search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dismissal"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார்.
    • பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68) மீன் வியாபாரி. கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக் (36) கார் டிரைவர்.

    இவர்கள் நேற்று மதியம் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி விவேக் இறந்தார்.

    இவர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இவர்கள் ஒருவர் குடித்த மதுவை மற்றொருவர் குடித்ததால் இரண்டு பேரும் பலியாகினர்.

    தற்கொலையா ? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் பார் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டார்.

    • ராதா (35), என்பவர் தோப்பில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தபோது,சுமார் 25 வயது மதிக்கதக்க ஒரு நபர் வந்தார்.
    • அந்த நபர் ராதாவை பின் பக்கமாக சென்று அவரது வாயை பொத்தி தாலி செயினை கழற்றி கொடு. இல்லைஎன்றால் உன் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கொஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் ராதா (35), இவர் கடந்த 2022-ம்ஆண்டு ஜூலை மாதம்28-ந தேதி காடாம்புலியூர் மாயா கார்டனில் ரவிபலா தோப்பில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தார்.அப்போது சுமார் 25 வயது மதிக்கதக்க கருப்பு நிற பனியன் மற்றும் மஞ்சள் நிற அரைக்கால் சட்டையுடன் வந்த வாலிபர் ஒருவர் இவரிடம் இந்ததென்னை மரம் யாருடையது அவர் போன் நம்பர் தெரியுமா? என்று கேட்டுள்ளார். எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்த மோட்டார் கொட்டகையில் தூங்காமல் படுத்திருந்தார். அப்போது அந்த நபர் ராதாவை பின் பக்கமாக சென்று அவரது வாயை பொத்தி தாலி செயினை கழற்றி கொடு. இல்லைஎன்றால் உன் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான். அதற்கு பயந்துகொண்டு சத்தம் போட முடியாமல் இருந்தபோது உடனே அவரது கழுத்தில் கிடந்த தாலி செயினை அவன் எடுக்கும் போது அதை கையால் பிடித்துக் கொண்டார். அதில் பாதி தாலி செயின் இவர் கையில் இருந்தது. மீதியை அவன் எடுத்து சென்று விட்டான். ராதாவின் செல் போனை யும் எடுத்துக்கொண்டு முந்திரி தோப்புக்குள் புகுந்து ஓடிவிட்டான், இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை பறித்து சென்றது காடாம்புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து நகைகளை மீட்டனர். இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நகையை பறித்த பிரகாசுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • சுங்க இலாகா மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதால் தான் தங்கம் கடத்தல் நடப்பதாகவும் புகார் எழுந்தது.
    • கோழிக்கோடு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் சிக்கினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் பகுதிகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புகார்கள் உள்ளன. நாட்டிலேயே அதிக அளவில் கேரளாவில் தான் தங்கம் கடத்தல் பெருமளவில் நடந்து வருகிறது.

    இதனை தடுக்க சுங்க இலாகாவினரும், வருவாய் புலனாய்வுத்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தங்கம் கடத்தல் குறைந்தபாடில்லை. சுங்க இலாகா மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதால் தான் தங்கம் கடத்தல் நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கோழிக்கோடு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் சிக்கினர். அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கடத்தல் தொடர் கதையாகவே உள்ளது.

    இந்நிலையில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கூடுதல் நடவடிக்கையாக அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கோழிக்கோடு விமான நிலைய சூப்பிரண்டுகள் ஆஷா, கணபதி, இன்ஸ்பெக்டர்கள் யோகேஷ், யாசர் அராபத், சுதீர் குமார், நரேஷ் குலியா, மினிமோள் மற்றும் காவலர்கள் அசோகன், பிரான்சின் ஆகிய 9 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • திருமங்கலம் அருகே காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல்காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் தீப்பந்தம் ஏந்தி ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்தது தவறு என கண்டித்து கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் திருமங்கலம் வட்டார தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிக்குமார், உலகநாதன், கள்ளிக்குடி வட்டார தலைவர்கள் பாண்டியன், தளபதி சேகர், கரிசல்பட்டி கிராம கமிட்டி முருகேசன், மணிகண்டன், மாவட்ட செயலாளர் ஆலம்பட்டி ராசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இரவில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்தது ஏற்கத்தக்கதல்ல என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
    • மதுரையில் நடந்த வைகை இலக்கிய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரையில் இன்று வைகை இலக்கிய திருவிழா நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாலை கடைந்தால் வெண்ணை வரும். தமிழை கடைந்தால் தமிழர்கள் வருவார்கள். கூடல்நகரம் வரலாற்று சிறப்பு மிகுந்த நகரம். பொன் நகரம். இது தமிழனின் அடையாளம்.

    மதுரையை தாமரைப்பூ வுடன் ஒப்பிடு வார்கள். இது உலகை ஈன்ற மண். நான் இந்த மதுரை மண்ணில் பிறந்தேன் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை உண்டு. தமிழை நம்பு, அது உன்னை எப்போதும் கைவிடாது. மற்ற மொழிகளுடன் உங்களின் உறவு என்பது வயிற்று உறவாக இருக்க வேண்டும். ஆனால் தமிழுடன் நீங்கள் கொண்டு உள்ள உறவு தொப்புள் கொடி உறவாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து வைரமுத்து நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன். எதிரியை களமாட விட வேண்டும். அதுதான் ஒரு போர் வீரனுக்கு அழகு. எதிராளிவுடன் நேருக்கு நேர் மோதி வெல்ல வேண்டும். அதனை விடுத்து எதிரியின் வாளை பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. எதிராளிக்கான களம் மறுக்கப்படக்கூடாது என்று தெரிவித்தார்.

    • தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
    • பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 6 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படியும் தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா வழிகாட்டுதலின் படியும் சிவகங்கை மாவட்டத்தில் 3 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நீதிமன்றங்களில் போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதிகள் சுந்தரராஜ், கீதா, வக்கீல்கள் ராமலிங்கம், சவுந்திரபாண்டியன், குருமூர்த்தி. சேது ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 102 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 6 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை வழக்கா டிகளுக்கு கிடைத்தது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் தலைவர் பதவி நீக்கப்பட்டார்.
    • ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    விருதுநகர்

    நரிக்குடி பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் நம்பிக்கையில்லாத தீர்மானம் அடிப்படையில் தலைவராக இருந்த பஞ்சவர்ணம் பதவியை இழந்தார். கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் மொத்தமுள்ள 14 இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 6 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வென்றனர்.

    சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பஞ்சவர்ணம் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். மற்றொரு சுயேட்சை தி.மு.க., அ.தி.மு.க. இருதரப்பிலும்இடங்கள் சரிசமமாக இருந்த நிலையில் குலுக்கல் முறையில் பஞ்சவர்ணம் பஞ்சாயத்து யூனியன் தலைவரானர்.

    கடந்த 8 மாதங்களாக யூனியன் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் முந்தைய 3 கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வரதா உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய பஞ்சவர்ணம் முடிவு செய்ததாக தெரிகிறது.

    இதையடுத்து நேற்று அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவருக்கு எதிராக அ.தி.மு.க. உறுப்பினர்கள் உட்பட 12 பேர் வாக்களித்தனர். ஆதரவாக ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே வாக்களித்தார்.

    இதனால் பஞ்சவர்ணம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    • பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு
    • 2 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மன்னர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவிக்கு கவுர விரிவுரையாளர் முத்துக்குமரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முத்துக்குமரனை கல்லூரியில் மாணவர்கள் சிலர் தாக்க முயன்றதுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் திருச்செல்வத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உதவி பேராசிரியர்கள்  6பேர் கொண்ட விசாரணை குழுவை கல்லூரி முதல்வர் அமைத்தார். அந்த குழு அளித்த விசாரணை அறிக்கையின்படி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டதாக கவுரவ விரிவுரையாளர்கள் முத்துக்குமரன், கலையரசன் ஆகியோரை கல்லூரி முதல்வர் திருச்செல்வம் பணி நீக்கம் செய்தார்.


    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
    • அங்கு மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. கல்லூரியின் முதல்வராக பங்காரு (பொறுப்பு) இருந்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

    மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் அரசியல் கட்சியினர் அவரைப் பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம், கல்லூரி முதல்வர் பங்காருவை உயர்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    • உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • 56 ஊழி யர்களை பணி நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி மற்றும் திருமந்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இந்த சுங்கச்சா வடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு நிலைகளில் பணி ரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாஸ்ட் ட்ரேக் என்னும் நவீன முறை அறிமுகப்ப டுத்தப்பட்டு, சுங்க கட்டணம் வசூல் செய்துவருகின்றனர். இதனால் ஆட்களை குறைப்ப தற்காக நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால், 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த 56 ஊழி யர்களை பணி நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதை கண்டித்து கடந்த அக்டோபர் மாதம் 01-ந் தேதி முதல் தொடர்ந்து இன்று 60-வது நாளாக பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் மாநில, மத்திய அரசுகள் இது வரை இவர்களின் போராட்ட த்தைப் பற்றி சிறிதும் கவலை ப்படாமல் செவி சாய்க்கா மல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செய லாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான குமரகுரு தலைமையில், முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், உளுந்தூ ர்பேட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு சுங்க ச்சாவடி ஊழியர்க ளுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவர்களை பணியில் அமர்த்த வேண்டியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தும் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை. ஆகையால் 28 பேரை தவிர மற்ற ஊழியர்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்
    • மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    திருச்சி:

    அந்தநல்லூர் ஒன்றியம் , மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி , குடிநீர் வரி , தொழில் வரி மற்றும் பலவகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது . இதுகுறித்து உறுப்பினர்கள் கலெகடருக்கு அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கலெக்டர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார் அதில் , மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து செலவுச் சீட்டுகள் இல்லாமலும் , உரிய ஆவணங்கள் இன்றியும் , போலியான ரசீதுகள் மூலம் ரூ l.74 லட்சம் கையாடல் செய்து முறைகேடு நடந்துள்ளது.

    ஊராட்சி தலைவராக பதவி ஏற்ற போது எடுத்த உறுதிமொழியினை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டு உள்ளதால் இக்குறைகளுக்கு விளக்கம் கோரப்படுகிறது. 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 203 ன் கீழ் ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிக்கப்பட்டது. உரிய விளக்கம் அளிக்காததால் 205 ன் கீழ் ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கு புறம்பானதாகவும் , பொது மக்களுக்கும் பொது நிதிக்கும் அரசு நிதிக்கும் தொடர்ந்து ஊறு விளைவிக்கும் விதமாக அமையும் என்பதால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொது நலன் கருதியும் திருச்சி மாவட்டம் , அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த மல்லியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவா விகனேஷ்வரன் என்பவரை 1994 ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 , உட்பிரிவு 11 - ன்படி , 15.11.2022 முதல் மலலியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என அந்த கடிதத்தில் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

    ×