிச்சந்திரன் சங்கரி நாராயணன், சல்மா, பிரசன்னா, வக்கீல் சந்துரு, பகுதி செயலாளர்கள் ஜி.சி.எப்.முரளி, ராஜசேகர், நாகராஜன், ஜோசப் சாமுவேல், வாசு, ஜெயின், விஜயகுமார், வேலு தமிழ் வேந்தன், சாமிக்கன்னு, உதயா மாவட்ட நிர்வாகி ஏகப்பன், தேவஜவகர் ராதாகிருஷ்ணன், புனித வதி எத்திராஜன், ஆசாத் செம்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கவியரசு நன்றி கூறினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். #DMK  #DMKProtest
    நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் அருகே அவதூறாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற மறியல் போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் பங்கேற்க கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன், நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு மற்றும் நிர்வாகிகள் பசலியான், ஷேக்தாவூது, உதயகுமார் உள்பட பலர் திரண்டு வந்தனர். அவர்களுடன் வந்த தொண்டர்கள் சிலர் போராட்டம் நடைபெறும் பகுதியில் திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி கூறினர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாதுகாப்பு பணிக்கு வந்தார். அவர் தி.மு.க.வினரை நோக்கி சில வார்த்தைகளை பேசினார். அவரது பேச்சுக்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.

    தி.மு.க.வினரை சப்-இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக பேசியதாக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் தொண்டர்கள் புகார் கூறினர். சப்-இன்ஸ்பெக்டர் தன் பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய சுரேஷ்ராஜன், அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்றபடி அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள செம்மாங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

    சுரேஷ்ராஜனுடன் ஏராளமான தி.மு.க.வினரும் சாலையில் அமர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    உடனே டி.எஸ்.பி. இளங்கோவன் மறியலில் ஈடுபட்ட சுரேஷ்ராஜனை சமரசம் செய்ய முயன்றார். அதற்கு அவர் சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம், இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் அவர் நடுரோட்டில் படுத்தபடி கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களும் எழுப்பினார். தி.மு.க.வினரின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அண்ணா பஸ் நிலையம் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி. இளங்கோவனிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் சுரேஷ் ராஜனை சந்தித்து இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    எஸ்.பி. ஸ்ரீநாத்தின் உறுதி மொழியை ஏற்று சுரேஷ் ராஜனும், தி.மு.க.வினரும் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு சுரேஷ் ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வினரை போலீசார் வேண்டும் என்றே அவதூறாக பேசி வருகிறார்கள். தி.மு.க.வினர் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே போராடுகிறார்கள். போராடும் அவர்களை போலீசார் இழிவாக பேசுகிறார்கள். இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

    இந்த பிரச்சனையை தமிழகம் தழுவிய பிரச்சனையாக கொண்டுச் சென்று போராட்டம் நடத்துவோம். இன்று மாவட்ட எஸ்.பி. எங்களிடம் அளித்த உறுதி மொழிப்படி சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாளை முதல் நாங்கள் போராட்டத்தில் குதிப்போம்.

    என்ன போராட்டம் நடத்துவது என்பது பற்றி அனைத்து கட்சி நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×